NEUBERG DIAGNOSTICS UNVEILS FIRST CUTTING-EDGE NATIONAL REFERENCE LABORATORY IN CHENNAI AND ANNOUNCES ITS ENTERING INTO INTEGRATED DIAGNOSTIC SPACE Chennai, 01 December, 2023: Neuberg Diagnostics, a leading diagnostic healthcare chain with a strong presence across India, South Africa, UAE, and the USA, has unveiled its state-of-the-art national reference laboratory which houses Genomics, Transplant Immunology, Molecular Diagnostics, Proteomics and Metabolomics testing along with integrated diagnostics in Chennai. This cutting-edge facility, hailed as “Chennai’s new Healthcare landmark,” represents India’s First state of art total lab automation solution utilizing the Abbott GLP System, alongside…
Read MoreCategory: Uncategorized
ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU)ன் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான ஸ்கிரீனிங் முகாம்
பாலியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஆண்களிடம் ஏற்படுத்துவதற்காக சென்னையை சேர்ந்த ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) நிறுவனம் பொதுமக்களுக்கு ஒரு இலவச ஸ்கிரீனிங் முகாமை வெற்றிகரமாக நடத்தியது . சென்னையில் ஒரு பல்சிறப்பு மருத்துவமனை இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த முகாமை முதல் முறையாக நடத்தியது பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது சென்னை, 01st டிசம்பர் 2023; இந்தியாவின் முன்னணி சிறுநீரக பராமரிப்பு நிபுணரும், சென்னையின் மிகப்பெரிய நெப்ராலஜி அண்ட் யூரோலஜி மருத்துவத்துறை சிறப்பு மையமுமான ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU) சென்னை, அவர்கள் நடத்திய ஆண்களின் பாலியல் ஆரோக்கிய ஸ்கிரீனிங் முகாம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சுகாதார முன்முயற்சி மற்றும் ஆண்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட…
Read Moreஅன்னபூரணி சினிமா விமர்சனம்
பிறக்கும் போதே நாக்கின் சுவை முடிச்சிகளில் அதீத உணர்வுகளுடன் பிறக்கும் ஒரு பிராமணக் குழந்தையான அன்னபூரணி, அதே காரணத்தால் சுவை மீதும் உணவு மீதும் அதிக நாட்டம் கொள்ளுகிறாள். உணவு மீது கொண்ட நாட்டம் நாளடைவில் சமைப்பதிலும் திரும்ப, உணவு சமைத்துக் கொடுப்பது எவ்வளவு பெரிய தொண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளும் அன்னபூரணி இந்தியாவின் தலைசிறந்த செஃப் ஆக தான வருவேன் என்று உறுதி எடுக்கிறாள். சிறுமியாக இருக்கும் போது அவள் சமைப்பதற்கு ஆதரவும் அரவணைப்பும் காட்டிய குடும்பம், அவள் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கப் போகிறேன் என்று வந்து நிற்கும் போது , தங்கள் குலத்தை காரணம் காட்டி அவளுக்கு தடை போடுகிறது. தன் குடும்பத்தை மீறி தன் இலட்சியத்தை அடைவதில் இருக்கும் தடைக்கற்களை மீறி அன்னபூரணி ஜெயித்துக் காட்டினாளா..? என்பதே இந்த “அன்னபூரணி” திரைப்படத்தின் கதை.…
Read Moreசந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது.. இது சந்தீப் வங்காவின் படம். அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அவர் எங்களிடம் அனிமல் கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை…
Read Moreதிருப்பூர் மாநகரில் கோலாகலமாக நடைபெற்றது விநாயக ஊர்வலம்
மத்திய அரசை விமர்ச்சித்த 2000ம் படத்துக்கு தணிக்கையில்165 இடங்களில் வெட்டு
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று 1000ம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் என்று இரவில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளர் கோ.பச்சியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ருத்ரன் பராசு நாயகனாகவும் சர்னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் ‘கராத்தே’ வெங்கடேசன், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் இந்திய ஒன்றிய அரசை நேரடியாக விமர்சிப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். இதனால்இத்திரைப்படம் மறுபரிசீலனை குழுவினருக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. நடிகை கவுதமி தலைமையிலான மறுபரிசீலனை குழுவினர் இப்படத்தை பார்த்துவிட்டு, 105 இடங்களில் காட்சிகளை நீக்கும்படி தெரிவித்தனர்.…
