மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது!!

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது! சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது…வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. திரு.ஜெ.சபரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.. இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.

Read More

இயக்குநர் அமீர் அறிக்கை

இயக்குநர் அமீர் அறிக்கை.   தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகம்மது நபி அவர்களை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் என்னும் அயோக்கியனை கைது செய்த தமிழக அரசிற்கு என்னுடைய பாராட்டுக்கள். சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற…

Read More

லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா

#லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா   அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ராஜலிங்கா. இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துமிருக்கிறார். இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதிதஞ்சாவூர்மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர். இவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பார்த்த திருச்சி விநியோகஸ்தர் மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம்குறித்துஇயக்குநர்ஷிவபாரதி கூறியதாவது…. இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன்.பார்த்தவுடன் காதல் பழகியவுடன் அத்துமீறல் என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும். அன்றாடம் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்ட வாட்சப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்சப்பை திறந்தால் ஒரு…

Read More

எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்

எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்     .   சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னி லை வகித்தனர். தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர்…

Read More

சட்டப்பேரவையில் விஜயதாரணியைக் கண்டு மிரண்ட ஆளுநர், எடப்பாடி, ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் விஜயதாரணியைக் கண்டு மிரண்ட ஆளுநர், எடப்பாடி, ஸ்டாலின்.   சட்டப்பேரவையில் விஜயதாரணியைக் கண்டு மிரண்ட ஆளுநர், எடப்பாடி, ஸ்டாலின்! இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக கலைவாணர் அரங்கம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. காலை 9 மணிக்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண்மணி. சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் கெடுபிடியாக இருந்தது. காரிலிருந்து இறங்கிய போது, தலையில் பச்சை கலரில் தலைப்பாகை கட்டி கம்பீரமாக வெளியே வந்தார் காங்கிரஸ் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. பார்த்தவர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். வந்தவர் நேரடியாக சட்டமன்றத்திற்குள் சென்றார். உள்ளே நுழைந்ததும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆச்சரியமாக பார்த்தனர். கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரது பார்வையும் ஒரே நேரத்தில் விஜயதாரணி பக்கம் கவனம் பெறும் வகையில் இருந்தது.அவர் ஏன் தலைப்பாகையோடு…

Read More

ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், தலைவர் ராம மோகன ராவ் பேட்டி

ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், தலைவர் ராம மோகன ராவ் பேட்டி.   ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், நான் நேரடி அரசியலுக்கு வர மாட்டேன் என மதுரையில் ஆர்.எம்.ஆர் பாசறையின் தலைவர் ராம மோகன ராவ் பேட்டி மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள திருமலை நாயக்கர் முழு உருவ சிலைக்கு ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராம மோகன ராவ் மாலை அணிவித்து மரியாதை செய்தார், முன்னதாக ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் கூறுகையில் “ஆர்.எம்.ஆர் பாசறை ஒரு சமுதாய இயக்கமாக செயல்படுகிறது, இந்த சமுதாய அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும், ஜெயலலிதாவுடன் நான் 6…

Read More

அமைச்சர் செயலால் முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு..! பதறிப்போன அதிகாரிகள்.

அமைச்சர் செயலால் முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு..! பதறிப்போன அதிகாரிகள். சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரை சாலை. முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்தனர்.கடற்கரை சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்…. முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது.ஆனால் அருகில் சென்ற காவலர்கள்அந்த மனிதர் யார் என்று…

Read More

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ 5 மொழிகளில் வெளியாகிறது..

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி  5 மொழிகளில் வெளியாகிறது..     ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ தமிழ்-தெலுங்கு-மலையாளம்-கன்னடம்-ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை யுஎஃபோ மூவிஸ் இந்தியா லிமிடட் (UFO Moviez India Ltd) விநியோகிக்கிறது. 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஆக்‌ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப் பின்னணி என பல்வேறு பின்புலங்களில் உணர்வுகள் தத்ரூபமாக, சில நேரங்களில் மிகவும் அப்பட்டமாகக் கொப்பளிக்கும் அளவுக்கு படங்களைக் கொடுப்பவர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் தற்போது ‘டி கம்பனி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் டி கம்பெனி…

Read More

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்*

*தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்*. சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த ‘தெனாலி’ படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்கை தயாரித்து நடிக்கிறார். ‘கூகுள் குட்டப்பன்’…

Read More

மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம்

மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம்.   மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்….மறைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு அவில்தார் பழனி அவர்களுக்கு உயரிய விருதான “வீர் சக்ரா”விருதினை குடியரசு தினத்தன்று வழங்கி பெருமை சேர்த்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்….நடிகர் உதயா, “செக்யூரிட்டி” படக்குழுவினரும் இவ்விருதினை அவருக்கு வழங்குமாறு கோரிக்கை கடிதம் 4 .1 2021 பிரதமர் மோடிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது…..அதன் கோரிக்கை கடிதத்தை மாநிலத் தலைவர் L.முருகன் அவர்களிடம் நேரடியாக உதயா வழங்கினார்….பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும், ராணுவத் துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு மாநிலத் தலைவர் முனைவர் எல்.முருகன் அவர்களுக்கும் தனது நன்றி கடிதத்தை தனது சார்பாகவும் ” செக்யூரிட்டி” படக்குழுவினர்…

Read More