சென்னையில் பெரிய மாஃபியாவாக இருக்கும் ஆனந்தராஜுக்கு சென்னையின் பல இடங்களில் கிளைகள். எல்லாருமே அந்தந்த ஏரியாவுக்கு அவரால் நியமிக்கப்பட்ட ரவுடிகள். அதே நேரம் எந்த கிளை நிறுவனமும் தலைமை அனுமதி இல்லாமல் எதையும் செய்ய முடியாது. தலைமை உத்தரவிட்டால் யோசிக்காமல் உடனே செய்து முடித்து விட வேண்டும். இப்படியாக அடிதடியில் தொடங்கி கொலை வரை குற்ற செயல்கள் தடையின்றி நடந்து வருகின்றன. நகரில் எத்தனை குற்ற செயல்கள் நடந்தாலும் போலீசில் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவாகாது. இதுதான் போலீசுக்கு தலைவலியாக இருக்கிறது. இந்நிலையில் ஆனந்தராஜ் மகள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவனை மிரட்டி தாக்கியதில் அவன் இறந்தே போகிறான். ஆனாலும் இளைஞரின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதற்கிடையே ஆனந்தராஜூக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுகிறது சம்யுக்தா தலைமையிலான போலீஸ் குழு. இதே…
Read MoreCategory: விமர்சனம்
கும்கி-2 – திரை விமர்சனம்
மலைப்பகுதியில் வாழும் மதிக்கு தந்தை இல்லை. தாய் இன்னொருவருடன் வாழ்கிறாள். அவர்கள் ‘குடி’யும் கும்மாளமுமாக பெரும்பாலும் மதி மயங்கிய நிலையிலேயே இருக்க, இவர்களால் சிறுவன் மதி பாதிக்கப்படுகிறான். பள்ளியிலும் அவனுக்கென்று நண்பர்கள் யாரும் இல்லாமல் தாழ்வுணர்ச்சியில் இருக்கிறான். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் அவனை அரவணைக்கிறார். அன்பு காட்டுகிறார். மனிதன் நேசிக்கா விட்டால் என்ன… இயற்கையை நேசி. அது உன்னை நேசிக்கும் என்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் பக்கத்துக் காட்டில் ஒரு யானைக் குட்டி பள்ளத்தில் தவறி விழுந்து விட, அதை பள்ளத்திலிருந்து மீட்கிறான். அது முதல் மதியும் யானைக் குட்டியும் இணை பிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். இதனை அறிந்து கொண்ட அவனது தாய் அந்த யானையை பெரிய விலைக்கு விற்க ஏற்பாடு செய்கிறாள். மதிக்குத் தெரியாமல் ஒரு நாள் விற்றும் விடுகிறாள். இது தெரியாமல் மதி யானையைத் தேடி…
Read Moreகாந்தா – திரைவிமர்சனம்
திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘இதுதான் படம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆழமும் அகலமும் ஆன ஒரு படைப்பு இந்த காந்தா. 1950 களில் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் கொடி கட்டி பறப்பவர் டி.கே.மகாதேவன். (துல்கர் சல்மான்).அவரை தனது படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி). முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தேடி வர, அதுவரை அவர் நடித்த 10 படங்கள் தொடர் வெற்றியில் இணைகின்றன. இப்போது பல ஆண்டுகளுக்குப் பின் குரு சிஷ்யன் இருவரும் பிரபல படநிறுவனம் தயாரிக்கும் படத்தில் இணைகிறார்கள். அறிமுகப்படுத்திய நேரத்தில் இருந்தது போலவே துல்கர் சல்மான் இருப்பார் என்று எதிர்பார்த்த சமுத்திரக்கனிக்கு பெரும் ஏமாற்றம். முன் போல் இல்லை அவர். தனது இன்றைய இமேஜ்க்கு தக்கபடி கதையில் சில…
Read Moreதாவூத் – திரை விமர்சனம்
தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த தாவூத், அங்கே போதைப்பொருள் கடத்தலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துகிறார். தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதைப் பொருளை கைப்பற்றும் முயற்சியில் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை ஈடுபடுகிறது. அதே சமயம், தாவூத்தின் கடத்தல் பணிகளை 20 வருடங்களாக செய்து வந்த தீனாவும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறார். தாவூத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பும் காவல்துறை உதவி ஆணையர் ஒருவரை கைக்குள் போட்டுக் கொண்டு அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறது. இந்த நிலையில், தாவுத்தின் சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் பொறுப்பில் இருக்கும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் மூலம் செய்தால் இந்த தொழிலில் கரை கண்ட எதிரிகள் ஆட்டையை போட்டு விடுவார்கள் என்பதால்,…
Read Moreநாயகன் – திரை விமர்சனம்
சில படங்கள் மட்டுமே நேற்றும் இன்றும் நாளையும் ரசிகர்களின் ரசனைப் பட்டியலில் இருக்கும்.அப்படி ஒரு படமே நாயகன். வெளி வந்து 39 ஆண்டுகளுக்கு பிறகும் அதன் மெருகு மாறாமல் அதன் உணர்வும் மாறாமல் திரைக்கு வந்து இருக்கிறது நாயகன். நடிகர் கமல்ஹாசனுக்கு நாயக பிம்பத்தை உறுதி செய்த படம் இது. மும்பையில் கோலோச்சிய வரதராஜ முதலியார் வாழ்க்கை பின்னணியை கதையாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.(சினிமாவுக்காக வேலு நாயக்கர்) அதில் நாயகனாக தன்னை முழுசாக பொருத்திக்கொண்டார் கமல். மக்களால் வாழ்பவன் தலைவன் அல்ல. மக்களுக்காக வாழ்பவனே தலைவன். அப்படி வாழ்ந்த வரதராஜ முதலியார் சரித்திரத்தில் படம் முழுக்க வரதராஜ முதலியாராகவே வாழ்ந்து நடிப்பு சரித்திரம் படைத்திருந்தார் கமல். சரி கதைக்கு வருவோம். ஒரு மனிதனை சூழ்நிலை எப்படி குற்றவாளியாக மாற் றுகிறது?அதே மனிதன் மக்களின் இதயத்தில் எப்படி தெய்வமாக உயர்கிறான்…
Read Moreஆரோமலே – திரை விமர்சனம்
ஆரோமலே என்பதற்கு ‘என் அன்பே’ என்று பொருள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு இளைஞனுக்கு வரும் அடுத்தடுத்த காதலை சொல்வது தான் படம். அவன் பள்ளி பருவத்தில் காதலிக்கிறான். அதில் தோல்வி. கல்லூரி பருவத்தில் காதலிக்கிறான். அதுவும் தோல்வி. படிப்பை முடித்து வேலையில் சேரும் போது அந்த அலுவலகத்தில் மேனேஜராக இருக்கும் பெண் மீது காதல் வசப்படுகிறான். இந்தக் காதலாவது கனியும் என்று பார்த்தால் அதுவும் சில காரணங்களால் ஊத்திக் கொள்கிறது. இந்த காதலுக்கு முடிவு தான் என்ன என்பதை திரை மொழியில் சுவாரசியமாகவே சொல்லி இருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் சாரங் தியாகு. இவர் நடிகர் தியாகுவின் வாரிசு. ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலை தேடுவதையே தனது வாழ்வின் ஒரு பகுதியாக வைத்திருக்கும் இளைஞன் கேரக்டரில் கிஷான் தாஸ் வருகிறார். ஒவ்வொரு பருவ காதல் தோல்வியின் போதும் சோகம் பொங்கும்…
Read Moreகிறிஸ்டினா கதிர்வேலன் — திரை விமர்சனம்
தலைப்பை பார்த்ததுமே இரு மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள். இவர்களுக்கு திருமணம் என்று வரும்போது அவரவர் மதங்கள் முட்டி மோதிக் கொள்ளும் என்று தோன்றுகிறது அல்லவா. அதுதான் இல்லை. படத்தில் மதத்துக்கு எந்த ஒரு இடத்திலும் மதம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம் அதுவே படத்தை வேறு கோணத்தில் அழகாக இட்டுச் சென்று விடுகிறது. கதை இதுதான். கல்லூரி மாணவி கிறிஸ்டினாவை அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் கதிர்வேலன் விரும்புகிறான். ஆரம்பத்தில் இது விஷயத்தில் அசிரத்தையாக இருந்த நாயகி, போகப் போக நாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகிறாள். இந்த சூழலில் இதே கல்லூரியின் இன்னொரு காதல் ஜோடிக்கு ரகசியமாய் பதிவு திருமணம் நடத்த சக மாணவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த கல்யாணத்துக்கு சாட்சியாக நாயகன் நாயகி இருவரும் தங்கள் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கிறார்கள். ஆனால்…
