ஷங்கர் மகள் திருமணமும் முதல்அமைச்சரின் பெருந்தன்மையும்

தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றபிறகு ஆட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது.அது மட்டுமல்ல அரசியல் நாகரிகத்தில், தன்னை ஜென்ம விரோதியாக பார்ப்பவர்களிடத்திலும் மு.க.ஸ்டாலின் அணுகுமுறை எதிரிகளையும் வெட்கப்பட வைத்திருக்கிறது

நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை கடுமையாக விமர்சிக்கப்படும் கட்சி திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைவர்களை காட்டிலும் மு.க.ஸ்டாலினை தன் தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக கழுவி ஊற்ற தவறவில்லை சீமான் அந்த ஈரம் காய்வதற்குள் அவரது தந்தை காலமானார்
அந்த செய்தியறிந்த மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவர், முதல்வர் என்கிறமுறையில் அனுதாபச்செய்தி வெளியிட்டதே போதுமானது அதிகபட்சமானது ஆனால் அதையும் கடந்து சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துக்கத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
இந்த சூழ்நிலையில் பிரபல இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்திற்கு மாமல்லபுரம் வரை நீண்ட பயணம் செய்து மணமக்களை வாழ்த்தியது அரசியல் வட்டாரத்தை காட்டிலும் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான முதல் படமான”ஜென்டில்மேன்” திமுகவின் அடிப்படைக் கொள்கையான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான படம் அடுத்து அவர் தயாரித்து இயக்கிய முதல்வன் படம் முழுக்க முழுக்க மறைந்தமுன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை, ஆட்சியை விமர்சித்து, கேலி செய்து எடுக்கப்பட்ட படம் ஷங்கர் இயக்கிய அனைத்து தமிழ் படங்களிலும் திமுக, அதன் தலைவர்களை அரசியல் பகடி செய்ய தவறியதில்லை இருந்தபோதிலும் “இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் ” என்பதற்கு ஏற்ப ஷங்கர் மகள் திருமணத்தில் தன் மகன் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சர்மா.சுப்ரமணி ஆகியோருடன் சென்று கலந்துகொண்டதாகவே சினிமா வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது

இந்நிலையில் திருமணத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு  ட்வீட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் அதில்”மகளின் திருமணத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தியது மறக்க முடியாத “. இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மணமக்களை வாழ்த்திய
மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்

Related posts

Leave a Comment