வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால்… இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு அதிரடி சதிராட்டம் ஆடி இருக்கிறார்கள். டெல்லியில் பிரபல கேங்ஸ்டர் ரங்கராய சக்திவேலுக்கும்( கமல்ஹாசன்), போலீசுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டையில் அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் துப்பாக்கி தோட்டாவுக்கு பலியாக… இதனால், அவரது மகன் அமரன் ( சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்க, தங்கை சந்திராவோ (ஜஸ்வர்யா லட்சுமி) காணாமல் போகிறார். இந்நிலையில், அமரனை தத்தெடுத்து மகன் போல வளர்க்கிறார் சக்திவேல். இச்சூழலில், சக்திவேலுவின் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர் ) மகள் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு, கேங்ஸ்டர் தலைமையை அமரனிடம் ஒப்படைத்து விட்டு, சிறைக்குச் செல்கிறார் சக்திவேல். இதனால் அமரன் மேல் கடுப்பாகிறார் மாணிக்கம். இந்நிலையில் சிறையில் இருந்து ரிலீஸான சக்திவேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரித்து பார்த்த…
Read MoreCategory: விமர்சனம்
ராஜபுத்திரன் – திரை விமர்சனம்
தென் தமிழ் நாட்டில் ராமநாதபுரம் வட் டாரத்தில் 90களின் காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து தந்தைக்கும் மகனுக்குமான பாசக் கதை. அப்பா செல்லையா தனது மகன் பட்டா மீது உயிரையே வைத்திருக்கிறார். மகனுக்கும் அப்பா தான் சகலமும். தந்தையை பெயர் சொல்லி அழைத்து மகிழும் அளவுக்கு அப்படி ஒரு அன்பு. அப்படி ஒரு அன்யோன்யம். சரியாகப் படிக்காத பட்டா குடும்ப கடனை அடைப்பதற்காக சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்யும் லிங்கா கும்பலிடம் வேலையில் சேர்கிறான். வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது அவன் வேலை. ஒருநாள் அவன் கொண்டு செல்லும் பணம் திருடு போய் விட, அதற்கு ஈடாக தனது வீட்டு நிலப் பத்திரத்தை செல்லையா கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் பணத்தை கொடுத்து அனுப்புகிறவர்களே ஆளை வைத்து திருடுவது தெரியவர… பட்டா எடுக்கும் அதிரடி…
Read Moreமனிதர்கள் – சினிமா விமர்சனம்
மதுப் பிரியர்களான ஆறு நண்பர்கள் காரில் பயணிக்கிறார்கள். இரவானதும் ஒரு இடத்தில் டேரா போட்டு கையோடு எடுத்து வந்திருந்த மது பாட்டில்களை காலி செய்கிறார்கள். போதையின் உச்சத்தில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் ஆயுத தாக்குதலில் பேச்சு மூச்சு இல்லாமல் போக, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள்.அவர்களது அந்த முடிவு அவர்களை எங்கே கொண்டு போய் விடுகிறது என்பது கிளைமாக்ஸ். கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே புதுமுகம். கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் தங்கள் மிதமிஞ்சிய போதை ஒரு உயிரை காவு வாங்கி விட்டதே என்று துடித்து துவளும் காட்சிகளில் உணர்ச்சியை கொட்டி நடித்திருக்கிறார்கள். நண்பர்களில் ஓரிருவர் இந்த சம்பவம் தங்களை எங்கு கொண்டு போய்…
Read Moreஜின் தி பெட் – திரை விமர்சனம்
