கதை… தமிழில் பாட்டி என்ற சொல்.. ஆங்கிலத்தில் கிராண்ட் மதர்.. அது சுருக்கமாக கிரானி.. நாக ஆனந்த் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களின் மாற்று திறனாளி குழந்தைகளுடன் ஒரு பங்களா வீட்டுக்கு குடியேறுகின்றனர்.. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை வைத்து அதில் ஆர்வம் வைத்து விவசாயம் செய்து குடும்பத்தை வழி நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த வீட்டில் வடிவுக்கரசி பாட்டி தவறுதலாக வந்து விடுகிறார்.. அவர் வந்த பிறகு தான் அந்த வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.. குழந்தைகளையும் கணவன் மனைவியும் கொல்ல முயல்கிறார்.. அவர்கள் இதயத்தை எடுக்கிறார்.. இவரின் நோக்கம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த்நாக் இந்த வயதிலும் கதையின் நாயகியாக வடிவக்கரசி.. இவரின் பெயர் டைட்டில் கார்டில் வரும்போது…
Read MoreDay: January 30, 2026
கருப்பு பல்சர் – விமர்சனம்…
கதை… மேட்ரிமோனியில் பெண் பார்த்து ரேஷ்மாவை காதலிக்கிறார் தினேஷ்.. ஒரு கட்டத்தில் தன்னிடம் கருப்பு பல்சர் பைக் இருப்பதாக பொய் சொல்லி விடுகிறார். எனவே நான் உன்னிடம் கருப்பு பல்சரில் ஊர் சுற்ற வேண்டும் என காதலி வேண்டுகோள் வைக்கிறாள்.. இதனை எடுத்து உடனடியாக மன்சூரிடம் இருக்கும் கருப்பு பல்சரை செகண்ட் ஹேண்டில் விலைக்கு வாங்குகிறார் தினேஷ்.. ஆனால் அதன் பிறகு ரேஷ்மாவுடன் பைக்கில் சுற்றும்போதெல்லாம் இவருக்கு சில பிரச்சனைகள் வருகிறது.. கண் மங்கலாக தெரிகிறது விபத்து ஏற்படுகிறது.. தனியாக சுற்றினால் பிரச்சனை இல்லை.. ஒரு பெண்ணுடன் சுற்றினால் அந்த கருப்பு பல்சர் பிரச்சனை செய்கிறது.. அப்படி என்றால் என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… இப்படத்தில் தினேஷ் இரு வேடங்களில் நடித்துள்ளார்.. ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.…
Read Moreஅமேசான் பிரைமில் “படையாண்ட மாவீரா”
வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெறும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய “படையாண்ட மாவீரா” தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது. வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் “படையாண்ட மாவீரா” கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம். படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், “ரெடின்” கிங்ஸ்லி, “நிழல்கள்” ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா தலைவாசல்” விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடித்திருக்கிறார். மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இசை…
Read Moreமுதல்வர், துணை முதல்வருக்கு மனம் உருகி நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்
*பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!* உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்! வேட்டிக் கழண்டாதான் மானம் போகனும்னு அவசியமில்லே…. ஒரு கலைஞனுக்கு அந்த வருஷத்தில படமே வரலேன்னாலும்,வந்த படம் சரியாப் போகலைன்னாலும், உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னாலும் மானம் மட்டுமில்லே ஒட்டிகிட்டே மரியாதையும் கூடவே போயிடும். 20 மாசமா மனசு கர்ப்பமாவே இருக்கு, என் இயக்கப் படம் வரலைங்கிற பாரத்தோட… இந்த அறிவிப்பு மானம் போகாம இடுக்கண் களைந்த நட்பாய் கண்களில் நீர் கோர்த்த பரவசத்தோட, சுவாசத்தை சுவாரஸ்யமா மாத்தியிருக்கு,நம்பிக்கை தசையை ஏத்தியிருக்கு, தித்திப்பை திசையெங்கும் கூட்டியிருக்கு. நன்றி சொல்ல நா வரண்டுப் போனதால , எழுதி சமாளிக்க ஏதுவான வார்த்தையை வானத்தில கண்கள் தேடிகிட்டிருக்கு. விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந்த குதிரைகளோடு பந்தயத்தில்…
Read Moreமாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி – கருணாகரன்
தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் – தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் என்…
Read MoreSalute to Mothers – 15வது ஆண்டு விழா -சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் Salute to Mothers நிகழ்ச்சி, இந்த ஆண்டும் தாய்மையின் மகத்துவத்தை போற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. தாயை ஒரு உறவாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் சமூக மதிப்பாகவும் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் அர்த்தமுள்ள சமூக விழாவாக அமைந்தது. நிகழ்ச்சிக்கு பத்மபூஷன் திரு நல்லி குப்புசாமி செட்டி, பத்மஸ்ரீ பேராசிரியர் டாக்டர் வி. காமகோட்டி, திரு ராமதாச ராவ் மற்றும் பத்மஸ்ரீ எழுத்தாளர் திருமதி சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். இந்த ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் வி. காமகோட்டி மற்றும் திருமதி சிவசங்கரி ஆகியோர் இணைந்து கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சியாக இது அமைந்ததால், நிகழ்ச்சியின் பெருமையும்…
Read MoreZEE5 இல் வெளியான சிறை திரைப்படம், மிகக் குறுகிய காலத்தில் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் சமீபத்தில் வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதன் ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுபூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணமே “சிறை”…
Read More