“பெங்களூர் மெட்ரோவில் பிறந்தநாள் கொண்டாட்ட மரியாதை பெற்ற முதல் நடிகர் – ராக்கிங் ஸ்டார் யாஷ் !! பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர் யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர். வரும் ஜனவரி 8 அன்று நடிகர் யாஷ் பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒரு நடிகருக்கான பிறந்த நாள் களமாக மாறியது. வழக்கமான பயணமாகத் தொடங்கிய ஒரு மெட்ரோ பயணம், அந்த நாளில் ஒரு கலாச்சார…
Read MoreCategory: சினிமா செய்திகள்
“வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி!
வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ்தான். ‘பராசக்தி’ படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. ஸ்ரீலீலாவும் உற்சாகமான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீலீலாவின் திறமையான நடிப்பும் நடனமும்…
Read More‘ஹால் (Haal)’ திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் திரையிடல் மறுப்பு – PVR Cinemas மீது CCKTDFD-க்கு அதிகாரப்பூர்வ புகார்
புகார் அளித்துள்ளவர், தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராகவும், CCKTDFD அமைப்பின் செயலில் உள்ள விநியோகஸ்தர் உறுப்பினராகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையின் நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து முழுமையான அறிவுடன் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘ஹால்’ திரைப்படம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள PVR திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், வர்த்தக ரீதியாக திருப்திகரமான வசூலையும் பெற்றுவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் திரையிடல் மறுக்கப்பட்டிருப்பது கேள்விக்குறியாகியுள்ளது. பலமுறை தொடர்புகொண்டும், நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், PVR தமிழ்நாடு நிர்வாகம் எந்தவொரு திரையிடலையும் வழங்க மறுத்துள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, PVR தமிழ்நாடு நிரலாக்க பொறுப்பில் உள்ள திரு. பாலு, பேச்சுவார்த்தைகளின் போது மிகுந்த தொழில்முறைமையற்ற மற்றும் மரியாதையற்ற அணுகுமுறையைக் காட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. “நான் முடிவு செய்தால் மட்டுமே ஒரு படம் தமிழ்நாட்டில்…
Read More“சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, கனவுகள் மற்றும் உண்மையான உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’”- நடிகர் கிஷோர்!
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும். இந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘மெல்லிசை’ இணைய உள்ளது. பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார். அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை ’மெல்லிசை’ பேசுகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான்…
Read Moreயாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்திலிருந்து, மெலிசா (Mellisa) பாத்திரத்தில், ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக திரையில் தோன்றுகிறார். இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது, முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற ருக்மிணியின் அறிமுகம், கீதுவின் உணர்வுப்பூர்வமான, கதைசொல்லலுக்கும், உலகத் தரத்திலான இந்திய திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற யாஷின் கனவுக்கும் வலுவான அடையாளமாக இருக்கிறது. முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா…
Read Moreதொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவி தலைமையிலான கண்ணன் ரவி குழுமத்திற்கு சொந்தமான ‘பாந்தர்ஸ் ஹப் & ஐந்திணை உணவக’த்தை திறந்து வைத்த பாலிவுட் கிங் கான் ஷாருக்கான்!!
தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்டமான மாநகரமான துபாயை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் கண்ணன் ரவி குழுமம் – துபாய்க்கு வருகை தரும் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள்- சுற்றுலா பயணிகள்- விருந்தினர்கள்- நண்பர்கள்- ஆகியோரின் வணிக ரீதியிலான மற்றும் நட்பு ரீதியிலான சந்திப்புகளை மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகளாக மாற்றி அமைக்கும் வகையில் பிரத்யேக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் ‘பாந்தர்ஸ் ஹப் ‘ ( Panthers Hub) எனும் பொழுதுபோக்கு மையம்- ATK 2 ஐந்திணை உணவகம் ஆகியவற்றை நேர்த்தியான கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர். இதனை கடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான அறிமுக விழாவில் பாலிவுட் திரையுலகின் கிங் கான் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக…
Read Moreதிரையில் ஒரு துணிச்சலான சினிமா முயற்சி: காந்தி டாக்ஸ்
Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மௌனத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ள “காந்தி டாக்ஸ்”, வசனங்கள் ஏதுமின்றி, மௌனமே கதையை சொல்லும், மிக வலுவான ஒரு துணிச்சலான படைப்பாக உருவாகியுள்ளது. சினிமா பெரும்பாலும் பிரமாண்டம் மற்றும் ஒலியால் உருவாக்கப்படும் இக்காலகட்டத்தில், “காந்தி டாக்ஸ்” அதிலிருந்து மாறுபட்டு, உணர்ச்சி மற்றும் அமைதியைத் தனது மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தப் படம், தனது கருத்தை வெளிப்படுத்த சத்தமின்றி, உணர்வோடு, நிசப்தமாக பேசுகிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு…
Read Moreசிறை பட நடிகர் ரகு இசக்கிக்கு நடிகர் சூரி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’. பத்திரிக்கையாளர்கள் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிறை திரைப்படத்தில் நாயகியின் அக்கா கணவராக கோவிந்தராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நடிகர் ரகு இசக்கி.. பாலு மகேந்திரா சினிமா பட்டறை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஆதிசக்தி தியேட்டர்ஸ் ஆகியவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றவர் நடிகர் ரகு இசக்கி. நடிகர் விவேக் முதன்முறையாக சீரியசான கதாபாத்திரத்தில் நடித்த ‘நான்தான் பாலா’ என்கிற படத்தில் தான் அறிமுகமானார் ரகு இசக்கி. ஆனாலும் விஜய்சேதுபதியின் தம்பியாக தர்மதுரை படத்தில் நடித்த பிறகுதான் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமானார். தர்மதுரையில் விஜய்சேதுபதியின் கடைசி தம்பியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னர் பூஜை, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், யாதும் ஊரே…
Read Moreவீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமான வாழ்க்கை பதிவு!!
இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், சிவகங்கை அரசியாகவும் இந்தியாவின் முதல் பெண்சுதந்திரப் போராளிகளில் ஒருவராகவும் திகழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமான வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. அவரது கணவர் முத்துவடுகநாத தேவர், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கொல்லப்பட்ட பிறகு, வேலுநாச்சியார் துன்பத்துக்கு அடங்காமல் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்குகிறார். போர்க்கலை, ஆயுதப் பயிற்சி மற்றும் அரசியல் தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற அவர், ஹைதர் அலி மற்றும் டிப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து, பெண்களால் உருவான சக்திவாய்ந்த படையை உருவாக்குகிறார். குயிலி என்ற வீரமங்கை மேற்கொண்ட தியாகச் செயல் மூலம் சிவகங்கையை மீட்டெடுக்கும் வரலாற்றுச் சம்பவம் திரைப்படத்தின் முக்கிய அம்சமாகும். இந்தக் கதை, தைரியம், தியாகம், தலைமைத் திறன் மற்றும் பெண்சாதிகானத்தின் அடையாளமாக வேலுநாச்சியாரை உயர்த்திக் காட்டுகிறது.
Read MoreTHALAIVAR173 – இயக்குநர் அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படமான ‘#THALAIVAR173’ படத்தினை இயக்கும் இயக்குநரை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிக்கும், இந்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். #THALAIVAR173 திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று பிரம்மாண்டமான வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Read More