இரண்டு முறை தேசிய விருது பெற்ற எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான G. தனஞ்ஜெயன் தலைமையிலான Creative Entertainers and Distributors நிறுவனம், FRIDAY PREMIERE என்ற புதிய YouTube சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக தரமான தமிழ் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் தனித்துவமான தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதிய திரைப்படம் இலவசமாக வெளியிடப்படும். திரையரங்குகளில் போதிய வரவேற்பைப் பெறாமல் தவறவிட்ட சிறந்த படைப்புகள், சுயாதீன திரைப்படங்கள், கல்ட் கிளாசிக் படங்கள் மற்றும் நினைவில் நிற்கும் கதைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், அனைத்து திரைப்படங்களும் HD தரத்தில் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடைய English Subtitles உடன் வெளியிடப்படும். FRIDAY PREMIERE — திரையரங்குகளைத் தாண்டி தரமான திரைப்படங்களை கண்டுபிடிக்க விரும்பும் ரசிகர்களுக்கான…
Read MoreDay: May 14, 2026
சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் இளையராஜா, “தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார். எடிட்டர் ராம் கோபி, ” வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்”. பாடலாசிரியர் ஜெயந்தி, ” இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”. கலை இயக்குநர் சம்பத் திலக், “வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி”. வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட்,…
Read Moreசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் ‘வேலும் மயிலும்’!
சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார். புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘தாய் கிழவி’ திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, ‘வேலும் மயிலும்’ வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார்.…
Read More