மலேசியாவில் நடக்கும் கதை. காதலியின் பணத் தேவைக்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயலும் நாயகன், அதன் பின் ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து காதலியை கைப்பிடிக்க முடிந்ததா என்பது அதிரடி களத்தில் சொல்லப்பட்ட நகைச்சுவை மேளா. வேலை தேடி மலேசியா சென்று யோகி பாபு தயவில் கிடைத்த வேலையில் அமரும் நாயகன் விஜய்சேதுபதிக்கு எதிர்வீட்டு நாயகி ருக்மணிவசந்த் மீது கண்டதும் காதல். காதலிக்குப் பெரிய அளவில் பரிசு கொடுத்து கவர நினைத்தவர், அதற்காக பிரபல ரவுடியுடன் சூதாடி கடன் படுகிறார். கடனை அடைக்க வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். இந்தக் கொள்ளை விவகாரம் காதலிக்கு தெரிந்த நிலையில் காதலியே போலீசில் காட்டிக் கொடுத்தாரா? அல்லது வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நாயகனை மலேசியா காவல்துறை கண்டு பிடித்ததா என்பதை கலகல பாணியில் சொல்லி இருக்கிறார்கள். நாயகனாக வரும் விஜய் சேதுபதிக்கு…
Read MoreCategory: விமர்சனம்
ஸ்கூல் – திரை விமர்சனம்
ஜாதி மதம் இல்லாத சமுதாயம் உருவாக ஒரு பள்ளிக்கூட பின்னணியில் இருந்து கதை சொல்லி இருக்கிறார்கள்,சற்று ஆழமாகவே.இரண்டாம் இடத்தில் இருக்கும் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், தங்கள் பள்ளி மாணவர்களை மனதளவில் தயார் செய்கிறார். அதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகமும் எழுதுகிறார். ஆனால், அந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகிறார்கள். வெற்றி மட்டுமே வாழ்க்கை. இல்லை எனில் அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்று அவர் அந்த புத்தகத்தில் சொன்ன கருத்து மாணவர்களை தற்கொலை வரை அழைத்துச் செல்கிறது. இதற்கிடையே, அந்த புத்தகம் மர்மமான முறையில் எரிக்கப்படுவதோடு, பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள். இது கண்ணுக்கு தெரியாத உருவம் செய்யும் வேலை என்று பள்ளி ஊழியர்கள் சொல்ல, காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார்…
Read Moreடெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் – திரை விமர்சனம்
யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் சந்தானம். படம் பிடிக்காவிட்டால் வெளுத்து வாங்கி விடுவார். இதனாலேயே படம் ஓடாது. இந்நிலையில் ஒரு திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு சந்தானத்தை தேடி வர… அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் புதிய படம் பார்க்கும் ஆர்வத்தில் அந்த திரையரங்கத்திற்கு செல்ல… அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை காப்பாற்ற சந்தானமும் செல்கிறார். அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள். சைக்கோ கிரைம் திரில்லர் படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து அதிர்ந்து போகும் சந்தானம், அந்த சிக்கலில் இருந்து தன் குடும்பத்தை எப்படி மீட்கிறார் என்பதை காமெடி பாதி, களேபரம் மீதி என சொல்லி இருக்கிறார்கள்.…
Read Moreமாமன் – திரை விமர்சனம்
