சீறிய சிங்காரவேலன் மிரட்டும் உஷா ராஜேந்தர் சிலம்பரசன் பஞ்சாயத்தில் உண்மை நிலவரம் என்ன?

தமிழ் சினிமா நடிகர்கள் நடிக்கும் படங்களின் தகவல்களை சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கும் வெளிநாட்டு மைதானங்களில் பேனர் வைத்து கேட்டு அசரடித்தார்கள் நடிகர் சிலம்பரசன் நடித்த படங்களின்தயாரிப்பாளர்கள், நடிப்பதற்காக முன்பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள், படவெளியீட்டுக்காக ராஜேந்தர்கை நீட்டி வாங்கிய கடன் இவற்றின் மொத்த மதிப்பு 10 கோடி ரூபாய் சிலம்பரசன் ஒரு படத்தில் நடிப்பதற்காக தற்போது வாங்கும் சம்பளம் எட்டு கோடி ரூபாய்
 பாதிக்கப்பட்டவர்கள், கடனை திருப்பிக்கொடுக்க வேண்டியவர்களிடமும் தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உஷா ராஜேந்தர் அவர்களை அழைத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு எட்டப்படாமல் இடியாப்ப சிக்கலாக நீடிக்கிறது
 இந்த சூழ்நிலையில் சிலம்பரசன் நடிக்கும் படங்களுக்கு இடையூறு செய்தால் இந்திய பிரதமரிடம் முறையிடுவேன் என கூறி தமிழ் சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் சிலம்பரசனின் தயார் உஷா ராஜேந்தர் தொழில்சார்ந்த சிக்கல்களை சம்பந்தபட்ட சங்கங்களில் பேசி தீர்க்காமல் பிரதமரிடம் முறையிடுவேன் என கூறியிருப்பது ராஜேந்தர் குடும்பம் பாஜகவில் இணையப்போகிறதா என்கிற யூகங்களை ஏற்படுத்தியிருக்கிறது சிலம்பரசன் சம்பந்தமான பஞ்சாயத்து சம்பந்தமான சிறப்பு பார்வை
 தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் சிங்காரவேலன் சிலம்பரசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தடுக்கும் வகையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்சங்கம்
செயல்படுகிறது இதற்கு காரணம் ஆளும் திமுக அரசும், முதல்வரும் தாங்கள் சொல்வதை மட்டுமே கேட்பார் என்று கூறி தயாரிப்பாளர்களையும், திரை துறை சார்ந்த சங்கங்களையும் மிரட்டி வருகின்றனர் என குற்றம்சுமத்தி ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த பதிவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் ராமசாமி முரளியை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்திருந்தார்
இருவருமே திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் கட்சி தலைமை இதில் நேரடியாக தலையிட்டு இருவரிடமும் உண்மைநிலை பற்றிய விளக்கத்தை கேட்டறிந்தது ராமசாமி முரளி கூறிய விளக்கத்தை சிங்காரவேலன் ஏற்றுக்கொண்டதுடன் கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து செயல்பட உறுதியளித்தார்
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்ட போது அதன் உறுப்பினர் எண்ணிக்கை 31 பேர் சங்கம்தொடங்கப்பட்ட போது சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளில்ராஜேந்தர், சிங்காரவேலன், ஜே.எஸ்.கே.சதீஷ் மூவர் மட்டுமே தற்போது உள்ளனர் மற்ற அனைவரும் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்துவிட்டனர்
தனிமரம் தோப்பாகாது நாமளே குற்றசாட்டுக்கு உள்ளானவர்களாக இருந்து கொண்டு உறுப்பினர்களே இல்லாமல் லெட்டர்பேடு சங்கம் நடத்துவது நியாயமல்ல சிலம்பரசன் மீது இருக்கும் அனைத்து புகார்களுக்கும் உடனடியாக தீர்வுகாணுங்கள் தயாரிப்பாளர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பித்தாருங்கள், மைக்கேல் ராயப்பன் நஷ்டமடைந்திருப்பது உண்மை அவருக்கு நியாயமான இழப்பீட்டை சிலம்பரசன் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று மீண்டும் ராஜேந்தருக்கு தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியில் ஆடியோ பதிவின் மூலமாகவும் சிங்காரவேலன் வலியுறுத்தினார்
இந்த பதிவுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்தது ராஜேந்தர் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாகி போனது சிங்காரவேலன் கோரிக்கை
ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆதரவும் கிடைத்ததால் 24 மணி நேரத்துக்குள் ராஜேந்தர் எனது வேண்டுகோளை ஏற்று சிலம்பரசன் மீதான குற்றசாட்டு, பணப்பிரச்சினைக்கு தீர்வுகாண உத்திரவாதம் தரவில்லை என்றால் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் சங்கம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைக்கப்படும் முறைப்படி சங்கம் கலைக்கப்பட்டதாக சங்கங்களின் பதிவாளருக்கு கடிதம் அனுப்பபடும் என ராஜேந்தருக்கு தெரிவிக்கப்பட்டது அதற்கான ஆவணங்கள் தலைவர் ராஜேந்தருக்குஅனுப்பிவைக்கப்பட்டது
அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பது பழமொழி சிங்காரவேலன் சமாதானமாக பேசியபோது அடம்பிடித்த ராஜேந்தர் சங்கத்தை கலைப்பேன் என கூறியவுடன் அப்படி எதுவும் செய்துவிட வேண்டாம் சிலம்பரசன் சம்பந்தபட்ட பணப்பிரச்சினை, மைக்கேல் ராயப்பன் இழப்பீடு என அனைத்துக்கும் தீர்வு காணும் பணிகள் தொடங்கப்படும் என ராஜேந்தர் தரப்பில் உறுதிகூறப்பட்டது
2010ம் ஆண்டு சிலம்பரசன் நடிப்பதற்காக லிங்குசாமியின் திரைப்பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ், 1 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டிருந்தது மற்றொரு தயாரிப்பாளருக்கு 50 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது இவை இரண்டும் முதற்கட்டமாக திருப்பி வழங்கப்பட்டது
சிலம்பரசன் நடித்து வெளியான வாலு திரைப்பட வெளியீட்டின்போது ராஜேந்தர் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதை நடிகர்விஜய்யின் அப்போதைய மக்கள் தொடர்பாளர் அவரிடம் கூறியுள்ளார் உடனடியாக எட்டுக்கோடி ரூபாய் பணத்தை கடனாக கொடுத்து உதவியுள்ளார் விஜய் அதற்கு நன்றி கடனாகத்தான்புலி படத்தின் ஆடியோ வெளியீட்டில் ராஜேந்தர் நூற்றுக்கணக்கான புலிகளை கூறி விஜய் ஒரு கட்டத்தில் மேடையேறி ராஜேந்தரை பேசியது போதும் என அழைத்து கொண்டு மேடையை விட்டு இறங்கினார்
விஜய் கடனாககொடுத்த எட்டு கோடியில் 6 கோடி ரூபாய் மட்டும்
 திருப்பிக்கொடுக்கப்பட்டது மெர்சல் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு விஜய் வீட்டிற்கு சென்ற ராமசாமி முரளியுடன் செல்வகுமார் சென்றிருந்த போது ராஜேந்தர் கொடுக்க வேண்டிய பாக்கி தொகை பற்றி விஜய் கேட்டிருக்கின்றார் அது சம்பந்தமான விபரத்தை கேட்ட ராமசாமி முரளி 2 கோடி ரூபாயை செல்வகுமார் மூலம் விஜய்க்கு கொடுத்தனுப்பியுள்ளார் ஆண்டுகள் கடந்தாலும் ராஜேந்தர் இரண்டு கோடி ரூபாயை திருப்பிக்கொடுக்கவில்லை வாலு படம் நஷ்டம் நான் எப்படி இரண்டு கோடியை திருப்பித்தர முடியும் என வியாக்யானம் பேசிவந்துள்ளார்
சங்கத்தை கலைப்பேன் என்கிற சிங்காரவேலன் மிரட்டலுக்கு பின் நாகர்கோவிலில் இருந்த விஜய்
மக்கள் தொடர்பாளர் P.T.செல்வகுமாரை தொடர்பு கொண்ட ராஜேந்தர் இரண்டு கோடி ரூபாயை திருப்பிக்கொடுத்துவிடுகின்றேன் உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு வருமாறு அழைத்துள்ளார்
ராமசாமி முரளி தரப்பு குறைந்தபட்சம் வங்கி வட்டியாவது சேர்த்து தர வேண்டும் நாங்களும் வட்டிக்கு வாங்கித்தான் தொழில் செய்கின்றோம் என செல்வகுமாரிடம் கூறியுள்ளனர்
சிலம்பரசன் திரையுலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவரது தயார் உஷா ராஜேந்தர் மட்டுமே என்பது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்
சிலம்பரசன் நடிப்பதற்கான சம்பள விஷயங்களை பேசி அட்வான்ஸ் வாங்கும் உஷா ராஜேந்தர் அது சம்பந்தமான பஞ்சாயத்துகள் வருகிறபோது நேரடியாக பதில் சொல்லாமல் சிலம்பரசனை கேட்டு சொல்கிறேன் என்று முடிவு எட்டப்பாடாமல் நீர்த்து போகும் வேலையை செய்வார் உஷாராஜேந்தர்
 அதைதான் மைக்கேல் ராயப்பன் இழப்பீடு சம்பந்தமாக நடைபெறும் கூட்டத்திற்கு வரும் போது கையாள்கிறார் சிலம்பரசனுடன் கூட்டத்திற்கு வரவேண்டும் அல்லது அவரிடம் முடிவை கேட்டுவர வேண்டும் கூட்டத்தில் கலந்துகொண்டு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் சிலம்பரசனிடம் கேட்டு பதில் சொல்கிறேன் என்று அந்த கூட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வேலையை உஷாராஜேந்தர் தொடர்ச்சியாக செய்து வருகிறார் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்
பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர ராஜேந்தர் தரப்பில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் அதனை முடக்கி போடவும், மைக்கேல் ராயப்பனுக்கான இழப்பீட்டை கொடுக்காமல் தப்பிக்கும் வகையில் உஷா ராஜேந்தர் வீடியோ பதிவை வெளியிட்டிருக்கின்றார் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்
சிம்புவின் படங்களுக்கு தொடரும் பிரச்சனைகள் குறித்தும், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் உஷா ராஜேந்தர் பேசியுள்ளது

