கொரானாவில் இருந்து மீண்ட சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்பு

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்சூர்யா நாயகனாக நடிக்கும் படம் சூர்யா 40  இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமான
இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.அப்போது நாயகன் சூர்யா படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை,, ஓய்வில் இருந்ததால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஒருவாரம் மட்டும் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

அதன்பின், மார்ச் 13 மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம். இம்மாத இறுதிவரை படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

Related posts

Leave a Comment