Read Moreஅமீர்கான் இரண்டாவது முறையாக விவாகரத்து பெற்றார்.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். லகான் இந்திப்படம் படம் தொடங்கிய போது அதில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த கிரண்ராவைக் காதலித்து டிசம்பர் 28, 2005 அன்று திருமணம் செய்து கொண்டார். மகன் ஆசாத் ராவ் கானை டிசம்பர் 5, 2011 அன்று வாடகை தாய்மூலம் பெற்றுக் கொண்டனர். நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் ஆகியோர் இன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது இந்த அழகான 15 ஆண்டுகளில் நாங்கள் வாழ்க்கை அனுபவங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய உறவு நம்பிக்கையாலும், மதிப்பினாலும், காதலினாலும் வளர்ந்திருக்கிறது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க…
Read Moreரஜினிகாந்த் அமெரிக்க பயணம் கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி அரசியல், சினிமா, பொது விஷயங்களில் கருத்துகளை கூறுவது, விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் தொலைக்காட்சி விவாதங்களில் கட்சி சார்பற்றவராகவும் கலந்துகொள்வார் நடிகை கஸ்தூரி தற்போதுநடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க சென்றது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் ஊடகங்கள் ரஜினிகாந்த் எப்போது அமெரிக்கா செல்வார், உடன் செல்லப்போவது யார், எப்போது திரும்புவார் என்று கிடைத்த இரண்டு புகைப்படங்களை வைத்து கொண்டு செய்திகளை வெளியிட்டு வரும் சூழலில்நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள கேள்வி விவாத பொருளாக மாறும் சாத்தியம் உள்ளது அவர் ட்விட்டரில் எழுப்பியுள்ள கேள்வியில் கொரோனா தொற்று காரணமாக மே முதல் இந்தியர்கள் அமெரிக்கா வர அந்த நாடு தடை விதித்துள்ளது. யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாத நிலையில் ரஜினி மட்டும் எப்படி அமெரிக்காவிற்கு சென்றார். இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். நான் இப்படி கேட்க காரணம், அமெரிக்காவில் பணிபுரியும்,…
Read Moreகவர்னர் உரை ஏமாற்றமளிக்கிறது – எடப்பாடி கே.பழனிச்சாமி
சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரைக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றனர். அதில் முக்கியமான வாக்குறுதிகள் கூட கவர்னர் உரையில் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். சட்டப்பேரவையிலும் ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பேசியது திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து…
Read Moreதமிழில் இன்னொரு பேய்ப்படம். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ளது ‘காதம்பரி’யின் தனித்துவம்.
தமிழில் இன்னொரு பேய்ப்படம். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ளது ‘காதம்பரி’யின் தனித்துவம். மழை பெய்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் என 5 பேர் காரில் பயணிக்கிறார்கள். ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியையொட்டி அவர்களின் கார் விபத்துக்குள்ளாகிறது. சற்று தூரத்தில் காட்டுக்குள் பரந்து விரிந்த வீடு ஒன்று தென்பட, மழைக்கு ஒதுங்குவதற்காக அந்த வீட்டுக்குள் செல்கிறார்கள். சென்றவர்களில் ஒவ்வொருவராக பலியாகிறார்கள். ஏன்? எதற்காக? அடுத்தடுத்து நகர்கிற காட்சிகள், பேய்ப்படங்களில் இதுவரை பார்க்காத வித்தியாசமான அனுபவத்தை தருகின்றன. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளது படத்தின் தனித்துவம் என்றால் படத்தில் மொத்தமே 8 கதாபாத்திரங்கள் மட்டுமே என்பது சிறப்பு! விபத்தில் அடிபட்ட காதலியின் மீது காட்டும் பரிதாபம், உடன் வந்தவர்கள் பேயிடம் சிக்கி உயிருக்குப் போராடும்போது இயலாமையில் தவிப்பது என படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிற அருள்…
Read More