700 ஆண்டுகளுக்கு முன்பு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மன்னர்களால் மந்திரவாதிகள் மூலம் உருவாக்கப்பட்ட தீய சக்தி கொண்ட ஆவி தான் ஜின். இதில், நல்ல ஜின்களும் உண்டு. நல்ல ஜின்கள் மன்னர்களின் பாதுகாவலர்களாக இருப்பதோடு போர்களில் அவர்கள் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தன. அதோடு மட்டுமின்றி மக்களுக்கு நல்லதும் செய்து வந்தன. இப்படிப்பட்ட ஜின்கள் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரிடம் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஜின் தி பெட். மலேசியாவில் ஒப்பந்த அடிப்படையில் பிரபல ஓட்டலில் இசைக்கச்சேரி நடத்தி வந்த நாயகன் முகேன் ராவ், காண்ட்ராக்ட் முடிந்ததும் தமிழகம் வரவேண்டிய நிர்ப் பந்தம். வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் முகேன் ராவ் ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’ என்று மலேசிய மக்களால் அழைக்கப்படும் பேயுடன் ஊருக்கு திரும்புகிறார். அந்தப் பேயை மலேசியாவில் வாங்கியதுமே ரூ. 5 லட்சம் பணப்பரிசு…
Read Moreவேம்பு – திரை விமர்சனம்
சோதனைகளை சாதனையாக மாற்றும் பெண்ணே இந்த வேம்பு. பள்ளிப் பருவம் தொட்டே சிலம்பம் கற்று வரும் வேம்புவுக்கு மாநில அளவில் ஸ்டேட் லெவல் சாம்பியன் ஆக வேண்டும்…அதன் மூலம் அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது லட்சியம். அதற்காக பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் சிலம்பம் தான் அவள் உயிர் மூச்சாக இருக்கிறது. சிலம்பத்தில் சாதித்து அதன் பிறகு தன் மீது அன்பு பாராட்டும் மாமன் மகனை கரம் பற்றுவது என்பது அவள் திட்டம். ஆனால் பெண்கள் விஷயத்தில் ஊரில் நடக்கும் சில அசம்பாவிதங்கள் அவள் பெற்றோரை பயமுறுத்த, அவள் விரும்பிய அதே மாமன் மகனுக்கு உடனடியாக மணமுடித்து வைக்கின்றனர். திடீர் திருமணம் தனது சிலம்ப லட்சியத்துக்கு இடையூறாக வந்து விடுமோ என்று பயப்படும் வேம்பு தன் கணவனிடம் இது பற்றி பேசுகிறாள். அவனும்…
Read Moreமையல் – திரை விமர்சனம்
திருட்டை தொழிலாக கொண்ட நாயகன் இரவில் ஆடு திருடிக் கொண்டு டூவீலரில் வர… மற்றொரு பக்கம் வயதான தம்பதிகள் இருவரால் கொடூரமாக கொல்லப்பட… இதற்கிடையே ஆடு திருடியவனை பொதுமக்கள் சுற்றி வளைந்து கொள்ள… உயிர் தப்ப ஓடும் அவன் ஒரு கிணற்றில் விழுந்து கால் முறிவு ஏற்பட்ட நிலையில் அங்கு தனது மந்திரவாதி பாட்டியுடன் வசித்து வரும் இளம்பெண் அவனைக் காப்பாற்றுகிறாள். அவளுக்கு பாட்டி வகை யில் மாந்திரீகமும் தெரியும். வைத்தியமும் தெரியும் என்பதால் தன் குடிசையில் தங்க வைத்து பச்சிலை வைத்தியத்தில் காலை குணமாக்குகிறாள். அவளின் அக்கறையான அன்பில் காதலுமா கிறான், திருடன். அதற்கு மேலும் அவன் அங்கிருக்க பிடிக்காதஅவளது மந்திரவாதி பாட்டி, இனி மறந்தும் இந்த பக்கம் வந்து விடாதே என்று சொல்லி அவனை நள்ளிரவு நேரத்தில் அனுப்பி வைக்கிறாள். அந்த இளம் பெண்ணின்…
Read Moreநரி வேட்டை – திரை விமர்சனம்
சிறு வயதில் தந்தையை இழந்த டோவினோ தாமஸ் தாயின் அரவணைப்பில் வளர்கிறார். கல்லூரி படிப்பை நிறைவு செய்தவர் படிப்புக்கேற்ற வேலையில் மட்டுமே சேர்வது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே வங்கியில் வேலை செய்யும் பிரியம் வதா மீது பிரியமும் கொள்கிறார். சரியான வேலைக்காக காத்திருக்காமல் கிடைக்கிற வேலையை செய்து வா. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் போது அதை செய் என்கிறார் காதலி. அம்மாவும் அதையே வலியுறுத்த, அந்த நேரத்தில் ரிசர்வ் போலீஸ் வேலை தேடி வர… வேண்டா வெறுப்பாக வேலையில் சேர்கிறார். எப்படியாவது தேர்வெழுதி சீக்கிரமாகவே அங்கிருந்து சென்று பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், போலீஸ் ட்ரெய்னிங்கில் இருந்து கொண்டே படிப்பினை தொடர்கிறார். இந்த சமயத்தில், மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நிலம், வீடு உள்ளிடவற்றைக் கேட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி…
