இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திர போராட்ட காலத்தில் நாடகம், சினிமா இவற்றுக்கு சட்டத்தை அமுல்படுத்தியது இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அதில் சில மாற்றங்களை செய்து 1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது அதன் அடிப்படையில் சினிமா தியேட்டர்களில்
மேலும்,UA சான்றிதழ் எனப்படுவது 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றோர் துணையுடன் படம்பார்க்கலாம் என்பதாக இருந்தது. அதில் இனிமேல், UA 7 +, UA13+, UA16+ என மூன்றுவகையான தணிக்கை சான்றிதழ்களை வழங்க மாற்றங்களைச் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
திரைப்படமேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதற்கு திரைப்படத் துறையைச் சார்ந்த பலரும் பெயரளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், திரைப்பட துறைசார்ந்த அமைப்புகள் இதற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு பிற துறைகளுக்கு இருந்த தீர்ப்பாயங்களுடன் சேர்த்து சினிமா தீர்பாயத்தையும் கலைத்துவிட்டது