கைதி படத்தை ரீமேக் செய்ய தடைவிதித்தது நீதிமன்றம்

தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு தயாரிப்பில்2019ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று வெளியான படம் கைதி

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார் 20 19 தீபாவளி அன்று விஜய் நடித்து வெளியான பிகில் படத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் வெற்றிபெற்றது அதன் காரணமாக வேறு மொழிகளில் கைதி படத்தை ரீமேக் செய்யும் உரிமையை வாங்குவதற்கு போட்டி ஏற்பட்டது
இந்திமொழியில் கைதி படத்தை ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
கைதி படத்தை ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் கேரளநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காரணம், கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007ஆம் ஆண்டு புழல் சிறையில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை தொகுத்து ஒரு கதையாக எழுதி அதை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொல்லியதாகவும் கதை பிடித்ததால் அதை படமாக்கலாம் என்று கூறி அவருக்கு ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு. ஆனால் அதன்பிறகு அவரை இதுசம்பந்தமாக அழைக்கவே இல்லையாம்.இந்தநிலையில் சமீபத்தில் கைதி படத்தைப் பார்த்த ராஜீவ் ரஞ்சன் தான் சொன்ன அதே கதையின் இரண்டாம் பாதியை அப்படியே கைதி படத்தில் வைத்து படமாக்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும்அதனால் தனக்கு நஷ்ட ஈடாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு 4 கோடி ரூபாய்தர வேண்டும் என்று கேரளா மாநிலம் கொல்லம்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ராஜீவ் ரஞ்சன். அவரது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.ஆர்.பிரபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, கைதி படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யக் கூடாது, அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளார்.

Related posts

Leave a Comment