வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெறும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய “படையாண்ட மாவீரா” தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது. வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் “படையாண்ட மாவீரா” கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம். படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், “ரெடின்” கிங்ஸ்லி, “நிழல்கள்” ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா தலைவாசல்” விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடித்திருக்கிறார். மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இசை…
Read MoreCategory: சினிமா செய்திகள்
முதல்வர், துணை முதல்வருக்கு மனம் உருகி நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்
*பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!* உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்! வேட்டிக் கழண்டாதான் மானம் போகனும்னு அவசியமில்லே…. ஒரு கலைஞனுக்கு அந்த வருஷத்தில படமே வரலேன்னாலும்,வந்த படம் சரியாப் போகலைன்னாலும், உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னாலும் மானம் மட்டுமில்லே ஒட்டிகிட்டே மரியாதையும் கூடவே போயிடும். 20 மாசமா மனசு கர்ப்பமாவே இருக்கு, என் இயக்கப் படம் வரலைங்கிற பாரத்தோட… இந்த அறிவிப்பு மானம் போகாம இடுக்கண் களைந்த நட்பாய் கண்களில் நீர் கோர்த்த பரவசத்தோட, சுவாசத்தை சுவாரஸ்யமா மாத்தியிருக்கு,நம்பிக்கை தசையை ஏத்தியிருக்கு, தித்திப்பை திசையெங்கும் கூட்டியிருக்கு. நன்றி சொல்ல நா வரண்டுப் போனதால , எழுதி சமாளிக்க ஏதுவான வார்த்தையை வானத்தில கண்கள் தேடிகிட்டிருக்கு. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந்த குதிரைகளோடு பந்தயத்தில்…
Read Moreமாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி – கருணாகரன்
தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் – தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் என்…
Read MoreSalute to Mothers – 15வது ஆண்டு விழா -சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் Salute to Mothers நிகழ்ச்சி, இந்த ஆண்டும் தாய்மையின் மகத்துவத்தை போற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. தாயை ஒரு உறவாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் சமூக மதிப்பாகவும் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் அர்த்தமுள்ள சமூக விழாவாக அமைந்தது. நிகழ்ச்சிக்கு பத்மபூஷன் திரு நல்லி குப்புசாமி செட்டி, பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் வி. காமகோட்டி, திரு ராமதாச ராவ் மற்றும் பத்மஸ்ரீ எழுத்தாளர் திருமதி சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். இந்த ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் வி. காமகோட்டி மற்றும் திருமதி சிவசங்கரி ஆகியோர் இணைந்து கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சியாக இது அமைந்ததால், நிகழ்ச்சியின் பெருமையும்…
Read MoreZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில் வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமே “சிறை”…
Read Moreடஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!
பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன்பு வெளியான புதுமையான மற்றும் தரமான படங்கள் எல்லைகள், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அனுஷ்கா ஷெட்டியின் ‘அருந்ததி’, கல்யாணி பிரியதர்ஷனின் ’லோகா: சாப்டர்1’ போன்ற படங்கள் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவை. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உருவாகிறது ’வெள்ளகுதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமாரின் ’மண்டவெட்டி’ திரைப்படம். கோமலி பிரசாத் நடிக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 28) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனத்தில், சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரிக்கும் இந்த படம் காட்சியமைப்பிலும் கதை சொல்லலிலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். ’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல்…
Read More“ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’” – இயக்குநர் திரவ்!
மனதை தொடும் நல்லுணர்வுகளுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை திரையில் காட்ட இருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம் கிஷோர் நடிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுப்பூர்வமான மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான பல மகிழ்வான தருணங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை திரவ் எழுதி இயக்கியுள்ளார். பட அனுபவம் பற்றி இயக்குநர் திரவ் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் உள்ளே மறைத்து வைத்திருக்கும் திறமையையும் ஆசையையும் தங்களுடன் இணைத்து பார்க்கும்படியான திரைப்படம் தான் ‘மெல்லிசை’. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பொறுப்பு, சுமைகள், கட்டுப்பாடுகள் காரணமாக இவற்றை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. இசையை உயிராக நேசித்த ஒருவன் குடும்ப பொறுப்பு காரணமாக தனது கனவுகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கிறான்.…
Read More“ஆகாசம்லோ ஒக்க தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!
துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக்க தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார். Geetha Arts & Swapna Cinema வழங்க, சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக “ஆகாசம்லோ ஒக்க தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும் தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து, புகழ் பெற்ற பவன் சடினேனி ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப்…
Read MoreSTR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – சிம்புவின் “சிலம்பாட்டம்” பிப்ரவரி 6 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது!
STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிலம்பாட்டம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்ஷன்–மாஸ் படம், சிம்புவின் கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து இரட்டை வேடங்களில் சிம்பு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தாயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர்கள் ஆதரவும் பெற்ற “சிலம்பாட்டம்”, காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி – படத்தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் “தமிழரசன்”…
Read Moreநடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும், இதுநாள் வரை ‘VD 14’ என அறியப்பட்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ’ரணபலி’ என இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது. சபிக்கப்பட்ட நிலத்தையும் அதன் கதாநாயகனையும் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை தீவிரமான காட்சிகளுடனும் வலுவான கதை சொல்லலுடனும் படத்தின் கிளிம்ப்ஸில் காண முடிகிறது. குறிப்பாக, சர் ரிச்சர்ட் டெம்பிள் போன்ற அதிகாரிகளின் கீழ் திட்டமிட்டு வறட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகள் மனதை உருக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளன. ஹிட்லரின் இனப்படுகொலையை விட மோசமான கொலைகள், இந்தியாவின் பொருளாதார சுரண்டல் போன்ற வரலாற்று உண்மைகளை உணர்வுப்பூர்வமாகவும் வலுவாகவும்…
Read More