சீனு ராமசாமி இயக்கத்தில் ”கோழிப்பண்ணை செல்லதுரை”

“ஜோ” படத்தின் வெற்றியை தொடர்ந்து “VISION CINEMA HOUSE” டாக்டர் டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படம் கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகி வருகிறது. இது  அதிரடி மற்றும் உணர்ச்சிகள் நிரம்பிய வாழ்வியல் திரைப்படமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

முக்கிய கதாபாத்திரத்தில் “யோகி” பாபு படத்தில் நடிக்கிறார். கதையின் நாயகனாக  ஏகன் அறிமுகமாகிறார்.  பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச் செந்தூர் ஶ்ரீ ராம் (அறிமுகம்),  சத்யா (அறிமுகம்), மானஸ்வி, பவா செல்லதுரை,
மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.  என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  பிரபாகர் மற்றும் சீனு ராமசாமி வசனம் எழுத, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஆர். சரவண அபிராமன் கலைஇயக்கத்தை மேற்கொள்ள, கவிப்பேரரசு வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய் மற்றும் ஏகாதசி பாடல்கள் எழுதுகின்றனர்.

 

 

Related posts

Leave a Comment