போகுமிடம் வெகு தூரமில்லை விமர்சனம் 4/5.. உத்தம கலைஞன்

 கதை… ஆடுகளம் நரேன் & பவன் இருவரும் அண்ணன் தம்பிகள்.. இருவருக்கும் ஒரே தந்தை என்றாலும் வெவ்வேறு தாய்.. மூத்த தாரத்தின் மகன் நரேன்.. இரண்டாம் தாரத்தின் மகன் பவன்.. எனவே இவர்களுக்கு எப்போது மோதல் இருந்து வருகிறத. இந்த சூழ்நிலையில் இவர்களின் தந்தை சென்னையில் மரணமடைந்து விடுகிறார்.. இதனால் தந்தைக்கு நான்தான் கொள்ளி வைப்பேன் என இருவரும் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.. பிணத்தை தங்கள் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் வாக்குவாதம் செய்கின்றனர்.. இவர்களின் தந்தை உடலை அமரர் ஊர்தியில் திருநெல்வேலிக்கு எடுத்து வருகிறார் விமல்.. நீ இந்த உடலை ஒழுங்காக கொண்டு சேர்த்தால் நீ கேட்ட பணத்தை தருகிறேன் என முதலாளி சொல்லவே வேறு வழியின்றி மனைவியின் பிரசவத்திற்கு கூட அருகே நிற்காமல் பிணத்தை தனியாக எடுத்து செல்கிறார் விமல். செல்லும் வழியில் தெருக்கூத்து கலைஞர்…

Read More

சாலா விமர்சனம் 3.5/5.. BAR WAR

 கதை… நாயகன் – தீரன்.. நாயகி – ரேஷ்மா.. குடி குடி என்பதுதான் நாயகனின் தாரக மந்திரம்.. குடிக்காதே குடிக்காதே நன்றாக படி என்பது நாயகியின் தந்திரம்.. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்… 23 வருடங்களாக பூட்டிக் கிடக்கும் பார்வதி ஒயின்சுக்கு இரண்டு கோஷ்டிகள் அடித்துக் அடித்துக் கொல்கின்றனர்.. இவர்களின் சண்டையை ஓரமாக நின்று மாமூல் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார் இன்ஸ்பெக்டர் சம்பத் ராம். குடியை ஆதரிக்கும் நாயகன்.. குடியை எதிர்க்கும் நாயகி ஒரு கட்டத்தில் நண்பர்களாகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? யார் திருந்தினார்கள்? என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.. நடிகர்கள்… ஆறடி உயரம் அதிர வைக்கும் கம்பீரம் நீண்ட தலை முடி நீண்ட தாடி என வில்லன் தோற்றத்தில் நாயகனாக மிரட்டி இருக்கிறார் தீரன்.. ஒரு பார் சண்டைக் காட்சியில் 30…

Read More

கொட்டுக்காளி – திரை விமர்சனம்

மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். இதனால் மீனாவை அவரது வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துப் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருந்ததா, இல்லையா? இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’. காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவது தான் கதை. மொத்தக் கதையையும் பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் எழுதி விடலாம்.. அந்த சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல் பாடுகளை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். கிராமங்களில்…

Read More

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம்!!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இருநூற்றி மூன்று (203) கதைகளை பதிவு செய்து சாதனை படைத்தமைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் 21வது பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.

Read More

KCL கேரள கிரிக்கெட் லீக் போட்டி, திருவனந்தபுரம் அணி, இணை உரிமையாளரான கீர்த்தி சுரேஷ் !!

முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தை தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கென தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாக செயல்பட்டு வருவது போல், கேரள திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL போட்டிகள் நடக்கவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் 33 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. KCL கேரளா கிரிக்கெட்…

Read More

நீலகிரி தஹ்ர் விருதுகள் 2024! (நீலகிரி வரையாடு விருதுகள் 2024)!!