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திலிருந்து தொடங்கிய பிரச்சனைகள் சிம்புவை இன்றுவரை விடாமல் துரத்தி வருகின்றன. அண்மையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தொடங்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பும் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் சிம்பு படங்களுக்கு தொடரும் பிரச்சனைகள் குறித்தும், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் சிலம்பரசன். அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை, பட வெளியீட்டுக்கு முன்பு கொடுக்கிறேன் என்று சொன்ன மைக்கேல் ராயப்பன் கொடுக்கவில்லை.
எனது மீதி சம்பளத்தைக் கொடுத்துவிட்டுத் தான் படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார் சிலம்பரசன். பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிலம்பரசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட்டுக் கொடுத்தால் மட்டுமே, படம் நாளை வெளியாகும் என்றார்மைக்கேல் ராயப்பன்.

இது தொடர்பாக சிலம்பரசனிடம் கேட்ட போது, பணமே வரவிட்டாலும் பரவாயில்லை, படத்தைத் தயாரிப்பாளர் வெளியிடட்டும் என்று சொல்லிவிட்டார்.

இந்த பணம் தவிர்த்து, முன்னதாக சிலம்பரசனுக்குக் கொடுத்த பணத்துக்கு மைக்கேல் ராயப்பன் ஜிஎஸ்டி கட்டவில்லை. டி.டி.எஸ் பிடித்துள்ளார், அதையும் கட்டவில்லை. முதலில் கொடுத்த செக்கும் பணமில்லாமல் திரும்பிவிட்டது. இப்படி எந்தவிதத்திலுமே மைக்கேல் ராயப்பன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

பணத்தையும் விட்டுக்கொடுத்து, படத்தையும் வெளியிட்ட பிறகு மீண்டும் ஒரு பஞ்சாயத்து வைத்தார் மைக்கேல் ராயப்பன். அதாவது சம்பளமே வாங்காமல் சிலம்பரசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் ஒரு தீர்மானம் போடுகிறார். மைக்கேல் ராயப்பனுக்கு சம்பளமே இல்லாமல் சிலம்பரசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒவ்வொரு படத்துக்கும் 2 கோடியே 40 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் தீர்மானம் போடுகிறார்.
சிலம்பரசன் ஒப்புதல் இல்லாமல் தீர்மானம் கொண்டு வருவதற்கு இவர் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா? தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் கொண்டு வந்த தீர்மானத்துக்கு மேல்முறையீடே கிடையாது. எங்களைக் கப்பம் கட்டச் சொல்வதற்கு விஷால் யார்?.
தயாரிப்பாளர் சங்கத்தின் ட்ரஸ்ட்டில் இருந்த 7 கோடி ரூபாய் பணத்தையும், உறுப்பினர்கள் பணமான 7 கோடியையும் பலவிதத்தில் விரயம் செய்து காலி செய்துவிட்டார். இந்த 14 கோடி ரூபாயை என்ன செய்தீர்கள் என்று பொதுக்குழுவில் சண்டைப் போடும் போது, பதில் சொல்ல முடியாமல் விஷால் ஓடிவிட்டார். நாங்கள் வெற்றி பெற்றால் 14 கோடி ரூபாயைப் பெற்றுத் தருவோம் என்று சொல்லி ஜெயித்தவர்கள் விஷாலை எதுவும் கேட்காமல், அவர் போட்ட தீர்மானத்தை வைத்துக் கொண்டு சிலம்பரசனுக்கு ரெட் கார்டு போடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் அனைத்து பத்திரிக்கைகளிலும் சிலம்பரசனைப் பற்றி எவ்வளவு தவறாக சொல்ல முடியுமோ சொல்லிவிட்டார்.
ஒரு நடிகரை இந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளர் தவறாக பேசவே முடியாது. இதனைத் தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் மீது சிலம்பரசன் 1 கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்குப் போட்டுள்ளார். இப்படியொரு தயாரிப்பாளருக்கு ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும், கப்பம் கட்ட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது எப்படி முடியும்?. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, இவர்கள் எப்படி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியும்? நாங்கள் சிலம்பரசனின் படத்துக்கு எந்தவித இடைஞ்சலும் அளிக்கவில்லை
என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது ஆகஸ்ட் 6-ம் தேதி ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு தொடங்க விடமாட்டோம் என்று சொன்னார்கள். இந்த பஞ்சாயத்தைப் பேசி தீர்க்காமல் சிலம்பரசன் படப்பிடிப்புக்குப் போக முடியாது என்று சொன்னார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்று பஞ்சாயத்து பேச வரச் சொன்னதுக்காக சென்றேன். நீதிமன்றத்தில் உள்ள மைக்கேல் ராயப்பன் விஷயத்தை எடுத்து வைத்து பேசுகிறார்கள்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நீதிமன்றத்தில் இருக்கும் விஷயத்தை எடுத்துப் பேசுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஒவ்வொரு சிலம்பரசன் படத்துக்கும் பிரச்சினை. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தையும் அவ்வளவு கஷ்டப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறோம்.

