தெலுங்கு திரையுலகின் நடிகர் சங்கத்திற்கு இந்தாண்டு தேர்தல் நடத்தப்படவுள்ளது. Telugu Movie Artistes Association எனப்படும் தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தற்போது அங்கே நடிகர் நரேஷின் தலைமையில் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் முதல்நபராக அறிவித்தார். தனக்கு நடிகர்சிரஞ்சீவியின் ஆதரவும் இருப்பதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில்மூத்த நடிகரான மோகன் பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தானும் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பையூட்டினார். ஏனெனில் கடந்த இரண்டு முறைகளும் நடிகர் சங்கத்தில் பலத்த போட்டிகள் ஏற்பட்டு பலவித சர்ச்சைகள் எழுந்தன. இதனால் இந்த முறை அப்படி…
Read MoreDay: June 26, 2021
தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் தவறானது
திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடும் தொழில் நுட்பப் பணிகளைச் செய்து வரும் கியூப் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று கோரி 2018, மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் படங்களை வெளியிடப் போவதில்லை என்று தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து திரைப்பட அமைப்புகளும் முடிவு செய்து அறிவித்தன. இரண்டு முறை டிஜிட்டல் நிறுவனங்களுடன் தமிழ், தெலுங்கு,மலையாள, கன்னடசினிமா அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த முடிவை அவர்கள் எடுத்தனர். ஆனால் மறுநாளே மார்ச் 2-ம் தேதியன்று மலையாளத் திரையுலகமும், கன்னடத் திரையுலகமும் இந்த ஸ்டிரைக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர் இதற்கடுத்து மீண்டும் டிஜிட்டல் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சில சமரசங்களுடன்தெலுங்கு திரையுலகத்தினர் மார்ச் 8-ம் தேதியன்றுவேலைநிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்டனர். ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகத் தொடங்கின.…
Read Moreதெலுங்கில் இயக்குநர் லிங்குசாமி படம் இயக்க தமிழ் தயாரிப்பாளர் எதிர்ப்பு
பிரபல தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா, இயக்குநர் லிங்குசாமி மீது தெலுங்கு திரைப்பட சம்மேளனத்தில் புகார் செய்திருக்கிறார் தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜூன் மற்றும் அல்லு சிரீஷின் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ஒரு படத்தைத் தயாரிக்க முன் வந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குவதாக இருந்தது. இந்தப் படத்தின் பூஜை கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று சென்னையில் கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் சிவக்குமார்தான் குத்துவிளக்கேற்றி இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார். அதன் பிறகு இந்தப் படம் சம்பந்தமான எந்த வேலைகளும் நடைபெறவில்லை லிங்குசாமி பல்வேறு பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவித்ததால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் ஞானவேல்ராஜா. இந்தப் படம் நின்றுபோனதால் வேறொரு படத்தை…
Read Moreஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் 3 கோடி ரூபாய் பரிசு
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவருக்கு 3 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்பவருக்கு 2 கோடியும், வெண்கல பதக்கம் வெல்பவருக்கு 1 கோடியும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை இன்று(ஜூன் 26) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, மெய்யநாதன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், பரந்தாமன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஏற்கனவே வாள் வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மீதமுள்ள 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை…
Read Moreபொதுசெயலாளரும் நானே கமல்ஹாசன் அறிவிப்பு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகிச் சென்றனர். அவர்களில் பலரின் புகாரே, ‘கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை’என்பதுதான். இந்த நிலையில் இன்று (ஜூன் 26) காணொலி வாயிலாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய கமல்ஹாசன், அக்கட்சியின் தலைவர் பதவியோடு பொதுச் செயலாளர் பதவிக்கும் தன்னையே அறிவித்துக் கொண்டிருக்கிறார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடந்த காணொலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், “கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்”என்று சொல்லிவிட்டு கட்சி விஷயங்களைப் பேசினார். “ மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட…
Read Moreதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது என்ன?
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த 21 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், “உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக் கொள்கை மீது இந்த அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநிலத்திலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த அரசு புத்துயிர் அளிக்கும். 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு அனைத்து வகைகளிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கோவிட் பெருந்தொற்றின் தீவிரம் குறைந்த பின் இந்தத் தேர்தலை…
Read More