  சிறப்பு விருந்தினர் திரு. தம்பி ராமையா – நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் நகைச்சுவை நடிகர் நடுவர் உறுப்பினர் திரு. ரவீந்தர் – ஒளிப்பதிவாளர், 47 வருடங்கள் திரையுலகில் நடுவர் உறுப்பினர் சப் ஜான் எடத்தட்டில் – திரைக்கதை நிபுணர் நடுவர் உறுப்பினர் திரு. விவேக் மோகன் – தேசிய விருது பெற்ற ஆவணப்படத் தயாரிப்பாளர் நடுவர் உறுப்பினர் கிறிஸ்டோப் தோக் – சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் நடுவர் உறுப்பினர் பிரதீப் குர்பா, தேசிய விருது பெற்ற காசி திரைப்பட இயக்குனர் 9 பிரிவுகளில் மொத்தம் 21 விருதுகள்! திரு. ராப் ஸ்டீவர்ட்டுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம் மற்றும் சுறா பாதுகாப்புக்காக போராடுவதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவரது சிறந்த பங்களிப்பிற்காக கெளரவ குறிப்பு விருதை வழங்குகிறோம். 12 வயது குழந்தை அகஸ்தி…

Read More

மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் ‘மைதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!

உலகளாவிய சினிமாவில் மிகச் சிறந்தவர்களைக் கௌரவிப்பதற்காக புகழ்பெற்ற ஆம்ஸ்டர்டாமில் செப்டிமியஸ் விருதுகள் விழா நடைபெறும். 2024 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை தற்போது இது அறிவித்துள்ளது. இதில், ‘மைதான்’ திரைப்படம் மதிப்புமிக்க சிறந்த ஆசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி, புகழ்பெற்ற துஷின்ஸ்கி திரையரங்கில் செப்டிமியஸ் விருதுகள் மிகப்பெரிய அளவில் சினிமாவின் சிறப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றது. பெரும்பாலும் ‘ஐரோப்பாவின் ஆஸ்கார் விருதுகள்’ என்று குறிப்பிடப்படும் இந்த நிகழ்வில் உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் திறமைகளை கௌரவிப்பதற்காக ஒன்றிணைகிறார்கள். இந்த ஆண்டு பாஃட்டா, எம்மி மற்றும் ஆஸ்கார் போன்ற மதிப்புமிக்க விருதுகளை வென்றவர்களான ஜென்னி பீவன், டேவிட் பர்ஃபிட், கெவின் வில்மோட் மற்றும் சர் கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் போன்றவர்கள் கலந்து கொண்டனர். ‘மைதான்’ திரைப்படம் அதன் அழுத்தமான கதை மற்றும் சிறந்த…

Read More

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!!

 சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடத்தை, இன்று ஆகஸ்ட் 21 (புதன்) 2024, தலைவர் டத்தோ திரு ராதாரவி அவர்கள் திறந்து வைத்தார். FEFSI தலைவர் உயர்திரு. R.K. செல்வமணி அவர்கள் தலைமையில், FEFSI பொதுசெயலாளர் உயர்திரு. B.N. சுவாமிநாதன், FEFSI பொருளாளர் உயர்திரு. செந்தில்குமார் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.

Read More

அமெரிக்க மற்றும் கனடா நாட்டில் அனிருத்யின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி

 இந்திய சினிமாவில் இன்று மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் என்றால் அது ராக் ஸ்டார் அனிருத் என்பது அனைவருக்கும் நாம் அறிந்த விஷயம். இவரின் இசையில் வரும் பாடலுக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.இவரது இசையில் வந்த பாடல் அனைத்தும் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக இவரின் இசைக்கு இன்றைய இளைஞர்கள் வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இது இவரின் இசை கச்சேரிக்கும் உண்டு உலகில் பல்வேரு நாட்டில் இவரின் இசை கச்சேரிக்கு நடந்து உள்ளது குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய்,லண்டன் போன்ற நகரங்களில் நடந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சிக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது அதன்படி தற்போது இவர் இசைக்கச்சேரி அமெரிக்க நகரில் நான்கு மாகாணத்தில் நடக்கிறது அதோடு கனடா நாட்டிலும் ஒரு இசை கச்சேரி நடக்க…

Read More

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ தீபாவளிக்கு தள்ளிவைப்பு – ‘தரத்தை மேம்படுத்த கால தாமதம்’

இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பன்மொழி நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ’லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்களும், திரையுலக பிரியர்களும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் திரையரங்க வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வைரலான ஹிட் மெல்லிசை பாடலான ’ஸ்ரீமதி காரு’ பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முதலில் இந்தப் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தீபாவளி வார இறுதியான அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ’லக்கி பாஸ்கர்’ படத்தை சுற்றி இருக்கும் எதிர்பார்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழு போஸ்ட் புரொடக்‌ஷன்…

Read More