ஒரு நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை இருக்கும் போது பஞ்சாயத்து கூட்டப்படுகிறது. அதற்கு செல்வமணி சார் ஏன் வந்தார் என்று புரியவில்லை. பெப்சியில் ஏதேனும் பிரச்சினை என்றால் செல்வமணி சார் வருவது நியாயம்.

அவரே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்னை அடியாள் மாதிரி பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார் . ஒரு வேளை பஞ்சாயத்து பேசி தீர்க்கப்படவில்லை என்றால், படத்துக்கு பெப்சி ஆட்களை அனுப்பக் கூடாது என்று சொல்வதற்காக அவரை வரவைத்துள்ளார்கள்.
தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று தொடங்கியதே இவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்துக் கொண்டே இருப்பதால் தான். தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்வதற்காக மட்டுமே இதை உருவாக்கினோம்.
என்ன தைரியத்தில் இவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று கேட்டால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எங்களுடைய பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
ஆனால், இப்படியொரு விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் துணைப்போக மாட்டார் என்று சொல்வேன். ஏனென்றால், திமுக கட்சிக்காக என்னுடைய கணவர் எப்படியெல்லாம் பாடுபட்டு இருக்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
திமுக கட்சிக்காக பல்வேறு மேடைகளில் பேசியிருக்கிறார். காலை 5 மணி வரை எல்லாம் பேசுவார். ஒரு கட்டத்தில் தொண்டையிலிருந்து ரத்தமாக வரும். அதெல்லாம் பொருட்படுத்தாமல் போய் பேசுபவர் என் கணவர்.
அதிமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி ஐயாவை கைது செய்தார்கள். அப்போது நான் போய் ஜெயிலை உடைத்து அவரை கூட்டுட்டு வருவேன் என்று சென்றவர் என் கணவர். அந்த அளவுக்கு திமுக கட்சிக்காக பாடுபட்டுள்ளார். திமுக கட்சிக்காக எந்தவொரு பிரதிபலனும் பாராமல் கடுமையாக உழைத்துள்ளோம்.
ஒரு காலமும் சிலம்பரசனின் படத்தை நிறுத்துவதற்கோ, ரெட் கார்டு போடுவதற்கோ முதல்வர் ஸ்டாலின் துணையாக இருக்க மாட்டார். ஆனால், அவருடைய பெயரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்ந்தால் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பேன், பாரத பிரதமர் மோடி ஐயாவையும் போய் சந்திப்பேன். இவ்வாறு ஆவேசமாக தெரிவித்துள்ளார் சிம்புவின்
தாயார் உஷா ராஜேந்தர்.
ஒரு பக்கம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ராஜேந்தர் சம்பந்தபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும் போது உஷா ராஜேந்தர் தங்கள் தரப்பில் எந்த தவறும் செய்யவில்லை என்கிற தொனியில் பேசியிருப்பது ராஜேந்தரும் – உஷா ராஜேந்தரும் பேசி வைத்துக்கொண்டு நாடகமாடுகிறார்களா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்

Related posts

Leave a Comment