ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ 5 மொழிகளில் வெளியாகிறது..

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி  5 மொழிகளில் வெளியாகிறது..     ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ தமிழ்-தெலுங்கு-மலையாளம்-கன்னடம்-ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை யுஎஃபோ மூவிஸ் இந்தியா லிமிடட் (UFO Moviez India Ltd) விநியோகிக்கிறது. 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஆக்‌ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப் பின்னணி என பல்வேறு பின்புலங்களில் உணர்வுகள் தத்ரூபமாக, சில நேரங்களில் மிகவும் அப்பட்டமாகக் கொப்பளிக்கும் அளவுக்கு படங்களைக் கொடுப்பவர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் தற்போது ‘டி கம்பனி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் டி கம்பெனி…

Read More

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்*

*தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்*. சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த ‘தெனாலி’ படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்கை தயாரித்து நடிக்கிறார். ‘கூகுள் குட்டப்பன்’…

Read More

மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம்

மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம்.   மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்….மறைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு அவில்தார் பழனி அவர்களுக்கு உயரிய விருதான “வீர் சக்ரா”விருதினை குடியரசு தினத்தன்று வழங்கி பெருமை சேர்த்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்….நடிகர் உதயா, “செக்யூரிட்டி” படக்குழுவினரும் இவ்விருதினை அவருக்கு வழங்குமாறு கோரிக்கை கடிதம் 4 .1 2021 பிரதமர் மோடிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது…..அதன் கோரிக்கை கடிதத்தை மாநிலத் தலைவர் L.முருகன் அவர்களிடம் நேரடியாக உதயா வழங்கினார்….பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும், ராணுவத் துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு மாநிலத் தலைவர் முனைவர் எல்.முருகன் அவர்களுக்கும் தனது நன்றி கடிதத்தை தனது சார்பாகவும் ” செக்யூரிட்டி” படக்குழுவினர்…

Read More

நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்

நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்   மூத்த நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது… இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய…

Read More

MIK Production No :- 1 இன்று பூஜையுடன் துவங்கியது

MIK Production No :- 1 இன்று பூஜையுடன் துவங்கிய           MIK Productions (P) Ltd சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் MIK Production No :- 1 இன்று பூஜையுடன் துவங்கியது பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் MIK Productions No 1 இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. MIK production (P) Ltd நிறுவனம் சார்பாக P இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக…

Read More

“ட்ரிப்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“ட்ரிப்” பத்திரிக்கையாளர் சந்திப்பு நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். Sai Film Studios சார்பில் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், VJ சித்து, VJ ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள். “ட்ரிப்” படத்தின் ட்ரெய்லர் படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையானா விழாவில் இன்று வெளியானது. விழாவினில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறியதாவது… இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் பணியாற்றியபோது நடிகர் யோகிபாபுவுடன் எனக்கு…

Read More

திருமணத்திற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்.

திருமணத்திற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்.     வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஐ.டி. விங் தலைவர் ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய கௌரவ தலைவர் திரு ராஜ் சேகர் கற்பூர சுந்தர பாண்டியன், அகில இந்திய தலைவர் திரு. பரமு, அகில இந்திய செயலாளர் திரு வீரமணி, மாநில அமைப்பாளர் திரு. சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்.ஏ.ராஜ் மற்றும் சூர்யா நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More

இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதை திரைப்படமானது

இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதை திரைப்படமானது இபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதை திரைப்படமானது நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ளது இபிகோ 306 திரைப்படம். இப்படத்தை கதை எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் சாய். படத்தை சாய் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிவக்குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் எம்எக்ஸ் ப்ளேயர் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 22ல் வெளியாகிறது. படத்தில் தாரா பழனிவேல், சீனு மோகன் மற்றும் டாக்டர் சாய் நடித்துள்ளனர். படத்திற்கு சூரிய பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு செல்லப்பா. எடிட்டிங் ஸ்ரீ ராஜா. ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் நித்ய ஸ்ரீ, பிரபல பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ்…

Read More

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்பட பூஜை

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்பட பூஜை.         இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படத்திற்கு பிரம்மாண்ட பூஜை இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிறது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படம். தமிழில் ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற ஜனரஞ்சகமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மோகன் ராஜா. இவரது இயக்கத்தில் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படத்திற்கு இன்று மிக பிரம்மாண்டமாக பூஜை நடத்தப்பட்டது. ஃபிலிம் நகரில் உள்ள சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் இப்பூஜை நடத்தப்பட்டது. திரைப்படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா பேசும்போது, “மெகாஸ்டார்…

Read More

* Kurudhi Kalam *  trailer release in MX Player

* Kurudhi Kalam *  trailer release in MX Player.   MX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான  சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர். அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்த தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல்  ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது. மும்பை: 21 ஜனவரி 2021- “ உன்னால் உன் விதியை தேர்ந்தெடுக்க முடியும் , ஆனால் உன் எதிரிகளை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியாது. “ இது இரண்டு இளைஞர்களின் கதை, வாழ்வின் தொடக்கத்தில் சரியான பாதையில் ஒன்றாக ஆரம்பித்த அவர்கள், இறுதியில் விதிக்கும், கடமைக்குமான இரத்தக்களரியான…

Read More