Curtain Raiser – இந்த புகழ்பெற்ற திகில் த்ரில்லர் தொடரை உருவாக்கியவர் சாம் ரெய்மி! தீய சக்திகளால் அவிழ்க்கப்பட்ட பேய் சக்திகளுக்கு எதிராக முக்கிய கதாபாத்திரங்கள் நடத்திய போராட்டமே இதன் முக்கிய கதைக்களம்! தொடரை வெற்றிகரமாக நிலைநிறுத்திய மூன்று படங்கள் ஈவிள் டெட் (1981), ஈவிள் டெட் 2 (1987) & ஆர்மி ஆஃப் டார்க்னெஸ் (1992) ஆகும். ஈவிள் டெட் (2013) என்பது ஈவிள் டெட் தொடரின் புதிய தொடர்ச்சியாக வெளியான ரீபூட் படமாகும்! அதன் வெற்றியின் அடிப்படையில், தொடரைத் தொடர முடிவு செய்யப்பட்டது! ஈவிள் டெட் ரைஸ் (2023) வெளியானது! ஈவிள் டெட் பர்ன் (2026) என்பது ஈவிள் டெட் (2023) படத்தின் ஸ்டேண்டலோன் தொடர்ச்சி மற்றும் ஈவிள் டெட் தொடரின் 6வது பாகமாகும்! 2028ல் வெளிவரவிருக்கும் 7வது பாகத்தை எதிர்நோக்குங்கள்! Synopsis இதுவரை…
Read MoreAuthor: reporter
ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில்
கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் எம்.…
Read Moreதுயரம், அதிகாரப் போட்டிகள் மற்றும் மறைந்த உண்மைகள்: ஜியோஹாட்ஸ்டாரின் House of the Dragon சீசன் 3, எபிசோட் 4 வாரிசுரிமைப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது
ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் *House of the Dragon* சீசன் 3-இன் எபிசோட் 4, போர்க்களக் காட்சிகளில் இருந்து விலகி, கிரீன்ஸ் மற்றும் பிளாக்ஸ் அணிகளை ஆட்கொண்டுள்ள தனிப்பட்ட மற்றும் அரசியல் விளைவுகளை ஆழமாக ஆராய்கிறது. துயரம், குற்றவுணர்ச்சி மற்றும் பேராசை மோதிக்கொள்ளும் இந்த எபிசோட், வெஸ்டெரோஸ் முழுவதும் தனது கதையை விரிவுபடுத்தி, சீசனின் இரண்டாம் பாதிக்கான மேடையை அமைக்கிறது. இழப்பும் தலைமையும் இடையே போராடும் ரேனிரா தனிப்பட்ட பேரிழப்பின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத ரேனிரா டார்கேரியன், தனது துயரத்தையும் அரசாட்சிப் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். டம்பிள்டனின் ஆக்கிரமிப்பு முதல் புதிய Master of Coin-ஐ நியமிப்பது வரை, ஒவ்வொரு முடிவும் ராணியாக அவரது உறுதியை சோதிக்கிறது. இதற்கிடையில், அவருக்கு நெருக்கமானவர்கள் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் அவரது ஆட்சியையே குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு…
Read More‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவருடைய படைப்பு மீது எனக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் கதை சொல்லி போகும்…
Read More*நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு*
பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் – ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் – தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் உருவாகிறது. ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய ‘பாகுபலி’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். இந்த கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற…
Read Moreலட்சுமி காந்தன் கொலை வழக்கு – விமர்சனம்…
கதை… அரசாங்க வேலைக்கு காத்திருக்கும் படித்த பட்டதாரி நாயகன் வெற்றி. குடிகார தந்தையால் வீட்டில் வறுமை வாட்டி எடுக்குறது.. இவர்களின் வீட்டு பத்திரம் வேறு கடனில் இருப்பதால் அடிக்கடி ஊர் பெரியவர் ரெட்டியார் கவிதா பாரதி மிரட்டி செல்கிறார் அப்போது வேறு வழியின்றி நண்பருடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டு தொழில்களில் ஈடுபடுகிறார் வெற்றி.. அதே கிராமத்தில் வசிக்கும் பிரிகிடாவுடன் காதல் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.. இனிமேல் நீங்கள் திருட வேண்டாம் திருந்தி வாழலாம்.. கடைசியாக ஒரு முறை நம்முடைய வீட்டு பத்திரத்தை ரெட்டியாரிடம் இருந்து திருடி வாருங்கள் என கட்டளையிடுகிறார் காதல் மனைவி.. திருடு போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு நன்மைக்காக கொலை செய்து விடுகிறார் வெற்றி.. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கு தண்டனையும் விதிக்கப்படுகிறது.. அதன் பிறகு…
Read Moreராவ் பகதூர் – தெலுங்கு பட விமர்சனம்..
ஸ்டோரி.. ஒரு அரசு குடும்பத்து வாரிசு சத்யதேவ்.. இவர்தான் ராவ் பகதூர்.. இளமையில் ஆடம்பரமாக வாழ்ந்த இவர் முதுமையில் நோய்வாய் பட்டு கிடக்கிறார்.. அப்போது தனக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தை ஒரு சந்தேகத்தை தனது நண்பரிடம் தீர்க்க முயற்ச்சிக்கிறார்.. அதற்காக இவரது நண்பரும் மருத்துவருமான விகாஸ் முப்பாலாவை வரவழைக்கிறார்.. இந்த சந்தேகம் தீர்ந்தால் தான் என்னால் நிம்மதியாக கண் மூட முடியும் என்கிறார்.. அந்த ரகசிய சந்தேகம் என்ன? சந்தேகத்தை தீர்த்து வைத்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதி திரைக்கதை.. நடிகர்கள்… Satya Dev as Ramappa Rao Bahadur Vikas Muppala as Dr Achari Deepa Thomas as Renuka Bala Parasar as Achamma Anand Bharathi as Inspector Pranay Vaka as Lavana Master Kiran as…
Read Moreலவ் ஓ லவ் – விமர்சனம் [3.75/5…]
கதை… நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் பவிஷ் 40,000 சம்பளம் வாங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.. இவரது காதலி நாகதுர்கா ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்.. இவர்கள் காதலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக போலீஸ் செல்வராகவனிடம் பிரச்சனை செல்கிறது.. நாயகிக்கு ஆதரவாக மாதர் சங்கத் தலைவி வனிதாவும் வருகிறார்.. என்னால் அவளை இனியும் காதலிக்க முடியாது.. என்கிறார்.. ஆனால் காதலியோ பவிஷ் வேண்டும் என்கிறார்.. இந்த சூழ்நிலையில் பவிஷ் ஒரு கண்டிஷன் போடுகிறார்.. நான் நம்முடைய நான்கு வருட காதலில் செய்தது எல்லாம் நீ நான்கு மாதத்தில் செய்தால் உன்னை காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன்.. இல்லையென்றால் லவ் பிரேக்கப் என்கிறார்.. அதன் பிறகு நாயகி என்ன முடிவெடுத்தார்.? நாயகனுக்காக அந்த சவாலை ஏற்றுக் கொண்டாரா அல்லது இவனை விட்டு விட்டு…
Read MoreI Nobody ஐ நோ படி – மலையாள விமர்சனம்
கதை… பிரித்திவிராஜ் மனைவி பார்வதி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.. ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கின்றனர்.. இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம்.. ஒரு நாள் வங்கிக்கு செல்கிறார் நாயகன் பிருத்திவிராஜ்.. அப்போது அங்கு ஒரு மூன்று கொள்ளையர்கள் வந்து அந்த பேங்கில் கொள்ளை அடிக்கின்றனர்.. இவரை பிணை கைதியாக வைத்து அவர்கள் தப்பித்து செல்கின்றனர்.. சில கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு மூவரும் விபத்தில் இறந்து விடுகின்றனர்.. இதனால் அவர்களின் பின்னணி என்ன தெரியவில்லை.. அது மட்டும் இல்லாமல் ₹ 17 கோடி அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கே என்று விவரம் தெரியவில்லை.. இதனால் போலீசின் சந்தேக பார்வை பிரித்திவிராஜ் மீது திரும்புகிறது.. இந்த செய்தி மீடியாவில் வெளியாகும் போது மக்களின் பார்வையும் பிரித்விராஜ் மீது திரும்புகிறது. இதனால் மன உளைச்சலுக்கு…
Read Moreஇதயம் முரளி – விமர்சனம் 4.25/5…
கதை… அதர்வா இவரது நண்பர்கள் ரக்சன் மற்றும் டிராவிட் — ஸ்கூல் பிரண்ட்ஸ்.. ஆனால் அவர்களுக்கே தெரியாமல் மற்றொரு நண்பன் சுதாகருடன் சென்று தான் விரும்பும் பெண்ணை சைட் அடித்து வருகிறார் நாயகன் அதர்வா.. டியூஷன் சென்டர்.. டென்னிஸ் கிரவுண்ட் என பல இடங்களில் பிரீத்தியை சைட் அடித்து ஒரு கட்டத்தில் காதலை சொல்ல முயற்சிக்கிறார்.. அப்போ ஒரு ட்விஸ்ட்.. எனவே காதலை சொல்லாமல் திரும்புகிறார்.. அதன் பின்னர் கல்லூரி படிக்கும் போது.. நெக்ஸ்ட் ஹீரோயின் கயாது லோகரை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் அவரை காதலித்து காதலை வெளிப்படுத்தும் நினைக்கும்போது அங்கும் சொல்ல முடியாத சூழ்நிலை.. இப்படியான சூழ்நிலையில் அதர்வா என்ன செய்தார் யாரை காதலித்தார்? யாரை திருமணம் செய்தார்.? அதர்வாவின் காதலை ஏற்றுக் கொண்ட ஹீரோயின் யார்.? என்பதெல்லாம் சுவாரஸ்யமான ஸ்கிரீன் ப்ளே.. நடிகர்கள்… அதர்வா,…
Read More
