ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால “திருமண வாழ்வை” மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின் இசையமைத்து, சுபலக்ஷினியுடன் இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை எழுதியுள்ளார். மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி…
Read MoreCategory: சினிமா செய்திகள்
’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் காந்தி கிருஷ்ணா, “நீண்ட நாள் கழித்து ஒரு படம் இயக்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இன்றைய தலைமுறையின் லைஃப் ஸ்டைலை இந்தப் படம் பிரதிபலிக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதல் எப்படி இருந்தது, இன்றைய தலைமுறை காதலில் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். ‘அக்செப்ட் தி ரியாலிட்டி’ என்ற டேக் படத்திற்கு கொடுத்திருக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையை எதிர்த்து போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். காதல் ஜோடிகளுக்கு அறிவுரை நாங்கள் சொல்லவில்லை. ஆனால்,…
Read Moreமூணாறில் “அறிவு” பட படப்பிடிப்பு… மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார்!
Movietron Production சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் “அறிவு” திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கும்…
Read More*’ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!
‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் இல்லாதது’ ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். அவரது கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “மாளவிகா மனோஜ் இந்தப் படத்தில் ‘நிலோஃபர்…
Read More*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*
அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக்…
Read More*‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்*
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘பரீட்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ், இப்படத்திற்காக பாடிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் ஹாரூண் கூறும்போது,…
Read Moreஇந்தியாவில் ரூபாய் 1,000 கோடியை நெருங்கும் துரந்தர் பழிவாங்கல்!
2-வது வார முடிவில் ரூபாய் 950 கோடியை (இந்திய நெட் வசூல்) கடந்தது! உலகளவில் ரூபாய் 1,500 கோடி வசூலித்து சாதனைபயணத்தை தொடர்கிறது! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை தொடர்கிறது. 2-வது வார முடிவில் இதுவரை இல்லாத வேகத்தில் ரூபாய் 961 கோடி (நெட்) வசூலித்து, இந்தியாவில் ரூபாய் 1,000 கோடி என்ற இமாலய மைல்கல்லை நெருங்கியுள்ளது. உலகளவிலும் திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை உலகளவில் ரூபாய் 1,501 கோடி பிரம்மாண்ட வசூலை குவித்து சர்வதேச அளவிலும் தனது அசாதாரணமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. வெறும் இரண்டு வாரங்களில், இந்திய சினிமாவின் உலகளாவிய அளவுகோல்களை மாற்றியமைத்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது. பிரம்மாண்டமான ஓப்பனிங்…
Read Moreவிமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம். தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி – பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது. வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்ல — அது பெருமை, பொறுமை மற்றும் அவரது அடையாளத்தின் உருவகமாக திகழ்கிறது. பலமும்…
Read More‘கே ஜி எஃப்’- ‘மார்கோ’- ‘டாக்ஸிக்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இசையில் புயலை கிளப்பும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். அவருடைய இசையில் கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘ காட்டாளன் ‘விரைவில் வெளியாகிறது
‘கே ஜி எஃப்’, ‘மார்கோ’, மற்றும் ‘டாக்ஸிக்’ போன்ற படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் பி. அஜனீஸ் லோகநாத் இசையமைப்பார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்… தற்போது ரவி பஸ்ரூர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பான் இந்திய வெளியீடாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள திரை உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். பான்…
Read More‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!
சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. கன்னட நடிகர், இயக்குநர் ரக்ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக பரம்வா ஸ்டுடியோஸிற்கும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். “‘ஓம்மே நின்னானு’ பாடல் 31 வினாடிகளுக்கும், ‘நியாயா எல்லிடே’ பாடல் 7 வினாடிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவான…
Read More