கடைசி நாளில் நிகழ்ந்த அதிசயம் நியூசிலாந்து முதன்முறையாக உலக சாம்பியன்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக ஐந்துநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக இரத்து செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 5 ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் விராட் கோலி (8 ரன்), புஜாரா (12 ரன்) களத்தில் இருந்தனர். மழை மற்றும் மோசமான வானிலையால் ஏறக்குறைய 2½ நாள் ஆட்டம் பாதிப்புக்குள்ளானதால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6 ஆவது நாளுக்குப்…

Read More

கவர்னர் உரை ஏமாற்றமளிக்கிறது – எடப்பாடி கே.பழனிச்சாமி

சட்டசபை  கூட்டத்தில் கவர்னர்  உரைக்குப் பின்  செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றனர். அதில் முக்கியமான வாக்குறுதிகள் கூட கவர்னர் உரையில் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். சட்டப்பேரவையிலும் ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். ஆனால், அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பேசியது திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து…

Read More

முதல் அமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார ஆலோசனை குழு

தமிழக சட்டசபையின்  16 வது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் சபை நடக்கிறது. முதல் நாள் கவர்னர் உரையுடன் தொடங்கியது. சபைக்கு முன்னரே முதல்-அமைச்சர்  உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வந்துவிட, பின்னர் சபைக்கு வந்த கவர்னரை  சபாநாயகர் அப்பாவு வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தார். பின்னர் கவர்னர் உரையை வாசித்தார். அதில் பல்வேறு சிறப்பம்சங்கள், அரசின் கொள்கை குறிப்புகள், எதிர்கால திட்டங்கள் இருந்தாலும் முக்கியமான பல அமசங்கள் இருந்தன. அதில் முக்கிய அம்சமாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு  ஆலோசனை  வழங்க  முதல்-அமைச்சருக்கான  பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னர் உரையில் கூறி இருப்பதாவது:- வரும் சில…

Read More

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டமுன்வடிவு

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த தேர்வைக் கொண்டு வந்தது முதலே தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், 2017 முதல் தொடர்ந்து நீட் தேர்வு மூலமே மருத்துவ சேர்க்கை நடந்து வருகின்றன. இதன் காரணமாகக் கிராமப்புற மற்றும் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வால் தங்களது மருத்துவ கனவு வெறும் கனவாகவே இருந்துவிடுமோ, மருத்துவ படிப்பில் சேர முடியாதோ என்ற அச்சத்தில் மாணவி அனிதா தொடங்கி சுமார் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில், ’நீட் தேர்வை ரத்து செய்யக் கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப் பேரவைக்…

Read More

குடும்ப அட்டை 15 நாட்களில் வழங்கப்படும் – சட்டப்பேரவையில் ஆளுநர் அறிவிப்பு

தமிழகத்தில் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று நடைபெற்றது. தனது உரையில் ஆளுநர், ‘புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கப்பட்டால், விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும். அல்லது குடும்ப அட்டை வழங்கப்படாததற்குக் காரணம் சொல்லவேண்டும். அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த காலகட்டத்திற்குள் குடும்ப அட்டை பெற முடியவில்லை என்றும் அதற்கு உரியக் காரணம் சொல்லப்படுவது இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயத்தில் குடும்ப அட்டை விண்ணப்பித்துப் பெறுவதற்குள் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர். இந்த சூழலில் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில், உரை…

Read More

லோக் ஆயுக்தாவுக்கு புத்துயிர் – தமிழ்நாடுகவர்னர் உரையில் அறிவிப்பு

தமிழக ஆளுநர் உரையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு புத்துயிர் அளிப்பது பற்றியும், ஊழல் ஒழிப்புத் துறை முடுக்கிவிடப்படுவது பற்றியும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயக்தா அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு 2014-ல் சட்டம் கொண்டுவந்தது. ஆனால் இந்தியாவில் 20 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவியபோதும் கடந்த அதிமுக ஆட்சியில் அது தாமதப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்காக வழக்கும் தொடுக்கப்பட்டு நீதிமன்றமும் இது தொடர்பாக அப்போது அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் லோக் ஆயக்தா அமைப்பு நிறுவப்பட்டது. இதில் லோக் ஆயக்தா தலைவர் மற்றும்…

