டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘டிரான்: ஏரெஸ்’ வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ளது!

டிரான்ஸ் பிரான்சிஸிஸ் உலகில் இருந்து வெளியாகும் அதிக எதிர்பார்ப்பில் உள்ள புதிய படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. ‘டிரான்: ஏரெஸ்’ டிஸ்னியின் 1982 ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைக்கதை படம். ‘டிரான்’ மற்றும் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘டிரான்: லெகசி’ ஆகியவற்றின் தொடர்ச்சியாகும். இந்த படம் அக்டோபர் 10, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘டிரான்: ஏரெஸ்’ டிஜிட்டல் உலகில் இருந்து நிஜ உலகிற்கு, மனிதகுலம் ஏஐ மனிதர்களுடனான முதல் சந்திப்பை நிகழ்த்தும் ஆபத்தான பணிக்காக அனுப்பப்படுகிறார். இந்தப் படத்தில் கிராமி விருது வென்ற நைன் இன்ச் நெயில்ஸ் இசைக்குழுவின் ‘As Alive As You Need Me To Be’ என்ற புதிய பாடலும் இடம்பெற்றுள்ளது. ஜோச்சிம் ரோனிங் இயக்கியுள்ள…

Read More

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு;

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”. அவர் படம் இயக்குவது குறித்து அவருடைய அண்ணன் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், அந்த விழாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்தி, நடிகர் டாக்டர் சிவராஜ் குமார், நடிகை ஜெனிலியா மற்றும் அனைத்து பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். யோகிபாபு பேசும்போது, கோமாளி படத்தில் பணியாற்றும்போது…

Read More

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது. மனதைத் தொடும், மக்களின் மொழியை பேசும் திரைப்படமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மறு வெளியிட்டின் போதும்…

Read More

இந்தியாவின் இதயத்துடிப்பை கொண்டாடும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்!

பணக்காரர்களும் மிகப்பெரும் வசதி படைத்தவர்களும் வாழும் இந்த உலகில் அதிகம் பேசப்படாத இந்தியாவின் மிடில் கிளாஸ் ஹீரோக்களைப் பற்றி பேசவருகிறது புதிய திரைப்படம். மாதத்தவணை, தள்ளுபடி, 1BHK சுற்றி இருக்கும் கனவு என நகைச்சுவை, எமோஷன்ஸ் என பல விஷயங்களை கொண்டது மிடில் கிளாஸ் வாழ்க்கை. இந்தப் படம் வெறும் கதை மட்டுமல்லாது, ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்த்து, சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டு, வீட்டுக்கடனை விட அதிக சுமையாய் இருக்கும் மாதத்தவணை என மிடில் கிளாஸ் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி பேசுகிறது. பார்வையாளர்கள் பலரின் வாழ்வையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் படம் உருவாகியுள்ளது. மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய…

Read More

“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

தனது வசீகரத்தாலும் திறமையான நடிப்பாலும் தென்னிந்திய பார்வையாளர்களை வசீகரித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. பத்து வருடங்களுக்கும் மேலாக தனித்துவமான கதைகள் மற்றும் கதாநாயகி அல்லாது முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார் லாவண்யா. செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக திரையிடப்பட்டு பாரட்டுகள் பெற்ற ‘தணல்’ படக்காட்சியில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. படம் குறித்து லாவண்யா திரிபாதி பேசியதாவது, ” ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் எனது நடிப்பைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் ரொமாண்டிக் தருணங்களுடன் இயல்பாகவும் இரண்டாம் பாதியில் தீவிரமான எமோஷனல் தருணங்களுடனும் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும். வழக்கமான கதாநாயகி அல்லாது படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்த…

Read More

“நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும்” – இயக்குநர் ரவீந்திர மாதவா!

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். இந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 12 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நடிகர் அதர்வா முரளியின் ‘DNA’ படத்திற்குப் பிறகு அவரது ‘தணல்’ படம் மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியிருப்பதாவது, “நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது. வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு, பழிவாங்கும் கோபத்தில் இருக்கும்…

Read More

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் வழங்கும், ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுப்ரிதா நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகரும் நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் பகிர்ந்து கொண்டதாவது, “எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார்” என்றார். படத்தின் கதை குறித்து கேட்டபோது, “இன்றைய பார்வையாளர்களுக்கு…

Read More

நடிகர் தனுஷ் வெளியிட்ட வ்யோம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு எண் 1 – படத்திற்கான தலைப்பு: மனிதன் தெய்வமாகலாம்

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் *”மனிதன் தெய்வமாகலாம்”* எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியீடு படக்குழுவிற்கும், நண்பர்களிற்கும் கொண்டாட்ட தருணமாக அமைந்துள்ளது. இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது. இந்தப்படத்தில் புகழ்பெற்ற இயக்குநர்-நடிகர் செல்வராகவன் முன்னணியில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன்…

Read More

ஒரு படப்பிடிப்பில் கதாநாயகனை படத்தில் நடித்துக் கொண்டிருந்த காளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘வட மஞ்சுவிரட்டு’. இதில் முக்கியமாக மஞ்சுவிரட்டு சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன. கிராமத்து மண்,மக்கள், கலாச்சாரம், மஞ்சுவிரட்டு போன்றவை கொண்ட கலந்த கதையாகவும் காதல், பாசம், வீரம் போன்றவற்றை வெளிப்படுத்தும் கலையாகவும் உருவாகி வரும் படம் இந்த ‘வட மஞ்சுவிரட்டு’. இப்படத்தின் நாயகனாக ‘முருகா’ அஷோக் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘முருகா’, ‘பிடிச்சிருக்கு’, ‘கோழி கூவுது’ போன்ற படங்களில்லிருந்து ஆரம்பித்து, தொடர்ந்து ‘காங்ஸ் ஆப் மெட்ராஸ்’ , ‘மாயத்திரை’ , ‘ஆர் யூ ஓகே பேபி?’ , ‘பெஸ்டி’, ‘மாயப்புத்தகம்’, ‘லாரா’ , இப்படி 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர். தனக்கென தனி இடத்தை பிடித்த நாயகன். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சங்கிலி.CPA. அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நிர்வாக…

Read More

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான “கோல்ட் கால்”  Title Teaser – ஐ படகுழுவினர் வெளியிட்டனர்

தனித்துவமான கருப்பொருளுடன், மர்மமான சூழலை கொண்டுள்ள இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடிய வலுவான கதை சொல்லலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கோல்ட் கால்” ஒரு விறுவிறுப்பான கதையையும், ஒரு பீதியூட்டும் சூழலையும் கலந்த ஒரு முயற்சி. இது, தலைப்பு வெளியீட்டிலிருந்தே பார்வையாளர்களை கவரும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் விற்பனை பற்றி அல்ல… ஆனால் விற்பனையாளர் அலுவலக வேளைகளில், விற்பனைக்கு அப்பால் களத்தில் செய்வதைக் குறித்து பேசுகிறது. கதை நகரும் போது, ஒவ்வொரு காட்சியும் பார்வையாளரிடமிருந்து சிரிப்பை கிளப்புவதே முதன்மையான நோக்கமாக அமைந்துள்ளது. நகைச்சுவை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது – வேடிக்கையான மோதல்கள், முரண்பட்ட குணநலன்கள், சற்றே விநோதமான கேமரா கோணங்கள் போன்றவை வழியாக. இனிமையான உணர்ச்சி பூர்வ தருணங்களும், கடினமான நிமிடங்களும் இணைந்துள்ளன. ஆனால் படம் ஒருபோதும் முட்டாள்தனமான…

Read More