Read Moreபரிசு – திரை விமர்சனம்
சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் அளவு என்பார்கள். இங்கே நம் கதையின் நாயகி அந்த எல்லையை கூட தாண்டி விடுகிறார். லட்சியத்தை நோக்கிய அவரது பயணத்தில் அவரது முயற்சிகள் அனைத்தும் முத்துக்கள் ஆனதா என்பதை சொல்லும் படம் இது. நாயகி ஜான்விகா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி. படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். அவளது தந்தை ஒரு ராணுவ வீரர் என்பதால் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றுவதை லட்சியமாக வைத்திருக்கிறார். அறிவோடு அழகு, அழகோடு அறிவு. இதுதான் ஜான்விகா என்னும் போது அவர் மீது காதல் அம்புகள் வீசப்படாமல் இருக்குமா… வீசுகிறார்கள். பூங்கொத்தை வழங்கி காதல் சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் எந்த சலனமும் இல்லாமல் அவர்களின் காதல் வீச்சுகளை கடந்து செல்கிறார் ஜான்விகா. விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் ஜான்விகா, தந்தையிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். எகிப்தில்,…
Read Moreஅதர்ஸ் – திரை விமர்சனம்
சாலையில் திட்டமிடப்பட்டு ஒரு விபத்து நடக்கிறது. தலை குப்புற விழுந்து நொறுங்கும் அந்த வாகனத்தில் வந்த நால்வரும் இறந்து போகிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள்.ஒருவர் ஆண் . காவல்துறை விசாரணையில் இறந்த அந்த மூன்று பெண்களும் பார்வையற்றவர்கள். அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் என்பது தெரியவர, விசாரணை மேலும் சூடு பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த விசாரணை கருத்தரிப்பு மையமாகச் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனை வரை நீள்கிறது. அங்கே ஐ வி எஃப் எனப்படும் In Vitro Fertilization முறையில் கருத்தரிப்பு செய்யப்படும் செயல்பாடுகளில் மோசடிகள் இருப்பது அம்பலமாகிறது. அதன் மூலம் கருவைச் சுமக்கும் பெண்களும், கருவில் உள்ள குழந்தைகளும் அபாயத்தை நோக்கிச் செல்வது தெரிகிறது. சட்டவிரோத ஸ்டீராய்டுகள், முறைகேடான கொடையாளர்கள் மற்றும் ஊழல் நிறைந்த கருவுறுதல் என்று போகிறது. இதையெல்லாம் யார் செய்கிறார்கள்?இறந்துபோனவர்களுக்கும்…
Read Moreவட்டக்கானல் – திரை விமர்சனம்
கொடைக்கானலில் உள்ள ஒரு எழில் கொஞ்சும் காட்டுப்பகுதியே வட்டக்கானல். இந்த வனப்பகுதி யில் வளரும் ஒரு வகை மேஜிக் மஷ்ரூம் என்று அழைக்கப்படும் போதைக் காளான் தான் இந்த கதையின் மையம். ஆர் கே சுரேஷ் அந்தப் போதைக் காளான் செடிகளைப் பயிரிட்டுக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் பார்க்கிறார். அவர் ஆதரவற்ற மூன்று சிறுவர்களை அடியாட்கள் ரேஞ்சுக்கு வளர்த்து தனது தீவிர விசுவாசிகளாக வைத்திருக்கிறார். (துருவன் மனோ, கபாலி விஸ்வந்த்,விஜய் டிவி சரத் ஆகியோர்.) அவர்களும் வளர்ப்பு தந்தையின் மீது உயிராய் இருக்கி றார்கள். அப்பா, அப்பா என்று அவர் சொன்னபடி கேட்கிறார்கள். அவர் சொல்கிற ஆட்களை அடித்து நொறுக்குகிறார்கள். அவரது நிழல் வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். இந்நிலையில் தனது கணவனைக் கொன்றுவிட்டு சொத்தை அபகரித்துச் சுருட்டிக் கொண்டதற்காக பல ஆண்டுகளாக ஆர்கே சுரேஷைப் பழிவாங்க…
Read More