ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், தலைவர் ராம மோகன ராவ் பேட்டி

ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், தலைவர் ராம மோகன ராவ் பேட்டி.

 

ஜெயலலிதா மட்டுமே என் தலைவர், நான் நேரடி அரசியலுக்கு வர மாட்டேன் என மதுரையில் ஆர்.எம்.ஆர் பாசறையின் தலைவர் ராம மோகன ராவ் பேட்டி

மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள திருமலை நாயக்கர் முழு உருவ சிலைக்கு ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனத் தலைவரும், தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராம மோகன ராவ் மாலை அணிவித்து மரியாதை செய்தார், முன்னதாக ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் கூறுகையில் “ஆர்.எம்.ஆர் பாசறை ஒரு சமுதாய இயக்கமாக செயல்படுகிறது, இந்த சமுதாய அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும், ஜெயலலிதாவுடன் நான் 6 ஆண்டாக பணியாற்றியவன், ஜெயலலிதா எனக்கு தலைவராக விளங்கியவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் தெருவுக்கு தள்ளப்பட்டேன், நான் நேரடி அரசியலுக்கு வர மாட்டேன், தெலுங்கு சமுதாயத்தில் தலைவரை உருவாக்குவேன், சசிகலா விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு, ஜெயலலிதா மரணம் குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது” என கூறினார்

Related posts

Leave a Comment