கதை… நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் பவிஷ் 40,000 சம்பளம் வாங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.. இவரது காதலி நாகதுர்கா ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்.. இவர்கள் காதலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக போலீஸ் செல்வராகவனிடம் பிரச்சனை செல்கிறது.. நாயகிக்கு ஆதரவாக மாதர் சங்கத் தலைவி வனிதாவும் வருகிறார்.. என்னால் அவளை இனியும் காதலிக்க முடியாது.. என்கிறார்.. ஆனால் காதலியோ பவிஷ் வேண்டும் என்கிறார்.. இந்த சூழ்நிலையில் பவிஷ் ஒரு கண்டிஷன் போடுகிறார்.. நான் நம்முடைய நான்கு வருட காதலில் செய்தது எல்லாம் நீ நான்கு மாதத்தில் செய்தால் உன்னை காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன்.. இல்லையென்றால் லவ் பிரேக்கப் என்கிறார்.. அதன் பிறகு நாயகி என்ன முடிவெடுத்தார்.? நாயகனுக்காக அந்த சவாலை ஏற்றுக் கொண்டாரா அல்லது இவனை விட்டு விட்டு…
Read MoreAuthor: reporter
I Nobody ஐ நோ படி – மலையாள விமர்சனம்
கதை… பிரித்திவிராஜ் மனைவி பார்வதி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.. ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கின்றனர்.. இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம்.. ஒரு நாள் வங்கிக்கு செல்கிறார் நாயகன் பிருத்திவிராஜ்.. அப்போது அங்கு ஒரு மூன்று கொள்ளையர்கள் வந்து அந்த பேங்கில் கொள்ளை அடிக்கின்றனர்.. இவரை பிணை கைதியாக வைத்து அவர்கள் தப்பித்து செல்கின்றனர்.. சில கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு மூவரும் விபத்தில் இறந்து விடுகின்றனர்.. இதனால் அவர்களின் பின்னணி என்ன தெரியவில்லை.. அது மட்டும் இல்லாமல் ₹ 17 கோடி அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கே என்று விவரம் தெரியவில்லை.. இதனால் போலீசின் சந்தேக பார்வை பிரித்திவிராஜ் மீது திரும்புகிறது.. இந்த செய்தி மீடியாவில் வெளியாகும் போது மக்களின் பார்வையும் பிரித்விராஜ் மீது திரும்புகிறது. இதனால் மன உளைச்சலுக்கு…
Read Moreஇதயம் முரளி – விமர்சனம் 4.25/5…
கதை… அதர்வா இவரது நண்பர்கள் ரக்சன் மற்றும் டிராவிட் — ஸ்கூல் பிரண்ட்ஸ்.. ஆனால் அவர்களுக்கே தெரியாமல் மற்றொரு நண்பன் சுதாகருடன் சென்று தான் விரும்பும் பெண்ணை சைட் அடித்து வருகிறார் நாயகன் அதர்வா.. டியூஷன் சென்டர்.. டென்னிஸ் கிரவுண்ட் என பல இடங்களில் பிரீத்தியை சைட் அடித்து ஒரு கட்டத்தில் காதலை சொல்ல முயற்சிக்கிறார்.. அப்போ ஒரு ட்விஸ்ட்.. எனவே காதலை சொல்லாமல் திரும்புகிறார்.. அதன் பின்னர் கல்லூரி படிக்கும் போது.. நெக்ஸ்ட் ஹீரோயின் கயாது லோகரை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் அவரை காதலித்து காதலை வெளிப்படுத்தும் நினைக்கும்போது அங்கும் சொல்ல முடியாத சூழ்நிலை.. இப்படியான சூழ்நிலையில் அதர்வா என்ன செய்தார் யாரை காதலித்தார்? யாரை திருமணம் செய்தார்.? அதர்வாவின் காதலை ஏற்றுக் கொண்ட ஹீரோயின் யார்.? என்பதெல்லாம் சுவாரஸ்யமான ஸ்கிரீன் ப்ளே.. நடிகர்கள்… அதர்வா,…
Read Moreநடிகர் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஓ! சுகுமாரி’ – திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் – காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். ‘ஓ! சுகுமாரி ‘ படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில், ‘தாமினி’ என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. இவளைக் கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை…
Read More“என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!
இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வழக்கமான கதாபாத்திரங்களுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகளில் நடித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிகையாக தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். அந்த வரிசையில், சஜீவ் பழூரின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்துள்ளார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகளிலும், வசன உச்சரிப்பிலும் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளது. சமீபத்தில் படத்தைப் பற்றிப் பேசிய நிமிஷா சஜயன், இந்தக் கதாபாத்திரத்திற்காக தயாரான விதம், உண்மையான நீதிமன்ற விசாரணைகளை நேரில் பார்த்த அனுபவம் வழக்கறிஞர் கதாபாத்திரத்தைப்…
Read Moreஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!
சென்னை: லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர்கள் ஜெயம் ரவி, பாபி சிம்ஹா, சதீஷ், ஸ்ரீகாந்த்,…
Read Moreதுல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார். இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம்…
Read Moreகமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை!
நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக். தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D…
Read MoreFrom Pritam and Pedro to The Bear: Your Ultimate JioHotstar Weekend Binge List
Weekend is almost here, which means it’s time to close those work tabs and completely surrender your weekend to the couch. If you’ve been wondering what to watch next, JioHotstar is dropping a massive, multi-language lineup perfect for a multi-day binge session. From Pritam and Pedro to The Bear , here are the six new releases that are tailor-made for back-to-back viewing. Pop your popcorn, dim the lights, and dive straight into the best shows streaming this weekend. *Pritam and Pedro* If you love a chaotic “mismatched partners” comedy, lock…
Read MoreTam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் ‘Production no : 2’ திரைப்படம்!!
Tam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் ‘Production no : 2’ திரைப்படம், 2017 ஆம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் அவர்களால் இயக்கப்படுகிறது. மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மை தன்மை மாறாமல் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படமானது இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளது கதையின் அமைப்புபடி 2010 காலகட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் கதை இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இவர்கள் மாதிரியான பின்தங்கிய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையில் படிப்பு மற்றும் விளையாட்டின் மூலம் ஊடுறுவும் இடஒதுக்கீடு அரசியலுக்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டு அரசியலுக்கு…
Read More