அக்கா-தம்பியின் அளவு கடந்த பாசம் தம்பியின் இல்லற வாழ்க்கையையே பாதிக்க நேர்ந்தால்….அதுதான் இந்த மாமன் கதை. கிராமங்களில் தாய் மாமன் உறவு உன்னதமானது. அப்படி ஒரு மாமனை திரைக்கு தந்து இருக்கிறார்கள். 10 வருடமாக குழந்தை இல்லாமல் அவமானத்தை மட்டுமே வெகு மானமாக பெற்றுக் கொண்டிருந்த தனது அக்காவுக்கு இப்போது மகன் பிறக்கிறான். பிறக்கும் மகன் அந்த தாய் மாமனுக்கு முழு நேர சந்தோஷமாகிறான். தூங்கும்போது கூட மாமனை கட்டிப் பிடித்துக் கொண்டே தூங்கும் அந்த சிறுவன், அதே மாமனுக்கு திருமணம் ஆகும்போது மாமன் குடும்பம் பிரிய காரணமாகிறான் பிரிந்த அக்கா தம்பி குடும்பம் மீண்டும் இணைந்ததா என்பது பாசமும் நேசமுமான திரைக்கதை. சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு தம்பி என்றால் உயிர். அதே மாதிரி தம்பியும் அக்காவை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான். இந்த அக்காவுக்கு பத்து வருடத்திற்கு…
Read Moreஜோரா கைய தட்டுங்க – திரைவிமர்சனம்
யோகி பாபு படம் என்றால் காமெடிக்கு உத்தரவாதம் இருக்கும். சில படங்களில் குணச்சித்திரவேடங்களிலும் கலக்குவார். இந்த இரு வேறு நிலைகளையும் தவிர்த்து இந்த படத்தில் யோகி பாபு ஏற்று இருப்பது பழிவாங்கும் கேரக்டர் என்பது தான் படத்தின் ஸ்பெஷல். கதை இதுதான். தான் உண்டு தன் மேஜிக் உண்டு என்று வாழ்ந்து வருபவர் யோகி பாபு. மேஜிக் மேன் என்பதால் ஆங்காங்கே இருந்து வரும் சில அழைப்புகளை ஏற்று அதில் வரும் வருமானம் மூலம் ஜீவனம் நடத்துபவர். ஆனால் அவர் மீதும் போட்டி பொறாமை கொண்ட ஆட்கள் ஏதேனும் காரணம் சொல்லி அவர் நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்து வந்தார்கள். ஒருமுறை யோகி பாபுவின் மேஜிக்கால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி சீரியஸ் நிலைமைக்கு போக, நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அடித்து துவைத்தது போக, காவல் நிலையத்திலும் தொடர்ச்சியாக அடி உதை.…
Read Moreலெவன் – திரை விமர்சனம்
சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதுவும் ஒரே சாயலில். இறந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடலை எரித்து அதை பொது வெளியில் போடும் முறையை கையாளும் சைக்கோ ஒவ்வொரு முறையும் எந்த தடயமும் இல்லாமல் தப்பி விடுகிறான். இதனால் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார். இதற்கிடையே கொலைகளும் தொடர்கிறது. இந்நிலையில் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதன் பிறகு வழக்கு காவல்துறை அதிகாரி நவீன் சந்திராவிடம் போகிறது. ஆனால் அவர் பொறுப்பேற்ற பிறகும் கொலைகள் தொடரவே செய்கிறது. காவல்துறை மீது மண்ணை தூவி விட்டு கொலைகளை தொடரும் அந்த கொலையாளி பிடி பட்டானா? தொடர் கொலைக்கான அவன் மோட்டிவ் என்ன என்பது கொஞ்சமும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ். இருக்கட்டும். இந்த படத்துக்கும் லெமன் என்ற தலைப்புக்கும்…
Read Moreதொடரும் – திரை விமர்சனம்
ஒரு அப்பாவி மனிதனை காலமும் சூழலும் அடப்பாவி ஆக்கிப் பார்க்கிற கதை. மனைவி, மகன், மகள் என அழகான சின்ன குடும்பம் டாக்ஸி டிரைவர் சண்முகத்துக்கு. குடும்பத்தை விட அவர் அதிகமாக நேசிப்பது அவரது காரை.இது எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை மகனும் தோழர்களும் இவருக்கு தெரியாமல் டாக்ஸியை எடுத்துச் சென்று லேசான விபத்து ஏற்படுத்திய போது மகனையே அடிக்கும் அளவிற்கு டாக்ஸி மீது அப்படியொரு பிரியம்சினிமாவில் பைட்டராக இருந்த காலகட்டத்தில் அவரது குருநாதராக இருந்த பாரதிராஜா தான் இந்த காரை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியவர்.கார் மெக்கானிக் செட்டில் இருக்கும் நேரம் பார்த்து குரு இறந்து விட்டார் என்று தகவல் வர,சென்னை போகிறார். திரும்பி வருவதற்குள் ஒர்க்ஷாப்பில் வேலைக்காக விடப்பட்டிருந்த அவரது டாக்ஸி இப்போது போலீஸ் நிலையத்தில் இருக்கிறது. கார் மெக்கானிக் காரில் கஞ்சா கடத்தினான்…