Read More

திரையரங்குகளை திறக்க அனுமதியுங்கள் தமிழ்நாடு அரசுக்கு பாரதிராஜா வேண்டுகோள்

தமிழக அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் சூழ்நிலையில் திரைப்படத்துறையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது இதற்கு நன்றி தெரிவித்துள்ள மூத்த இயக்குநரும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம். நம் மண்ணின் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள்… கொரோனா காலகட்டத்திலும் தீவிர செயலாற்றி அதன் எண்ணிக்கையை உதிர்த்தது,  தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பெடுக்கும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவே இரசிக்கிறோம். சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் துறைசார்ந்த அரசு இயந்திரத்திற்கும் எம் நன்றிகள். கட்டுப்படுத்தப்பட்ட இக்கொரோனா காலகட்டத்திலிருந்து மக்கள் இயல்பை நோக்கித் திரும்ப கவனமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் வேளையில் திரைத்துறையும் மீள தளர்வுகள்…

Read More

கட்டுப்பாடு கடைப்பிடிக்க திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்

கொரோனா கால பொது ஊரடங்கின் தளர்வுகளின் ஒரு பகுதியாக, இன்று (ஜூன் 21) முதல் 100 நபர்களுக்கு மிகாமல் பணியமர்த்தி படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.முரளி @ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளை துவக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து திரை உலகை காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வரிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து மனு கொடுத்தோம். அதன் முதல்படியாக தமிழக முதல்வர் 100 நபர்களுக்குள் குழுவினரை வைத்து படப்பிடிப்பு துவக்கலாம். படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளையும் நடத்தலாம் என ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக…

Read More

Fwd: தமிழ்நாடு அரசை முழுமையாக நம்புகிறோம் – இயக்குநர் பா.ரஞ்சித்

நீலம் பண்பாட்டு மையம் எனும் அமைப்பு மூலம் அரசியல், சமூகம், சினிமா சார்ந்த பிரச்சினைகளில் தனது கருத்துகளை சமூக வலைத்தளங்கள், அறிக்கைகள் மூலமாக தெரிவித்து வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித் நீட் தேர்வு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், மற்றும் நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்பட்டு அடிப்படை கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சமுதாயத்தில் வர்க்கம், சாதி, பாலினம், இடம் சார்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன இதன் காரணமாக எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டை உறுதிப் படுத்தியிருக்கிறது. ஆனால் நீட் தேர்வு அத்தகைய நோக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது சமமான வாய்ப்பைப் பெற இயலாதவர்களை வாய்ப்பு பெற்றவர்களுக்கு இணையாக நிறுத்துகிறது இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க முடியாது ஆனால், நீட் தேர்வை ஒன்றிய அரசு…

Read More

அடிமைகள் வாழ்க்கையை பேசும் மாடத்தி

தீண்டப்படாத சாதிகள் இருப்பதைப்போன்று காணக்கூடாதா சாதியினராக இருந்தவர்கள் புதிரை வண்ணார்கள் இவர்கள் பகலில் நடமாடக் கூடாது இரவில் மட்டும்தான் வர வேண்டும் பட்டியலின சாதியினரை ஆதிக்கசாதியினர் ஒடுக்கினார்களோ அதேப் போன்று பட்டியலின மக்களால் அடக்கி வேலை வாங்கப்பட்ட சமூகம் புதிரை வண்ணார் தாழ்த்தப்பட்ட மக்களின் துணிகளை துவைப்பதே இவர்களின் குலத்தொழில் இவர்கள் செல்லும் வழியில் மேல் சாதியினர் வந்துவிட்டால் அவர்கள் கண்களில் படாமல் மறைந்து கொள்ள வேண்டும்சுருக்கமாக கூறுவது என்றால் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைகள் இவர்கள் இந்த சமூகத்தில் பதின்ம வயது பெண்ணின் பருவ வாழ்க்கையை பேசுவதுதான் மாடத்தி திரைப்படம்இயக்குநர் லீனா மணிமேகலை பல ஆவணப் படங்களை தயாரித்து, இயக்கியவர். ஏற்கெனவே ‘செங்கடல்’ என்ற படத்தையும் தயாரித்து, இயக்கியிருந்தார்.இப்போது தனது சொந்த நிறுவனமான கருவாச்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்து எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘மாடத்தி’.கூட்டு…

Read More