சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா
கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பயிற்சி காலத்திலேயே சில மாணவர்கள் மாதம் ரூ.35,000 வரை ஊதியம் பெறுவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், மாணவர்களின் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறினார்.

மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, புன்னகை நிறைந்த பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், மாணவர்கள் உருவாக்கிய கலைப்பணிகள் மற்றும் சிற்பங்களை ஆர்வமாக பார்வையிட்டு, அவர்களின் திறமைகளை பாராட்டினார்.

இந்த நிகழ்விற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட, 5 நாடுகளின் உணவுகளையும் ஸ்ரீலீலா சுவைத்து மகிழ்ந்தார். பல்வேறு சுவைகள் குறித்து தனது விருப்பங்களை பகிர்ந்து கொண்டு, உலக நாடுகளின் உணவுகளை அறிந்து ரசிப்பதில் உள்ள தனது ஆர்வத்தையும் ஶ்ரீலீலா மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அன்னையர் தின கொண்டாட்டமும் இணைத்து நடத்தப்பட்டது. அப்போது தனது தாயார் குறித்து உணர்ச்சிப் பெருக்குடன் ஸ்ரீலீலா உரையாற்றினார். . தனது வாழ்க்கை மற்றும் தொழில் வளர்ச்சியில் தனது அன்னையின் பங்கு குறித்து நினைவுகூர்ந்த அவர், மாணவர்களுடனான உரையாடலை மேலும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் மாற்றினார்.

மாணவர்கள் அவரது உடற்பயிற்சி நடைமுறை, உணவுப் பழக்கம், திரைப்பட பயணம் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து பல கேள்விகள் கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் அவர் எளிமையாகவும் மகிழ்ச்சியுடனும் பதிலளித்து, மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளித்தார்.

இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததுடன், அவர்களின் கனவுகளை அடைய தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது.

கல்வி, திறன் மேம்பாடு, புதுமை மற்றும் உலகளாவிய தொழில் வாய்ப்புகளில் சென்னைஸ் அமிர்தா தொடர்ந்து முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. செய்முறை கல்வி மற்றும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் 31,650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி, இந்தியாவின் முன்னணி விமானப் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் கல்லூரியை பார்வையிட்டபோது, சுமார் 170 மாணவர்கள் சர்வதேச இன்டர்ன்ஷிப் மற்றும் நிரந்தர வேலை வாய்ப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment