‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!

சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

கன்னட நடிகர், இயக்குநர் ரக்‌ஷித் ஷெட்டி தலைமையிலான தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸ், தனது ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற கன்னடத் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக, மொத்தம் ரூ. 25 லட்சம் செலுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இசை பயன்பாடு உரிமம் குறைவான நீளத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம் என்ற திரைப்படத் தயாரிப்பாளர்களின் வாதத்தை நீதிபதி தேஜஸ் காரியா நிராகரித்தார். பதிப்புரிமை மீறல் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக பரம்வா ஸ்டுடியோஸிற்கும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

“‘ஓம்மே நின்னானு’ பாடல் 31 வினாடிகளுக்கும், ‘நியாயா எல்லிடே’ பாடல் 7 வினாடிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறைவான நீளம் கிடையாது. ஏனெனில் பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 14(d)(i)(A)-ன் படி, திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அசல் புகைப்படம் கூட உரிமையாளருக்கு வழங்கப்படும் பிரத்யேக உரிமையாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி ‘நியாயா எல்லிடே’ பாடலின் ஒலி-ஒளிக் காட்சியிலிருந்து ஒரு நொடி கூட பயன்படுத்த முடியாது” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறைக்கு அனுப்பாமல் இருக்கவும், கோர்ட் உத்தரவை அவமதித்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காகவும் ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

”இருப்பினும், பிரதிவாதிகள் 1 மற்றும் 2 ஆகியோர் தங்கள் செயல்களுக்காக வருத்தம் தெரிவித்து சமர்ப்பித்த 31.10.2025 தேதியிட்ட பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.12.08.2024 தேதியிட்ட உத்தரவை அவமதித்ததற்காக பிரதிவாதி எண் 2-க்கு சிறைத் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்த அவமதிப்பில் இருந்து விடுவிக்கவும் இரண்டு வாரங்களுக்குள் ரூ. 5,00,000 முன்மாதிரி செலவுத் தொகையை வாதிக்குச் செலுத்துமாறு உத்தரவிடப்படுகிறது”.

கடந்த 2020-ல் நிறைவேற்றப்பட்ட உரிமை மாற்றப் பத்திரத்தின் அடிப்படையில் அந்த இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளுக்கு எம்.ஆர்.டி மியூசிக் இசை நிறுவனம் உரிமை கோரியது. ’பேச்சிலர் பார்டி’ திரைப்படத்தில் உரிமம் பெறாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியது. ஒரு காட்சியில் ஒரு பாடல் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது, மற்றொன்று கதைக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு வகுப்பறைக் காட்சியில் பாடப்பட்டது. இப்படம் ஜனவரி 2024 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, பின்னர் ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 12, 2024 அன்று பிரதிவாதிகள் நான்கு வாரங்களுக்குள் ரூ. 20 லட்சத்தைச் செலுத்தவும், உரிமம் பெறாமல் பயன்படுத்தியுள்ள பாடல்களை அகற்றவும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் தொடர்ந்து பாடல்களை பயன்படுத்தியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் பிரதிவாதிகள் அபராதத் தொகையை செலுத்தினாலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.

டிஜிட்டல் தளங்கள் உட்பட பல தளங்களிலும் எம்.ஆர்.டி அந்தப் படைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததைக் குறிப்பிட்ட நீதிமன்றம், பிரிவு 19(4)-ன் கீழ் உரிமை இழப்பு வாதத்தை நிராகரித்தது. பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், வழக்குத் தொடரப்பட்ட தேதியில் இருந்து அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.

’நியாய எல்லிடே’ வெறும் 7 வினாடிகளுக்கும், ’ஓம்மே நின்னானு’ 31 வினாடிகளுக்கும் மட்டுமே இருப்பதைக் குறிப்பிட்டு ’மிக குறைவான நேரமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ என ரக்‌ஷித் ஷெட்டியும் பரம்வா ஸ்டுடியோஸும் வாதிட்டனர். இருப்பினும், நீதிமன்றம் அந்தக் காணொளிகளுக்குப் பின்னால் உள்ள படைப்பு நோக்கத்தை ஆராய்ந்தது.

வாதத்தில் பயன்படுத்தப்பட்ட ’தற்செயலானவை’ அல்லது ’தொடர்பற்றவை’ என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மாறாக, திரைப்படத்தின் கதையை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பாடல்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். ’நியாயா எல்லிடே’ என்ற தலைப்புக்கு ’நீதி எங்கே?’ என்று பொருள் என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கதாநாயகன் துன்பப்படும்போது இந்தப் பாடலை ஒலிக்கச் செய்தது, அவனது அவலநிலையை எடுத்துக்காட்டுவதற்கான திட்டமிட்ட படைப்பு என்பதை இது தெளிவாகக் காட்டுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

பாடல்கள் வணிக ஆதாயத்திற்காகவும், கதைக்கு ஏற்றவாறும் பயன்படுத்தப்பட்டதால், அவை ‘டி மினிமிஸ்’ விதிவிலக்கிற்குத் தகுதி பெறவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

மொத்த நிதி உத்தரவு இரண்டு தனித்தனி வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது:

1) ஷெட்டி மற்றும் பரம்வா ஸ்டுடியோஸ் முன்பு எம்.ஆர்.டி மியூசிக்கிடம் டெபாசிட் செய்திருந்த ரூ. 20 லட்சத்தை விடுவிக்குமாறு ரெஜிஸ்ட்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2) திரைப்படத் தயாரிப்பாளர்கள் 2024ஆம் ஆண்டு டெபாசிட் காலக்கெடுவைத் தவறவிட்டதால், நீதிமன்றம் கூடுதலாக ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது.

எம்ஆர்டி மியூசிக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்வாதி சுகுமார், வழக்கறிஞர்கள் அசவாரி ஜெயின், கீதாஞ்சலி விஸ்வநாதன், ஐரா லா-வை சேர்ந்த சிவன்ஷ் திவாரி மற்றும் வழக்கறிஞர்கள் ரித்திக் ரகுவன்ஷி, ஷ்ருதுலா மூர்த்தி, ரிஷிகா அகர்வால் ஆகியோர் ஆஜராகினர். பரம்வா ஸ்டுடியோஸ் மற்றும் பலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜே சாய் தீபக் மற்றும் வழக்கறிஞர்கள் மீனாட்சி ஓக்ரா, சாம்ராட் எஸ் காங் மற்றும் விஷ்ணு கம்பீர் ஆகியோர் ஆஜராகினர்.

Related posts

Leave a Comment