ஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.!!

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பித்திருப்பதாக படக்குழுவினர் அறியத்தருகின்றனர். அந்தோனி திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். திரு.இரமணன் அவர்கள் இத்திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணிபுரிகின்றார். மற்றும் இணை தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ்) ஆகியோர் இணைந்து கொண்டிருக்கின்றார்கள். கயல் திரைப்பட நடிகர் “கயல் வின்சன்ட்” அவர்களும், சினிமா உலகில் தனக்கென தனி…

Read More

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் மலேசிய விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளது

டத்தோ அப்துல் மாலிக் அவர்களின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, பிளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பிரபலமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான கூலியின் மலேசிய திரையரங்க விநியோக உரிமைகளைப் பெற்றுள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசையை சென்சேஷனல் அனிருத் இசையமைத்துள்ளார், இது இந்த சக்திவாய்ந்த கூட்டணிக்கு மேலும் உற்சாகமான அம்சத்தை சேர்க்கிறது. தங்களின் தைரியமான மற்றும் தாக்கமுள்ள வெளியீடுகளுக்குப் பெயர் பெற்ற மாலிக் ஸ்ட்ரீம்ஸ், மலேசியாவில் கூலி திரைப்படத்திற்காக இதுவரை இல்லாத புதிய விளம்பர பிரச்சாரத்தை திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதுமையான உத்திகள் மற்றும் உயர் தீவிரமான சந்தைப்படுத்தல் முயற்சிகளை நிறுவனம் வெளியிடத் தயாராக உள்ளது. இந்த கூட்டணி மாலிக் ஸ்ட்ரீம்ஸிற்கு மற்றொரு மைல்கல்லாக…

Read More

Grammy விருது பெற்ற Nine Inch Nails இசைக்குழுவின் புதிய பாடலுடன் ட்ரெய்லர் அறிமுகமாகிறது

டிஸ்னியின் புரட்சி செய்த TRON திரைப்படத் தொடர்களின் மூன்றாவது பகுதியாக உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற ‘TRON: ஏரிஸ்’ படத்தின் புதிய மொழி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம், 1982ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் வழிகாட்டி விஞ்ஞானத் திரைப்படமான TRON மற்றும் 2010ஆம் ஆண்டு வெளியான அதன் தொடர்ச்சியான TRON: Legacy ஆகியவற்றுக்குப் பிந்தையதாகும். இந்தப் படம் 2025 அக்டோபர் 10 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. TRON: ஏரிஸ் திரைப்படம், ஏரிஸ் எனப்படும் ஒரு உயர் நுட்பம் கொண்ட நிரல்நிரலைப் பற்றியது. அவர் டிஜிட்டல் உலகத்திலிருந்து உண்மையான உலகிற்குள் ஒரு அபாயகரமான பணிக்காக அனுப்பப்படுகிறார். இதன் மூலம், மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு உயிரினங்களுக்கும் இடையே முதல் முறை நேரடி தொடர்பு உருவாகிறது. இந்த புதிய ட்ரெய்லரில், Grammy விருது…

Read More

மான் விழி… பாவ்யா த்ரிகா!

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா, தமிழ் சினிமாவில் நிதானமான நடிப்பும், அழகான தோற்றத்தையும் கொண்ட நடிகையாக மெருகேறி வருகிறார். 1.65 மீ (5 அடி 5 அங்குலம்) உயரமும், சுமார் 55 கிலோ எடையும் கொண்ட பவ்யாவின் நேர்த்தியான உருவம் மற்றும் அழகு ஊடகங்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.    சென்னையின் M.O.P. வைஷ்ணவக் கல்லூரியில் ஊடகக் கல்வி முடித்த பவ்யா, 2022-ல் தினேஷ் பாலனிவேல் இயக்கிய ‘கதிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், 2023-ல் ரியோ ராஜ் ஜோடியாக நடித்த ‘ஜோ’ படத்தில் “ஸ்ருதி” என்ற கதாபாத்திரம் மூலம் அவர் பரவலான கவனம் பெற்றார். 17 முதல் 27 வயதுக்குட்பட்ட கேரளா–தமிழ்நாடு எல்லைக் கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த காதல் படம் 2023 நவம்பர் 24…

Read More

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், ‘ச்சீ ப்பா தூ…’ சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !!

சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது. இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன்…

Read More

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்து ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா பேனரின் கீழ் இயக்க இருக்கிறார். இந்த அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக ஹிட் படங்களை பல ஜானரில் கொடுத்து வருபவர் இயக்குநர் ஜோஷி. தேசிய விருது வென்ற ‘மேப்படியான்’ மற்றும் ரூ. 100 கோடி வசூலித்த ஆக்‌ஷன் திரைப்படமான ‘மார்கோ’ என மலையாள சினிமாவின் வணிகத்துக்கு புதுவரையறை கொடுத்ததை அடுத்து இயக்குநர் ஜோஷியுடன் இணைவதன் மூலம் UMF தனது தரத்தை மேலும் மேம்படுத்துகிறது. ‘பொரிஞ்சு மரியம் ஜோஷ்’, ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற படங்களில் தனது வலுவான கதாபாத்திர வரையறை மற்றும் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர்- இயக்குநர் அபிலாஷ் என். சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார்.…

Read More

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாகக் களமிறங்கும் “PRK Productions” தயாரிப்பு நிறுவனம் !!

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். புதிதாகக் கால் பதித்திருக்கும், “PRK Productions” நிறுவனம் வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும், நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் துவங்கிய இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு ஆர் கே செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் திரு குமார், நடிகர் திரு யோகிபாபு, இயக்குநர் திரு சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குனர்…

Read More

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் வேண்டுகோள்

“ஒரே நாளில் 10 படங்கள் வெளியாவதை  தடுக்க நடவடிக்கை எடுங்கள்…” ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. ரெட் ஃப்ளவர் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது: ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸின் முதல் மற்றும் மிக பிரமாண்டமான தயாரிப்பு இந்த ரெட் ஃப்ளவர். மேடையில் இருப்பவர்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் அல்ல, இங்கு வந்திருக்கும் எல்லோருமே என்னுடைய சிறப்பு விருந்தினர்கள்…

Read More

நடிகை ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்

‘பரதேசி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா ‘மெட்ராஸ்’ படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார். ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன்,ஓநாய்கள் ஜாக்கிரதை, இரண்டாம் உலகப்போரும் கடைசி குண்டும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகை என்று பாராட்டு பெற்ற ரித்விகா, தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ரித்விகாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத் லக்‌ஷ்மண் என்பவரை ரித்விகா மணக்க உள்ளார். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகும். சமீபத்தில் நடைபெற்ற ரித்விகா – வினோத் லக்‌ஷ்மண் நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டார்கள். ரித்விகா – வினோத் லக்‌ஷ்மண் திருமண தேதி…

Read More

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப நகைச்சுவைத் திரைப்படம்! “வசூல் மன்னன் “

நகைச்சுவை படங்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பார்கள். காமெடியில் கலக்கிய, வசூலை குவித்த , மக்களின் மனதை கொள்ளை கொண்ட படங்கள் ஏராளம். மக்களால் ரசித்து சிரித்து கொண்டாடப்பட்ட படங்கள் வரிசையில் இன்று நம் கவலைகளை மறந்து சிரித்து மகிழ ஒரு படம் உருவாகி உள்ளது. தயாரிப்பாளர் ஆறுமுகம் மாதப்பன் தனது எம். எல். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதல் படமாக உருவாக்கி உள்ள “வசூல் மன்னன் ” படம் தான் அது. கன்னக்கோல் படத்தை எழுதி இயக்கிய வேல் குமரேசன் தனது இரண்டாவது படமாக வசூல் மன்னன் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தைப் பற்றி வேல் குமரேசன் கூறும்பொழுது, “ஒருவன் தன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது என்பதை இப்படத்தின் மையக் கருவாக…

Read More