கிராமங்களில் ‘கடுக்கா’ கொடுத்து விட்டான் என்ற சொலவடை பிரபலம். சிலர் நம்ப வைத்து ஏமாற்றுவார்கள். அப்போது ஏமாந்தவர் விரக்தியாக, :அட கடுக்கா குடுத்துட்டு போய்ட்டான்பா’ என்பார்கள். நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் என்ற பெயரில் உடலுக்கு நல்லது செய்கிற ஒரு மருந்தும் உண்டு. இந்த படம் ஏமாற்றுகிற கடுக்காயா? அல்லது உடலுக்கு நலம் சேர்க்கும் நாட்டு மருந்துகளில் ஒன்றா? வாருங்கள் பார்க்கலாம். படத்தின் நாயகன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் ஊர் சுற்றி திரிபவன். ஊரின் பிரதான பஸ் ஸ்டாப்பில் நின்றபடி பஸ்ஸில் பயணிக்கிற இளம் பெண்களை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்வான். மீதமிருக்கும் நேரங்களில் கிராமச் சாவடிகளில் ஊர் பெரிசுகளோடு தாயக்கட்டை ஆடுவது உண்டு. இதனால் சொந்த ஊரிலேயே உதவாக்கரை என்று பெயர் எடுத்த நமது நாயகன் அது பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ‘தானுண்டு…
Read MoreCategory: விமர்சனம்
வீர வணக்கம் – திரை விமர்சனம்
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி யாளருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாற்றை நெஞ்சம் நெக்குருக தந்திருக்கிறார்கள். தமிழக கிராமம் ஒன்றின் பெரிய மனிதர் பரத், கம்யூனிசவாதியாக இருக்கிறார். ஊர் மக்களுக்கு சாதி மத பேதம் பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பதோடு, அம்மக்களை பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார். அப்போது 97 வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறார். அவர் மூலம் கேரளாவில் கம்யூனிச புரட்சி உருவாகி, எப்படி விஸ்வரூபம் எடுத்தது என்பதை கவனம் ஈர்க்கும் விதத்தில் தந்திருப்பது சிறப்பு. 1940- ல் தொடங்கும் கதை 1946…
Read Moreநறுவீ – திரை விமர்சனம்
கல்வியின் அவசியம் குறித்த படம். இங்கே நறுமணமே கல்வி தான். மலைப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியர் அந்த அறியாமை மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு என்னவாகிறார் என்பது படத்தின் ஒருவரிக் கதை. அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் வந்திருக்கிறார்கள் . குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் வருகிறார். இந்த குழு குன்னூர் மலையை தொட்டதும் அவர்களுக்கு நிறைய அமானுஷ்ய அனுபவங்கள் கிட்டுகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பதிலாக ஒரு சோக கதையையும், ஒருவரது சேவை மனப்பான்மையும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் கல்வியின்மையும் தொட்டுப் பயணிக்கிறது திரைக்கதை. பன் பட்டர் ஜாம் படத்தில் நகைச்சுவையில் கலக்கியிருந்த VJ பப்பு, இதிலும் படத்தை கல கலப்பாக வைக்க உதவுகிறார். மருத்துவம்…
Read Moreஇந்திரா – திரை விமர்சனம்
குடித்து விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக போலீஸ் அதிகாரி இந்திரகுமார் பணியிடை நீக்கம் செய்யப்படு கிறார்.அதனால் மன அழுத்தம் அதிகமாகி மேலும் குடிக்கிறார். இதனால் காதல் மனைவி கயலின் வெறுப்புக்கும் ஆளாகிறார். ஒரு கட்டத்தில் குடியே அவரது கண் பார்வை போகவும் காரணம் ஆகிறது. இதன் பிறகு மனைவியிடம் மன மாற்றம். கண்ணாக இருந்து கணவனை தாங்குகிறார். இந்த நிலையில் மனைவி கயல் ஒரு நாள் பூட்டிய வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்படுகிறார். வேலை போய் கண் பார்வையும் போய் தனது காதல் மனைவியும் கொலை செய்யப்பட்ட நிலையில், தாங்க முடியாத மன அழுத்தத்தில் தவிக்கிறார் இந்திரகுமார். தன் மனைவியைக் கொன்றவனை கண்டுபிடித்து பழி வாங்கத் துடிக்கிறார். பூட்டிய வீட்டுக்குள் இந்திர குமாரின் மனைவி கொலை என்றதும் போலீசின் சந்தேகப் பார்வை இந்திரகுமார் மீது திரும்புகிறது.…
Read Moreகூலி – திரைவிமர்சனம்
சென்னையில் ஆண்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வருகிறார் தேவா ( ரஜினி). ஒரு நாள் விசாகப்பட்டினத்தில் இருக்கும் அவரது உயிர் நண்பன் ராஜசேகர் ( சத்யராஜ் ) இறந்து விட்டதாக செய்தி வருகிறது. துக்கம் விசாரிக்க விசாகப்பட்டினம் விரைகிறார். அங்கே சென்றபோது தான் சத்யராஜ் இயற்கையில் மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தை தன் ஆளுமைக்குள் வைத்துக்கொண்டு கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் சைமன் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவன். தன் நிர்வாகத்தில் யார் தப்பு செய்தாலும் மரணம் நிச்சயம். அதற்கேற்ப ஆரம்பத்திலேயே கூலித் தொழிலாளி காளி வெங்கட்டை தூக்கில் தொங்க விடுகிறார்கள். ( போலீஸ் உளவாளியாம். அதனால் இந்த கொடூர தண்டனை) இந்த மாதிரி கொல்லப்பட்டவர்களின் பாடியை அங்கே…
Read Moreநாளை நமதே – திரை விமர்சனம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்குள் அடங்கி ஒடுங்கி கிடக்கிறது ஒடுக்கப்பட்ட சமூகம். ஆதிக்க சாதி வைத்தது தான் அந்த ஊரின் எழுதப்படாத சட்டம். அவர்களில் ஒருவரே பஞ்சாயத்து தலைவராகவும் இருப்பார். இந்நிலையில் இந்த தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்கிறது அரசு. அக்கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டால் நடப்பதே வேறு என மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருமான தாத்தாவை தேர்தலில் நிற்கும்படி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அதை ஏற்று வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் வழியில் ஆதிக்க சாதியினரால் கொல்லப்படுகிறார். அவருடன் சென்ற வர்களும் உயிர் இழக்கிறார்கள். அதோடு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவரையும் கொன்று எரித்து,…
Read Moreகாத்து வாக்குல ஒரு காதல் -திரை விமர்சனம்
காதல் படம். அதை வெட்டு குத்து கத்தி வகையறாக்களுடன் சொல்லி இருக்கிறார்கள். மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உருகி உருகி காதலிக்கிறார்கள். இந்நிலையில், நாயகன் மாஸ் ரவி திடீரென்று காணாமல் போய் விடுகிறார். அவரைத் தேடி அலைகிறார் நாயகி. மாஸ் ரவியை மீண்டும் லட்சுமி பிரியா பார்க்கும்போது அவர் ஒரு மாஸ் ரவுடியாக இருக்கிறார். காதலியைத் தெரியாதவர் போல் கடந்து போகிறார். நாயகனின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணி என்ன? நாயகியின் காதல் என்னவானது? கேள்விகளுக்கான விடை, எதிர்பாராத கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, உருகி வழியும் காதலன், அடிதடிக்கு அஞ்சாத காதகன் என இரண்டு மாறுபட்ட நிலைகளிலும் நடிப்பில் தனித்தனி கொடியேற்றி இருக்கிறார். படத்தை இயக்கியவரும் இவர் தான். இயக்கத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. ஆனால் நடிப்பில் தேர்ந்த அனுபவம் தெரிகிறது.…
Read Moreமீஷா – திரை விமர்சனம்
சாதிய பாகுபாடு மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் கட்சிகள் எப்படி ஆதாயம் தேடிக் கொள்கிறது என்பதை இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு சொல்லி இருக்கிறார்கள். வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். கல்லூரி பருவத்தில் அரசியல் கட்சி ஒன்றில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த கட்சியோ மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை தடுத்து, அதன் மூலம் ஆதாயம் தேடுவதை அறிந்து கொள்ளும் கதிர், கட்சியை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். இது கட்சிக்கு பொறுக்குமா? கதிரை வீழ்த்த கட்சி விரிக்கும் சதி வலையில், அவனது இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் நண்பர்கள் வாழ்க்கை என்னவானது? கதிர் என்னவாகிறான்? என்பதை இதயம் தடதடக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள். கதிருக்கு மலையாள சினிமாவில் இது…
Read Moreசென்னை பைல்ஸ் முதல் பக்கம் – திரை விமர்சனம்
நகரத்தில் ஒரே ஸ்டைலில் நடக்கும் தொடர் கொலைகள் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. இந்த கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுக்கு வந்து சேர்கிறது. இது விஷயத்தில் அவருக்கு துப்பறிய உதவுகிறார் வெற்றி. இவர் யாரென்றால் காலஞ்சென்ற பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவரின் மகன். இவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரிக்க விரும்பிய ஒரு பத்திரிகை, இவரை சென்னையில் உள்ள தனது பத்திரிகை அலுவலகத்திற்கு அழைக்க… வந்த வேலை முடிந்து கிளம்பும்போது, இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த தொடர் கொலை விஷயத்தில் தம்பி ராமையாவுக்கு வெற்றி சில ஆலோசனைகளை சொல்லப் போக… அத்தனையும் சரியாக இருப்ப தோடு கொலைகாரனை நெருங்கவும் உதவுகிறது. கொலையாளியை கண்டு பிடித்தார்களா? தொடர் கொலைகளுக்கான நோக்கம் என்ன? என்பது மீதிக் கதை. நாயகனாக…
Read Moreஅக்யூஸ்ட் – திரை விமர்சனம்
சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு கொலை வழக்கில் கைதான கணக்கு (உதயா) என்கிற கைதியை போலீஸ் வேனில் அழைத்துப் போகிறார்கள். அவனை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போலீசாரில் வேந்தனும் ஒருவன். இந்த பயணத்தில் கணக்கை கொல்ல ஒரு ரவுடி கூட்டம் துரத்துகிறது. இன்னொரு பக்கம் உயர் போலீஸ் அதிகாரி தரப்பிலும் சேலம் போவதற்குள் கணக்கின் கணக்கை முடிக்க உத்தரவிடுகிறார். இருதரப்பு கொலை முயற்சியில் இருந்தும் கணக்கு தப்பினானா…யார் இந்த கணக்கு? என்ற கேள்விக்கு பரபரப்பும் விறுவிறுப்பும் இணைந்த திரைக்கதை பதில் தருகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, அவ்வப்போது பிளாஷ்பேக் மூலம் சொல்லும் திரைக்கதை உத்தியே அடுத்தடுத்த காட்சிகளை சுவாரசியமாக்கி விடுகிறது. கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும் துறுதுறுப்புமாக படம் முழுக்க வருகிறார். காதல் காட்சிகளில் ஒரு வெள்ளந்தியான…
Read More
