எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2023

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சி.கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் முன்னால் மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு அனைவருக்கும் கிடைப்பது இல்லை, நீங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் சேர்ந்து இருப்பதை பார்க்கும் போது மகிழ்சியாக உள்ளது. உங்களுக்கான வாழ்க்கையை நீங்களே வாழுங்கள், எதையும் எதிர்நோக்கி வாழ்கையில் வருந்தாதீர்கள், மகிழ்ச்சியான தருணங்களுடன் வாழ பழகி கொள்ளுங்கள் என கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்கள் சுமார் மூன்று ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றாக சந்தித்தனர். அப்போது தங்களின் பழைய நினைவுகள், கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் டாக்டர். எஸ்.ராமசந்திரன், கல்லூரி முதல்வர் டாக்டர். ஆர்.வாசுதேவராஜ், துணை முதல்வர் மதியழகன் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதில் தனியர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சி.கோபிநாத், எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் டாக்டர். எஸ்.ராமசந்திரன், கல்லூரி முதல்வர் டாக்டர். ஆர்.வாசுதேவராஜ், துணை முதல்வர் மதியழகன் உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment