அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்

அண்ணனுக்கு ஜே இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு தாய் மக்கள்   இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், அட்டக்கத்தி தினேஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றப் படம் அண்ணனுக்கு ஜே. இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார், ஒரு தாய் மக்கள் என்ற ஆவணப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை மையப் படுத்தி, தமிழர்களின் வாழ்வியலையும், வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகளையும் பல்வேறு கோணங்களில் அணுகுகிறது இந்த ஆவணப்படம். தமிழ் நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடைப்பெறும் இடங்களில் எல்லாம் படக்குழுவினர் களமிறங்கி, மாடு பிடி வீரர்களுடன் பல மாதங்கள் பயணம் செய்து, இதுவரை காணாத காட்சிகளை, எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு பதிவு செய்து இருக்கின்றனர். மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வாழ்வியல், மாடு பிடிப்பதில் இருக்கும்…

Read More

நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்…

நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். நம் இந்திய நாடு, விவசாயப்பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது… சுதந்திரத்துக்குப்பின், நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களை கொள்ளையடித்ததோடு, நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்.. அதன் காரணமாக, இன்று நம் விவசாயப்பெருமக்கள், வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு, தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்… விவசாயத்தொழிலை ஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப்பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இது போக, விவசாயம் பொய்த்துப்போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர்……

Read More

‘பூமி’ சினிமா விமர்சனம்

‘பூமி’ சினிமா விமர்சனம். சமூக அக்கறை சுமந்த படங்களின் வரிசையில் புதுவரவாய் ‘பூமி.’ ஜெயம் ரவியின் 25-வது படம்! ஜெயம் ரவி 16 வயதிலேயே சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் லெப்ட், ரைட் வாங்குகிறார். அதன் காரணமாக நாசாவில் வேலை கிடைக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிற விஞ்ஞானிகளில் ஒருவராக செயல்படுகிறார். இடையில் விடுமுறை கிடைத்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறார். சுயலாபத்துக்காக இயற்கை வளங்களை அழித்தொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கரங்கள், தன் கிராமத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கொதிக்கிறார். கிராமத்தைக் காப்பாற்ற, கார்ப்பரேட் கம்பெனிக்கெதிராய் களமிறங்குகிறார். விரிகின்றன வழக்கமான ஹீரோயிஸக் காட்சிகள்… இயக்கம்: லெஷ்மணன் ஜெயம் ரவியின் நடிப்பு துடிப்பு. டயலாக் டெலிவரி தீ! ஹீரோயின் நிதி அகர்வால் அழகாக இருக்கிறார். கவர்ச்சியாக வருகிறார், போகிறார். டூயட் பாட்டில் மேடம் செம ஹாட்!…

Read More

மாஸ்டர்’ சினிமா விமர்சனம்

‘மாஸ்டர்’ சினிமா விமர்சனம். வெள்ளித் திரைக்கு வந்துசேர, கடந்த சித்திரையிலிருந்து காத்திருந்த ‘மாஸ்டர்.’ கொரோனா மெர்சலுக்குபின், தளபதி ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கும் உற்சாகப் ‘பொங்கல்!’ தனது அநியாய அடாவடி கொலைபாதகச் செயல்களுக்கு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கைதியாக இருக்கிற சிறுவர்களை, இளைஞர்களைப் பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. அந்த பள்ளிக்கு வாத்தியாராக வருகிற விஜய் போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் அந்த சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டி திருத்தி, விஜய் சேதுபதிக்கு ரிவிட் அடித்து RIPபன் கட்டுகிறார். வழக்கமான ஹீரோயிஸக் கதை லோகேஷ் கனகராஜின் திரைக்கதை, விஜய் – விஜய் சேதுபதி என்ற இரண்டு பெரிய ஹீரோக்களின் அதகள அட்டகாசத்தால் வேகமெடுக்கிறது. தளபதி விஜய் முகத்தில் ஸ்டூடண்டு கலை, பார்ப்பது புரொபசர் வேலை என ‘தெறி’க்க விடுகிறார். அசத்தல் என்ட்ரீ, ஆக்ரோஷ சண்டை என அவர் வருகிற காட்சிகளில் விசிலால் அதிர்கிறது…

Read More

ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம்

ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம்.   அஜயன் பாலாஇயக்கத்தில தாஜ்நூர் இசையில் கிட்ஸ் Vs கொரோனா : டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஸ்டண்ட் மாஸ்டர் மாஸ்டர் வில்லன் நடிகர் ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம் பொங்கலுக்கு வருகிறது புதிய கொரொனா எதிர்ப்பு இசை கொரோனா போய்விட்டது என சிலரும்.. இல்லை இல்லை உருமாறிய கொரொனா வால் பெரும் அழிவு காத்திருக்கிறது என வேறு சிலரும் உலகம் முழுக்க பேசிக்கொண்டிருக்கின்றனர். இது இப்படியிருக்க தமிழ்நாட்டில் மாஸ்டருக்கு 100 சதவிகிதமா 50 சதவிகிதமா என சினிமா குறித்து வேறு சிலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர் இப்படி எல்லோருமே பெரியவர்களுக்கான விஷயமாய் யோசிக்கும் வேளையில் கொரொனாவால் உலகம் முழுக்க குழந்தைகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம் பள்ளி வாழ்க்கையில் அவர்களுக்கு நியாயமாய் கRelவேண்டிய கல்வியைத்தாண்டி நட்பு விளையாட்டு…

Read More

” பிசாசு 2 ” படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்

” பிசாசு 2 ” படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்.   மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலை பாட அமேரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார் பாடகர் சித் ஶ்ரீராம். ஏற்கனவே இப்படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது…

Read More

கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-

20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு.   இயக்குநர் பாரதிராஜாவின் “என் உயிர்த் தோழன்” படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-வின் நிலைமையை பாருங்க.. கூடவே உதவுங்க ப்ளீஸ் 😢 இந்த பாபு தான் கமிட் ஆன முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு. ஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு “மனசார வாழ்த்துங்களேன்” படத்தில்நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்குமுதுகில் அடிபட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த போதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து…

Read More

முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம்

முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம். உரியடி மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் பன்னிக்குட்டி, கடைசி விவசாயி, சத்திய சோதனை, தர்புகா சிவா இயக்கும் முதல் நீ முடிவும் நீ போன்ற படங்களின் தயாரிப்பாளர் சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் அடுத்ததாக சுரேஷ் சங்கையா இயக்கும் அவரது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார். சுரேஷ் சங்கையா “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் ப்ரேம் ஜி அமரன் நடிப்பில் வெளியாக இருக்கும் “சத்திய சோதனை” படத்தின் இயக்குனர். தற்போது அவர் இயக்கும் இந்த புதிய படம், ஒரு சமூக பிரச்சினை பற்றி பேச கூடிய படம். தூத்துக்குடி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம்…

Read More

த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “யாமா”

த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் “யாமா”. ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் திரு. செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் திரு.சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு அவர்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் தெரு” “அசுரன் ” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார் மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில்”யாமா” திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு மக்களின் ஆதரவு வேண்டும் என்று படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன் !

வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன் .   தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள். மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர் சமீப காலத்தில் அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் கோலோச்சும் நடிகர் சித்தார்த் குமரன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார். சின்னத்திரை மூலம் தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் பிரபல நடிகர் தான் சித்தார்த் குமரன். முதலில் சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். பிறகு என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல மெகா சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். பின் “ரெக்க…

Read More