Read Moreகஜானா – திரை விமர்சனம்
காலகாலமாக கேட்ட பூதம் காக்கும் புதையல் கதை தான். அதை கண்களில் பிரமிப்பு விலகாமல் பார்க்க நேர்ந்தால்…அப்படி ஒரு படம் தான் இந்த கஜானா.இதில் புதையலுக்குப் பதில் நவரத்தின கற்கள்.அவற்றைப் பாதுகாக்கும் யாளி என்று கதை போகிறது, சுவாரசியமாகவே. இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு என்று புதையலுக்காக உயிரை பணயம் வைத்து புறப்படுகிரார்கள். இவர்களைத் தாண்டி கருடர் இனத் தலைவி சாந்தினி ஒரு பக்கம் அந்த நவரத்தின கற்களுக்கு குறி வைக்கிறார்.இந்த மும்முனை போட்டியில் புதையலை யாராவது கைப்பற்றினார்களா என்பது பர பர கிளைமேக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர், அடிதடி காட்சிகளில் அசத்தி இருக்கிறார். அபாயங்கள் நிறைந்த வனப்பகுதியில் அதைவிட அபாய மனிதர்களை எதிர்கொள்ளும் இடங்கள் அத்தனையும் கரகோஷத்துக்குரியவை.காட்டைக் காக்கும் பெரியவராக வரும் வேலு பிரபாகரனிடம் நடிப்பும் சுத்தம்.…
Read Moreநிழற்குடை – திரை விமர்சனம்
இளம் தம்பதிகள் விஜித் –கண்மணி இருவரும் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையின் கேர் டேக்கராக தேவயானியை வேலையில் அமர்த்துகிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். இதற்கிடையே, அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் விஜித் – கண்மணி தம்பதிக்கு விசா கிடைத்து விட… தேவயானியை தாய்க்கும் மேலாக நேசிக்கும் அந்த குழந்தை அமெரிக்காவுக்கு தேவயானியும் வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறது.இதற்கிடையே, அமெரிக்கா புறப்படுவதற்கு முந்தின இரவு குழந்தை திடீரென்று காணாமல் போக. தங்கள் அமெரிக்கா பயணத்தை தடுக்க இதை செய்திருக்கலாம் என்று நினைக்கும் குழந்தையின் பெற்றோர், சிலர் மீது புகார் அளிக்கிறார்கள். அதன்படி, அவர்களிடம் போலீஸ் விசாரித்தும் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போக……
Read Moreகீனோ – திரை விமர்சனம்
திகில் மர்மம் கொண்ட பட வரிசையில் வந்திருக்கும் படம் கீனோ. ஆனால் இந்த கீனோவில் இடம் பெறும் திகில் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தான் படமே. மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரே மகன் கந்தர்வா. அவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம், அவன் முன் தோன்றி, ‘ நான் தான் கீனோ என்னிடம் வா’ என்று அழைக்கிறது. சிறுவன் பயந்து நடுங்க, பெற்றோர் இது ஏதேனும் ஆவி சேட்டையாக இருக்குமோ என்ற கோணத்தில் மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் அலசி ஆராய்ந்து வீட்டில் தீய சக்தி எதுவும் இல்லை என்று உறுதி கூறுகிறார்கள். ஆனாலும் மறுநாளே வந்து சிறுவன் முன் நிற்கிறது கீனோ. அதே அழைப்பு.அதே மிரட்டல்.உண்மையில் அந்த கீனோ யார்? சிறுவன் கீனோவில்…
Read More
