கதை…
சான்வீயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் நாயகன் இளன்.. பின்னர் நாயகனின் மனதை புரிந்து கொண்ட நாயகியும் காதலிக்க இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்..
திருமணம் முடிந்த உடன் அதுவரை சொல்லாத நிபந்தனை விதிக்கிறார் நாயகி சான்வீ.. என் பெற்றோரை பிரிந்து உன் வீட்டிற்கு வர முடியாது… நீ உன் பெற்றோரை பிரிந்து என் வீட்டிற்கு வந்துவிடு என கணவனிடம் கட்டளையிடுகிறார்..
அதன் பிறகு என்ன நடந்தது.? மாமியார் வீட்டில் மருமகன் குடும்பம் நடத்தினாரா.? மனைவி சொன்ன கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டாரா என்பதெல்லாம் சுவாரஸ்யமான கல்யாண கலாட்டா…
நடிகர்கள்…
இளன், சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், குமரவேல்..
எதார்த்த நாயகனாக இளன்.. ஒரு பெண்ணை வெறுத்து ஒதுக்குவதிலும் ஒரு பெண்ணை கவர்ந்து இழுப்பதிலும் இளன் ஸ்கோர் செய்து இருக்கிறார்… மாமியார் வீட்டில் சிக்கிக்கொண்ட மருமகன்.. எலிப்பொறியில் சிக்கிய எலி போல நடிப்பில் செம..
ஏற்கனவே குடும்பஸ்தன் திரைப்படத்தில் நம்மை கவர்ந்த சான்வீ இந்தப் படத்திலும் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.. நூடுல்ஸ் சிக்கல் சிகை அலங்காரம்.. அழகிய கண்கள்.. கவர்ச்சியான உடல் எனக் காந்தமாய் கவர்ந்து இருக்கிறார்…
கடந்த வாரம் விசுவநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிப்பில் மிரட்டி இருந்த ராதிகா இந்த படத்திலும் கலக்கி இருக்கிறார்..
எம் எஸ் பாஸ்கர் மற்றும் கீதா கைலாசம் இருவரும் தங்களுடைய அனுபவ நடிப்பில் கலக்கியிருக்கின்றனர்… அதுபோல சரத்குமார் மற்றும் குமரவேல் இந்த தம்பதிகளும் போட்டி போட்டு நடித்துள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள் …
இயக்கம் மற்றும் நடிப்பு: இளன்
இசை: யுவன் சங்கர் ராஜா
படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களை போட்டு படம் முழுவதும் இசை ராஜாக்கள் நடத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா..
காதல் சோகம் நட்பு குடும்பம் பாசம் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மெட்டு போட்டு படம் திரையை இசையில் ஆக்கிரமித்து இருக்கிறார் யுவன்..
பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கியவர் இளன்.. இந்த முறை இவரே ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்..
பெரும்பாலும் காதல் படங்கள் என்றாலே காதலை சொல்லி படத்தின் கிளைமாக்ஸில் திருமணத்துடன் முடிப்பார்கள்… ஆனால் இந்த படம் கிட்டத்தட்ட பெண் தேடும் படலம் காதல் என திருமணத்தில் ஆரம்பிக்கிறது.. அதன் பிறகும் நடக்கும் சுவாரசியங்கள் தான் படத்தின் திரைக்கதை..
திருமணம் செய்து கொள்ளும் ஜோடி.. பின்னர் புகுந்து வீட்டுக்கு செல்லும் பெண் என வழக்கமான திரைக்கதையாக இல்லாமல் மாமியார் வீட்டுக்கு செல்லும் மருமகனை பற்றிய கதை தான் இது..
ஒருவேளை இனி வரும் காலங்களில் இது போன்ற திருமண பந்தங்கள் இருந்தால் என்ன ஆகும் என்பதை ஒரு ஆணின் பார்வையில் இருந்து சொல்லியிருக்கிறார் இயக்குனரும் நாயகனுமான இளன்..
அவரே இயக்குனர் அவரே நாயகன் என்பதால் அந்த கேரக்டரை முழுவதுமாக உள்வாங்கி கேரக்டருக்கு உடல் மொழியில் உயிர் கொடுத்திருக்கிறார் இளன்..
