‘ பேய் இருக்க பயமேன் ‘ சினிமா விமர்சனம்

‘பேய் இருக்க பயமேன்’ சினிமா விமர்சனம். அந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள். அந்த பங்களாவுக்குள் நுழைந்ததில் இருந்தே பேய்களின் அட்டகாசம்; பயப்படுகிறார்கள். பேய்களால் இவர்களுடைய நிம்மதி பறிபோகிறது. பேய் ஓட்டுகிற சிலரைக் கூட்டிவர, பேய்கள் அவர்களைத் தெறிக்கவிடுகிறது. வெறுத்துப் போன அந்த இளம் ஜோடி, தாங்களே பேய்களை விரட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அந்த முயற்சிகள் கலகலப்புக்கு கேரண்டி தருகின்றன. பேய்ப் படங்களுக்கே உரிய அரதப் பழசான காட்சிகளால் படத்தின் முன்பாதி நிறைந்திருந்தாலும், பின்பாதியில் கதையோட்டத்தை சற்றே வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருப்பதற்காக இயக்குநர் கார்த்தீஸ்வரனுக்கு அழுத்தமான கை குலுக்கல்! இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரது அப்பாவித் தோற்றமும்…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்”

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “மலர்” டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு “திடீர் தளபதி” சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனீஷ் ஒளிப்பதிவில்…

Read More

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!.   தியேட்டர்களில் 100% மக்களை அனுமதிக்க வேண்டும்! -‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை! தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 28.12.2020 இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட கடிதத்தை வெளியிட்டனர். ‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சமர்ப்பிக்கும் கோரிக்கை விண்ணப்பம்’ என்ற தலைப்பில் விடுக்கப் பட்டிருக்கும் அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் இதோ:- எங்களது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் பொன்னான ஆட்சியில் தமிழ்த் திரையுலகம் நல்ல வளர்ச்சி நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை. தற்போதுள்ள தற்போதுள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக…

Read More

படப்பிடிப்பில் ஆர்யாவுக்கு விழுந்த பலத்த அடி

படப்பிடிப்பில் ஆர்யாவுக்கு விழுந்த பலத்த அடி.   எனிமி படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் ! விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் .படப்பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் நடைபெற்றுவருகிறது . விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் டூப் இல்லாமலால் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பின்போது ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பெற்று மீண்டும் இன்று படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார் . அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா .

Read More

New Year Wishes from Music Director Vishal Chandrasekar

New Year 2021 Wishes from Music Director Vishal Chandrasekar.   தன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்… கொரோனா காலம் வெகுவாக பாதித்த துறைகளில் சினிமாவும் ஒன்று, ஆனால் திறமை வெளிக்கொணர ஊரடங்கு ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் திரையரங்குகள் திறக்காததால் ஆன்லைன் தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ஆன்லைனில் வெளிவந்த தமிழ் வெப் சீரிஸில் , சாரு கே சேகர் இயக்கத்தில் ஜெய் , வாணிபோஜன் நடிப்பில் வெளியான “ட்ரிப்பிள்ஸ்” இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, மேலும் மறைந்த நடிகர் “கிரேஸி மோகனுக்கு” மரியாதை செலுத்தும் விதமாக இம்மாதம் இந்த வெப் சீரிஸ் வெளியானது, முழு…

Read More

Letter from Director Perrasu to Super Star Rajinikanth.

Letter from Director Perrasu ” Mim Minni Poochighal ” to Super Star Rajinikanth.     சூப்பர் ஸ்டாருக்கு மின்மினிப் பூச்சியின் கடிதம்! நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம்! இன்று அந்த ஆசையை ஆலோசிக்கிறோம்! நீங்கள் ஆன்மீக அரசியல் என்கிறீர்கள்! தமிழ்நாட்டில் அரசியல் அஸ்திவாரமே இறை இழிவுதான்! எளிமையான நேர்மையான அரசியல் காமராஜரோடு சமாதியாகிவிட்டது! நீங்கள் தமிழக விசுவாசத்தில் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்கள் இங்கு தமிழ்மொழி வேஷந்தான் போற்றப்படுகிறது! நீங்கள் யார்மனதும் புண்படாமல் பேசுபவர்! ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் உங்கள் மனசு குத்திக் கிழிக்கிப்படுகிறது! நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தோம்! அரசியலுக்கு வந்து நல்லவர் அசிங்கப்படக்கூடாது என்று இன்று நினைக்கிறோம்! ஒருசில கட்சிக்கு சில கட்சிகளே எதிர்ப்பாய் இருக்கும், இங்கு உங்களுக்கு ஒட்டுமொத்த கட்சிகளும் எதிரியாக கிளம்பிவிட்டது!…

Read More

அதிமுகவின் கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவின் கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!   அதிமுகவின் கொடிகாத்த குமரன்! கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்! எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி…

Read More

இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்

ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது. படைப்பாளிகளை பொறுத்தவரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனைகளில்…

Read More

நகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்!

“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார். நடிகர் சூரி பேசுகையில், “எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது. கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான். ‘தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்’ என நமக்கு அடிக்கடி…

Read More

காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பம்!

மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன . இதோ ஒரு புது ஆல்பமாக வந்திருப்பதுதான் “மழை சாரல் ” . இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார். ‘ காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன.  ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில்  ஒரு படத்திற்கு பாடல்களை  உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம்…

Read More