Read Moreஆகக் கடவன – திரை விமர்சனம்
ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூவரும் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பர்களான அவர்கள், மூவரும் இணைந்து சொந்தமாய் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்த ஆசைப்படுகிறார்கள்.அதற்கேற்ப தனது ஒரே பெண்ணின் திருமணத்துக்காக மெடிக்கல் ஷாப்பை விற்கும் முடிவில் இருக்கிறார் உரிமையாளர். ஊழியர்களே வாங்கிக் கொள்ள விரும்புவது தெரிய வந்ததும் மகிழ்ச்சியுடன் கொடுக்க முன்வருகிறார். அதற்கான விலையாக ரூ. 6 லட்சம் ரூபாய் பேசப்பட்டு அவர்களும் பணம் புரட்டிய நிலையில் திடீரென நண்பர்கள் அறையில் இருந்த ரூ.6 லட்சம் திருட்டுப் போகிறது. இதனால் , ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் ரெடி செய்வதற்காக ஆதிரனும் ராகுலும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு பயணப்படுகிறார்கள் அப்போது வழியில் வாகனம் பஞ்சராகி விட, ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் பொட்டல் காட்டுப் பகுதியில் உள்ள பஞ்சர் கடைக்கு…
Read Moreஏஸ் – திரை விமர்சனம்
மலேசியாவில் நடக்கும் கதை. காதலியின் பணத் தேவைக்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயலும் நாயகன், அதன் பின் ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து காதலியை கைப்பிடிக்க முடிந்ததா என்பது அதிரடி களத்தில் சொல்லப்பட்ட நகைச்சுவை மேளா. வேலை தேடி மலேசியா சென்று யோகி பாபு தயவில் கிடைத்த வேலையில் அமரும் நாயகன் விஜய்சேதுபதிக்கு எதிர்வீட்டு நாயகி ருக்மணிவசந்த் மீது கண்டதும் காதல். காதலிக்குப் பெரிய அளவில் பரிசு கொடுத்து கவர நினைத்தவர், அதற்காக பிரபல ரவுடியுடன் சூதாடி கடன் படுகிறார். கடனை அடைக்க வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். இந்தக் கொள்ளை விவகாரம் காதலிக்கு தெரிந்த நிலையில் காதலியே போலீசில் காட்டிக் கொடுத்தாரா? அல்லது வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நாயகனை மலேசியா காவல்துறை கண்டு பிடித்ததா என்பதை கலகல பாணியில் சொல்லி இருக்கிறார்கள். நாயகனாக வரும் விஜய் சேதுபதிக்கு…
Read Moreஸ்கூல் – திரை விமர்சனம்
ஜாதி மதம் இல்லாத சமுதாயம் உருவாக ஒரு பள்ளிக்கூட பின்னணியில் இருந்து கதை சொல்லி இருக்கிறார்கள்,சற்று ஆழமாகவே.இரண்டாம் இடத்தில் இருக்கும் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், தங்கள் பள்ளி மாணவர்களை மனதளவில் தயார் செய்கிறார். அதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகமும் எழுதுகிறார். ஆனால், அந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகிறார்கள். வெற்றி மட்டுமே வாழ்க்கை. இல்லை எனில் அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்று அவர் அந்த புத்தகத்தில் சொன்ன கருத்து மாணவர்களை தற்கொலை வரை அழைத்துச் செல்கிறது. இதற்கிடையே, அந்த புத்தகம் மர்மமான முறையில் எரிக்கப்படுவதோடு, பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள். இது கண்ணுக்கு தெரியாத உருவம் செய்யும் வேலை என்று பள்ளி ஊழியர்கள் சொல்ல, காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார்…
Read More