JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!

JioStar Head Entertainment Business, South Cluster, திரு.கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil திரு. பாலச்சந்திரன் R, Turmeric Media – CEO திரு. R. மகேந்திரன் ஆகியோர், இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர். இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும்…

Read More

நிர்வாகம் பொறுப்பல்ல – திரை விமர்சனம்

நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட திட்டமிட்ட நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் தொக்காக சிக்கிக் கொள்கிறார். போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்தார்? அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ? கேள்விகளுக்கான விடை பரபர கிளை மாக்ஸ். படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும் அடப்பாவி ரகம். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன், பலவித கெட்டப்புகளில் தோன்றி ஆச்சரியப் படுத்துகிறார். நடிப்பு, நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் பட்டை கிளப்பியி ருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி…

Read More

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது! உங்கள் டிக்கெட்டை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக கொண்டாடப்படும் இந்தப் படத்திற்கான ஐமேக்ஸ் இருக்கைகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐமேக்ஸில் முன்னணியில் இருக்கும் PVR INOX நிறுவனம் திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களை திறந்துள்ளது. PVR INOX உள்ளிட்ட திரையரங்குகள்…

Read More

விரைவில் வெளியாகும் புத்தம் புது நேரம் -படத்தின் இசை வெளியீட்டு விழா!!

சக்தி பீடம் ப்ரொடக்‌ஷன்ஸ் & Face Guru Institute of Legends movie media தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “புத்தம் புது நேரம்”. கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வினில் இயக்குனர் சந்திரகுமார் பேசும்போது, “35 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். பிளாக் & ஒயிட் சினிமாவில் இருந்து கலர், தற்போது டிஜிட்டல் சினிமா வரை வந்து நிற்பது மகிழ்ச்சி. கோவிட் பெருந்தொற்று காலத்தில் கிளப் ஹவுஸில் பேசும்போது சினிமா பற்றி நிறைய…

Read More

ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன் உருவாக்கிய வலுவான இணைப்பை வெளிப்படுத்துகிறது. மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கும் இசையை பரிசாக அளித்த லெஜண்டரி இசையமைப்பாளர் AR ரஹ்மானின் இசை, ஹிமான்ஷு சர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய மனதை வருடும் எழுத்து, ஆனந்த் L ராய் கொண்டு சென்ற மென்மையான இயக்கம், பூஷண் குமார் அளித்த வலுவான தயாரிப்பு ஆதரவு ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் மனதில் இந்த படத்தை ஆழமான உணர்ச்சி மட்டத்தில் தொட்டிருக்கிறது. நடிகர்களின் தீவிரமான நடிப்பும், அடுக்கடுக்கான உணர்ச்சி தரப்பட்ட கதை சொல்லலும் வலுவான…

Read More

தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ’ஹைக்கூ’ படத்தின் மனதை வருடும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட விஷன் சினிமா ஹவுஸ்!

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தலைமையிலான விஷன் சினிமா ஹவுஸ். முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வரும் விஷன் சினிமா ஹவுஸ் சமீபத்தில் தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படத்தை அறிவித்தது. இன்று (டிசம்பர் 5, 2025) தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் ’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் தெலுங்குத் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நடிகை ஸ்ரீ தேவி அப்பல்லா மற்றும் மோலிவுட்டின் சென்சேஷனல் நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர், இளவயது காதல் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை…

Read More

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம்  மாயபிம்பம்.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக நடிகர் – நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு‌ பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார். 🔗https://youtu.be/1DR3_njj8Q4?si=6L0kPWhNc8NZmU6P

Read More

செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

அஸ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்… கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி கிராமத்தைச் சார்ந்த அஸ்வினி என்ற இளம் இயக்குனரின் முதல் குறும்படம் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை.. யாரும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறள் மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து இக்குறும்படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.. இக்குறும்படத்தை பற்றி இயக்குனர் அஸ்வினி மற்றும் மணிவண்ணன் கூறியதாவது: நாங்கள் இந்த குறும்படத்தை எடுக்க முக்கிய காரணம் யாரும் கெட்ட வார்த்தையே உறவுகளுக்கு இடையே பேசக்கூடாது என்பது தான்.. இதில் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read More

‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல திரையரங்குகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த…

Read More

யோகிபாபு – விஜய் விஷ்வா –  சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் ‘சாரா

நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி  இயக்கியுள்ளார். இப்படத்தில் சாக்ஷி அகர்வால்,  தங்கதுரை,  அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சாரா’ படத்தின் டிரெய்லரை திரையிட்டு குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். இத்துடன், அங்கு நடிகர் நெப்போலியனின் பிறந்தநாளை உணவு வழங்கி கொண்டாடினர். அத்துடன், சமீபத்தில் மரணமடைந்த மறைந்த…

Read More