மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன . இதோ ஒரு புது ஆல்பமாக வந்திருப்பதுதான் “மழை சாரல் ” . இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார். ‘ காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன. ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பாடல்களை உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம்…
Read MoreDay: June 22, 2019
17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி!
பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை ‘பார்த்தாலே பரவசம்’ (2001) மற்றும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான…
Read Moreதர்மபிரபு – டிரைலர்!
ஆன் லைனை அலப்பறைச் செய்த விஜய்-யின் ‘ பிகில்’ போஸ்டர்கள்!
கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் விஜய்யின் 63ஆவது படமான பிகில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) மாலை வெளியானது முதல் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் இன்று பிறந்தநாள் காணும் விஜய்க்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்தையும், ட்விட்டர் மூலம் ட்ரெண்டிங்கையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை சிறப்பிக்கும் மற்றொரு அம்சமாக முன்னரே அறிவித்தபடி, பிகில் படத்தின் இரண்டாவது லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது படக்குழு. தந்தை-மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் வரும் விஜய்யின் நான்கு விதமான தோற்றங்கள் இந்த போஸ்டரில் வெளியாகியுள்ளது. குப்பத்தில் சக்தி வாய்ந்த நபராக இருக்கும் தந்தையின் பெயர் பிகில் எனவும், கால் பந்தாட்ட வீரராக வரும் மகனின் பெயர் மைக்கேல் எனவும் போஸ்டரை…
Read Moreவிண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்த அல்லி நகர மாணவிக்கு உதவிய விஜய் சேதுபதி!
இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்! தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளி யில் தமிழ் வழியில் படித்தவர் .தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% / ‘A ” கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘இஸ்ரோ” ” சார்பாக விண் வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் . தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி “Analog austronaut training centre” என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிச் கட்டணம்,…
Read Moreபாடகியும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஓர் புதிய சிகரத்தை எட்டி உள்ளார்.
யூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக , திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர். இந்த தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . இந்தத் தொடர் ஹெரோஸ்ஸை உருவாக்கிய…
Read Moreமோசடி – விமர்சனம்!
2017-ஆம் ஆண்டு டிமானிடேசன் என்ற ஒன்று நாட்டை அதகளப்படுத்தியது. அந்த மேட்டரை கதையோடு கோர்த்து விட்டதில் மோசடியின் இயக்குநர் ட்ராஸடி இல்லா பயணத்தைத் தொடங்கி விட்டார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் சதுரங்கவேட்டை படத்தை கண்முன் கொண்டு வந்து காயப்படுத்தினாலும் நாயகன் போலீஸ்டேசனில் தான் மக்களை ஏமாற்றுவதற்கான காரணத்தைச் சொல்லும் இடம் ஆறுதலைத் தருகிறது. போகிற போக்கில் இதுவும் ஒருபடம் என்ற அலுப்பைத் தரும் விசயங்கள் படத்தில் இல்லாமல் இல்லை. அதே சமயம் வொர்த்தான சில விசயங்களும் படத்தில் இருக்கவே செய்கறது. முக்கியமாய் கருப்புப் பணத்திற்கு எதிராக நாயகன் க்ளைமாக்ஸில் சொல்லும் விசயங்கள் எல்லாம் யோசிக்கக் கூடியவை. நடிகர்களின் நடிப்பு உள்பட பின்னணி இசை, டப்பிங், சவுண்ட் எஃபெக்ட் போன்ற விசயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கூடுமான வரை இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் படத்தைக் காப்பாற்றி…
Read Moreகாங்கிரஸைக் கழட்டி விட்டு விட்டு தனித்து போட்டி! – திமுக வில் கோஷம்!
காங்கிரஸூக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது.. வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.. தமிழ் நாட்டில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது. திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நேரு, கூட்டணி குறித்தும் காரசாரமாக கருத்து தெரிவித்தார். “உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். இது கட்சியின் கருத்தல்ல. என்னுடைய தனிப்பட்ட கருத்து. தற்போது கூட்டணி இணைந்து அனைவரும்…
Read More