நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நபர்களின் பேராசையை கிழித்து தொங்க விட்டு இருக்கிற திரைக்கதை படத்தின் முதல் பலம். அடுத்து இந்தக் கதைக்கான நாயகன் ரஜினி . கதையின் நாயகனான அவர் கேரக்டராகவே மாறி முழு படத்தையும் தாங்கியிருப்பது இன்னொரு சிறப்பு. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரவுடிகளை சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா விஜயன்) தனியார் நீட் கோச்சிங் சென்டரின் அப்பட்டமான மோசடியை எதிர்த்து துணிச்சலாக போராடுகிறார். அப்பாவிகளை எமாற்றி கோடிகளில் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் காரர்கள் சும்மா இருப்பார்களா? ஆம், அதே தான் நடக்கிறது. சரண்யா கொலையாகிறார், அதுவும் பாலியல் பலாத்கார அடையாளத்துடன். அந்த வழக்கு விசாரணையில்…
Read MoreCategory: விமர்சனம்
ஆரகன் விமர்சனம்.. முதுமையிலும் இளமை
கதை… நாயகன் மைக்கேல் தங்கதுரை.. நாயகி கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள்.. கல்யாணத்திற்கு பிறகு ஏதாவது பிசினஸ் செய்யலாம் என்கிறார் நாயகன்.. அதற்காக இருவரும் பணம் சேர்க்க முற்படுகின்றனர். அப்போது ஒரு வீட்டில் நடக்க முடியாமல் அவதிப்படும் ஸ்ரீரஞ்சனியை கவனித்துக் கொள்ள நாயகி கவிப்பிரியாவுக்கு வாய்ப்பு வருகிறது.. இதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. அப்படி சம்பாதித்தால் பிசினஸ் செய்யலாம் என எண்ணி அந்த வேலைக்கு செல்கிறார் நாயகி. முதலில் மறுக்கும் நாயகன் பிறகு நாயகியை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.. அதன்படி நாயகியும் செல்கிறார்.. அங்கு சென்ற பின்னர் தான் ஸ்ரீரஞ்சனி வீட்டில் ஒரு கண்ணாடி கூட இருக்கக் கூடாது என்கிறார்.. கண்ணாடியில் முகத்தையே கூட பார்க்காமல்.. இப்படியாக சில மாதங்கள் ஆன நிலையில் திடீரென இளமையிலேயே கவிப்பிரியாவுக்கு முதுமை வருகிறது.. தலைமுடி நரைக்கிறது.. வயதான…
Read Moreல்தகா சைஆ (காதல் ஆசை) விமர்சனம்.. கனவு உலகம்
கதை… ஈரோடு கோவையைச் சேர்ந்த நிஜமான காதல் தம்பதியர் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ல்தகா சைஆ. நாயகன் சதா நாடார் நாயகி மோனிகா இருவரும் புதுமண காதல் தம்பதிகள்.. நாயகன் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்.. இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது.. கனவில் இவரே மனைவியை கொல்வது போலவும்.. வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது போலவும் இப்படியாக பல கனவுகள் வருகிறது.. ஒரு நாள் காணும் கனவு அடுத்த நாள் நிஜத்தில் நடக்கிறது.. தன் மனைவியை தானே கொன்று விடுவோமோ தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுமோ என்றெல்லாம் குழம்பித் தவிக்கிறார். இந்த சூழ்நிலையில் கணவர் கனவில் நடப்பதை தடுக்க இவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… சதா நாடார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.. இவர் தன்…
Read Moreநீல நிறச் சூரியன் விமர்சனம்.. பெண்ணாக மாறிய ஆண்
கதை…. பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் அரவிந்த்.. ஆனால் இவருக்குள் பெண்மை அடிக்கடி எட்டிப் பார்க்க பெண்ணாக மாறி வாழ ஆசைப்படுகிறார்.. ஆனால் இந்த சமூகம் & பெற்றோர்கள் எப்படி சம்மதிப்பார்கள் என்ற மனநிலையிலே 25 வயதை கடந்து விடுகிறார். ஆனாலும் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் விடவில்லை.. ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.. ஒரு கட்டத்தில் பெண்ணாக மாற முடிவெடுத்து வீட்டிலும் பள்ளியிலும் சொல்ல பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது.. ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கும் இவர் பெண்ணாக மாறுகிறார்.. அதன் பிறகு இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. பள்ளியில் ஆசிரியராகப் பார்த்த மாணவர்கள் இவரை ஆசிரியையாக பார்த்தார்களா..? பெற்றோர்கள் உறவினர்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்…. இந்த நீல நிறச் சூரியன் படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி…
Read Moreசெல்ல குட்டி திரைப்பட விமர்சனம் – ரசிக்கும் குட்டி
கதை… நாயகர்கள் டிட்டோ & மகேஷ் மற்றும் நாயகி தீபிக்ஷா ஒரே வகுப்பில் +2 படிக்கிறார்கள்.. மகேஷ் பெற்றோர் இல்லாதவர் என்பதால் அவர் மீது நாயகி தீபிக்ஷா இரக்கம் காட்டுகிறார்.. இது காதல் என நினைக்கும் மகேஷ் அவரிடம் காதலை சொல்ல தீபிக்ஷா மறுக்கிறார். என் படிப்புக்கு தொந்தரவு செய்யாதே என நாயகி சொன்னதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் மகேஷ்.. இதனால் பிளஸ் டூ வில் தோல்வி அடைகிறார். ஆனால் மற்றவர்களை நன்றாக படித்து கல்லூரிக்கு செல்கின்றனர்.. அங்கு டிட்டோவை காதலிக்கிறார் தீபிக்ஷா.. ஆனால் நான் உன்னிடம் அப்படி பழகவில்லை.. என் நண்பனின் காதலி நீ.. எனவே உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுக்கிறார். அதன் பிறகு நாயகி என்ன செய்தார்? யாரின் காதலை ஏற்றுக் கொண்டார் என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர்கள்… நாயகி…
Read Moreதேவரா விமர்சனம்.. கடல் கொள்ளை
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சையப் அலி கான், பிரகாஷ்ராஜ், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் ’தேவரா’ படம் பான் இந்தியா வெளியீடு.. கதை… நம் நாட்டிற்கு சட்ட விரோதமாக வரும் ஆயுதங்களை தொழில் அதிபர் கட்டளைக்காக செங்கடலுக்கே சென்று கொள்ளையடித்து கொடுப்பது ஜூனியர் என்டிஆர் இன் தொழில்.. இவருக்கு உடந்தையாக சைப் அலிகான் கலையரசன் உள்ளிட்ட நண்பர்கள் உண்டு. ஒரு கட்டத்தில் இவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கடற்படை அதிகாரி நரேன்.. நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்கிறீர்கள் என சொல்கிறார். இதனையடுத்து என்டிஆர் திருந்துகிறார்.. ஆனால் இவரது நண்பர்களோ எங்களது தொழில் இதுதான்.. நாங்கள் விட முடியாது என பிரச்சனை செய்யவே மோதல் வெடிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? நாட்டிற்கு துரோகம் செய்த நண்பர்களை இவர் தீர்த்து…
Read MoreHitler ஹிட்லர் விமர்சனம்.. கொள்ளையன்
கதை… தன் நண்பன் ரெட்டின் கிங்சிலியை தேடி சென்னைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி.. அங்கு ஒரு வேலையாக தங்குகிறார்.. அப்போது நாயகி ரியாவை அடிக்கடி டிரெயினில் சந்திக்க சந்திக்க காதலும் கொள்கிறார். இதனிடையில் தேர்தல் நேரத்தில் ட்ரெயினில் அடிக்கடி அரசியல்வாதியின் கோடிக்கணக்கான கருப்பு பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொள்ளையனை தேடி போலீஸ் விசாரித்து வருகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளையனை போலீஸ் நெருங்கி துப்பாக்கி சூடு நடத்த முயலும் போது ஒருவன் விஜய் ஆண்டனி சுட்டு விடுகிறான்.. அப்பொழுது அவனை பிடித்து மிரட்டி கௌதம் மேனன் விசாரிக்கும் போது விஜய் ஆண்டனி தான் கொள்ளையன் என அந்த நபர் சொல்கிறார். அப்படி என்றால் விஜய் ஆண்டனி உண்மையில் யார்.? அவருக்கு கொள்ளை அடிப்பது நோக்கம் என்ன?என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர் – நடிகையர் : சமூக…
Read Moreதில்ராஜா விமர்சனம்.. செம தில்லு
கதை… நாயகன் விஜய் சத்யா.. தன் மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.. ஒருநாள் ஷாப்பிங் சென்று விட்டு இவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு அமைச்சரின் மகன் இவரிடம் பிரச்சனை செய்கிறார்.. மனைவி மகளைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்தும் சென்று விடுகிறார்.. ஆனால் மந்திரி மகன் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது.. இதனை எடுத்து போலீசின் கவனம் இவர் பக்கம் திரும்பி விடுகிறது… அதன் பிறகு என்ன நடந்தது? அமைச்சரிடம் இருந்து தப்பித்தாரா.? போலீஸிடம் இருந்து தப்பித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர் – நடிகையர் : பாட்டு ஃபைட் என இரண்டிலும் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் சத்யா.. கிளைமாக்ஸ் சீனில் சட்டையை கழட்டி விட்டு அவர் மோதும் சண்டை காட்சி வேற லெவல் ரகம்.. ஸ்மார்ட்டான இவருக்கு…
Read Moreமெய்யழகன் விமர்சனம்.. உறங்காத உறவுகள் 4.5/5
கதை.. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் அரவிந்த்சாமி.. சொத்து பிரச்சனை காரணமாக இவரது குடும்பம் தனித்துவிடப்பட பெற்றோருடன் சென்னையில் குடியேறுகிறார். திருமணம் ஆகி மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமி ஒரு கட்டத்தில் தன் சித்தி மகள் திருமணத்திற்காக தன் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்தசாமி அங்கு கார்த்தியை சந்திக்கிறார். சிறு வயது முதலே அரவிந்த்சாமி மீது அதீத பாசம் கொண்ட கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார்.. ஆனால் கார்த்தி யார் என்று கூட தெரியாமல் வேறு வழி இல்லாமல் அவருடன் கொஞ்சமாக பேசுகிறார்.. போன் நம்பர் கொடுப்பதை கூட தவிர்க்கிறார். இவர் யார்.. இவர் நமக்கு எதற்காக செய்ய வேண்டும்.. அத்தான் அத்தான் என்று…
Read Moreசட்டம் என் கையில் – விமர்சனம்
கதை… ஏற்காட்டில் ஓர் இரவு நேரத்தில் காரில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார் நாயகன் சதீஷ்.. ஏற்கனவே மன உளைச்சலில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென டூவீலரில் வந்த ஒருவன் மீது இடித்து விடுகிறார் சதீஷ்.. அந்த விபத்தில் மரணம் அடைந்த அவரை வேறு வழி இல்லாமல் கார் டிக்கியில் போட்டுக் கொண்டு பயணம் செய்கிறார். காட்டுப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபடும்போது குற்றத்திலிருந்து தப்பிக்க சரக்கு அடித்தது போல் நடிக்கிறார்.. மேலும் போலீஸ் பாவல் நவகிதனே அடித்து விடுகிறார்.. இதனை எடுத்து போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அனைத்து வழக்குகளையும் சதீஷ் மீது போட காவல்துறை திட்டமிடுகிறது.. ஆனால் போலீஸ் பாவல் மீது மற்றொரு போலீஸ் அஜய் ஈகோ மோதலில் இருக்கிறார். இதனை பயன்படுத்த திட்டமிடுகிறார் சதீஷ். அதன் பிறகு சதீஷ் என்ன செய்தார்…
Read More