சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

வரவிருக்கும் இசை நாடகமான ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே 21 அன்று வெளியிட்டார். இது படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத தருணமாகும். மூத்த திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில், E5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகெங்கும் வெளியிடும் ‘சாருகேசி’, இசை, உணர்ச்சிகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஆன்மாவைத் தொடும் சினிமா அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

இப்படத்தில் ஒய் ஜீ மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் இசையமைப்பாளரான தேனிசை தென்றல் தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஏக்க உணர்வைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒய். ஜீ மகேந்திரா நிகழ்த்திய புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நாடகமே சாருகேசி. இப்படம், செவ்வியல் இசை, உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கலைப் பாரம்பரியத்தின் சாராம்சத்தை, ஒரு ஈர்க்கக்கூடிய சினிமா கதைக்களத்தின் மூலம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதன் வலுவான இசை அடித்தளம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் காரணமாக, இப்படத்தை சங்கராபரணம் மற்றும் சிந்து பைரவி போன்ற புகழ்பெற்ற படங்களின் வரிசையில் ஒரு காலத்தால் அழியாத கிளாசிக் என்று அதன் தயாரிப்பாளர்கள் வர்ணிக்கின்றனர்.

இந்த நிகழ்வில் நடிகர் ஒய். ஜீ மகேந்திரா, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேவா, நடிகை ரம்யா பாண்டியன், தயாரிப்பாளர் அருண், இயக்குநர் திருமலை, ஈ5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன், எம்.சி.பி. ஜெயச்சந்திரன், லஹரி மியூசிக் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினர் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டியதோடு, கலாச்சாரச் செழுமையும் இசையும் நிறைந்த ஒரு கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர்களைப் பாராட்டி, படத்தின் வெற்றிக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இத்தகைய திறமையான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, ‘சாருகேசி’ திரைப்படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றும் பகிர்ந்துகொண்டார்.

வலிமையான கதைக்களம், ஆழமான உணர்வுகள், நினைவில் நிற்கும் இசை மற்றும் இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த கலைஞர்களின் நடிப்பு ஆகியவற்றின் துணையோடு, பார்வையாளர்களுக்கு ஒரு நெகிழ்வான மற்றும் செழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க ‘சாருகேசி’ தயாராகி வருகிறது.

E5 Entertainments நிறுவனத்தைச் சேர்ந்த J. ஜெயகிருஷ்ணன் அவர்களின் வெளியீட்டில், ஜீன் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக ‘சாருகேசி’ முழுமையாகத் தயாராக உள்ளது.

Related posts

Leave a Comment