கதை… ஒரு அப்பார்ட்மெண்டில் 66 ஆவது எண் வீட்டில் தனது கணவருடன் குடியேறுகிறார் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி.. அதே அப்பார்ட்மெண்டில் 99 என்ற எண் கொண்ட வீட்டில் இருக்கும் ஸ்வேதாவிட நட்புக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தனது தோழியை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார் என்பதை அறிகிறார்.. அதனை தடுத்து நிறுத்தும் போதுதான் ஏற்கனவே ஸ்வேதா இறந்து விட்டார் என்ற அங்கு உள்ள குடியிருப்புவாசிகள் சொல்கின்றார்கள். அப்படியானால் இறந்து போனவர் தன் கண்களுக்கு மட்டும் தெரிவது ஏன் என்று குழப்பத்தில் இருக்கிறார் நாயகி.. அப்படியானால் இதற்கு பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… சின்னத்திரை உலகில் பிரபலமானவர் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி.. இதில் அழகான நடிப்பில் கவருகிறார் ஒரு கட்டத்தில் ஆவி புகுந்த பிறகு இவர் ஆட்டங்கள் வேற…
Read MoreCategory: விமர்சனம்
வடம் – விமர்சனம்
கதை… அப்பா நரேன்.. மகன் விமல் இவர்கள் இருவரும் மாடுகளை வளர்ப்பதில் ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்வது என ஆர்வம் காட்டி வருகின்றனர்.. அப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் ஒரு கண் பார்வை இல்லாத பாண்டி முனி என்ற மாட்டை நட்டி வேண்டாம் என வெறுத்து விடுகிறார்.. இதனையடுத்து அந்த மாட்டை வாங்கி பாசமுடன் வளர்த்து வருகிறார் விமல்.. அது பல போட்டிகளில் பங்கேற்று விமலுக்கு பெயரை பெற்று தருகிறது.. இதனை அறியும் நட்டி பாண்டி முனி மாடு மீண்டும் வேண்டும் என கேட்கிறார்.. இதனால் இருவருக்கும் பிரச்சினை வருகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… விமல், நட்டி நடராஜ், சனக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர்.. பெரும்பாலும் விமல்க்கு கிராமத்து…
Read Moreஓ பட்டர்பிளை – விமர்சனம்
கதை… ஒரு மலைப்பகுதிக்கு தன் கணவரோடு செல்கிறார் நாயகி நிவேதா சதீஷ்.. இவர்கள் அங்கு தங்குகின்றனர்.. அப்போது கணவர் அங்கே தன் பள்ளி நண்பர் ஒருவரை சந்திக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு வருகின்றனர். அப்போது நிவேதா அதிர்ச்சி ஆகிறார்.. ஏனென்றால் தன் கணவர் அழைத்து வந்த நண்பர் இவரின் முன்னாள் காதலன். அதன் பின்னர் அந்த வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப்பட மீதிக்கதை.. நடிகர்கள்… நிவேதா சதீஷ் கதையின் நாயகியாக இவரை சுற்றியே கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது ஒரு பக்கம் கணவர் அடுத்த பக்கம் தனது முன்னாள் காதலன் இருவருக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் முகபாவனைகளை உணர்ச்சிபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார். முன்னாள் காதலனாக சிபி.. ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.. முன்னாள் காதலியை பார்த்து ஏங்கும் கேரக்டர்.. நாயகியின் கணவராக அதுல்.. குடிகார கொஞ்சம்…
Read Moreமுஸ்தபா முஸ்தபா – விமர்சனம்…
கதை… சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இருவரும் பள்ளிப் பருவம் முதல் நண்பர்கள்.. ஒரு கட்டத்தில் சதீஷ் & மோனிக்கவும் காதலிக்கிறார்கள்.. இவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் திடீரென இணையத்தில் சதீஷ் நடித்த ஒரு பிட்டு படம் வெளியாகிறது.. அது ஏற்கனவே சதீஷ் நடித்த ஒரு ஷூட்டிங் பிட்டு படம் என்றாலும் அதை இணையத்தில் பதிவேற்றியது யார் என்று தெரியாமல் நண்பர்கள் தடுமாறுகின்றனர்.. இந்த பிட்டு படம் வைரலானால் தனது திருமணம் நின்று விடுமோ என்ற பயத்தில் அந்த வீடியோவை தடுக்க நினைக்கிறார். அவரால் அது முடிந்ததா இறுதியில் என்ன ஆனது என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் சதீஷ் தனக்கு ஏற்ற வகையில் கதையை தேர்வு செய்து இருக்கிறார் பிட்டு படம் நாயகன் என்ற போர்வையில் காமெடியில் கை கொடுத்திருக்கிறார்.. நாயகி…
Read Moreஅனோமி – விமர்சனம்
கதை.. ஒரு விபத்தில் தங்கள் பெற்றோரை இழக்கின்றனர் பாவணர் மற்றும் அவரது தம்பி.. இதனால் மனதளவில் கடுமையாக இருவரும் பாதிக்கப்படுகின்றனர்.. தன்னுடைய தம்பி தான் உலகம் என்று அவருக்காகவே வாழ்ந்து வருகிறார் பாவனா.. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஒரு மரணம் நிகழ்கிறது.. அது தற்கொலை என்று போலீஸ் ரகுமான் தரப்பு சொல்ல ஆனால் பாவனாவுக்கு மரணம் மீது சந்தேகம் வருகிறது.. சில தினங்களில் இதே மாதிரியே பாவனாவின் தம்பியும் இறக்கிறார்.. இதனால் இவரது சந்தேகம் மேலும் தீவிரமடைகிறது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக ஒரு இளம் பெண்ணும் மரணம் அடைகிறார்.. இதை காவல்துறை அவர்கள் தற்கொலை மன நிலையில் இருந்தார்கள் என்று விசாரணையில் சொல்கிறார்கள்.. ஆனால் பாவனாவுக்கு சந்தேகம் தீராத நிலையில் இவரும் அந்த விசாரணை இறங்குகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதுதான் அதிர்ச்சியான சம்பவங்கள்..…
Read Moreதடயம் – விமர்சனம்
கதை… ஒரு தம்பதி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்கள்.. அது பற்றிய விசாரணை இறங்குகிறார் போலீஸ் சமுத்திரக்கனி.. தடயம் எதுவும் பெரிதாக கிடைக்காத சூழ்நிலையில் விசாரணையில் தடுமாறுகிறார் சமுத்திரக்கனி. இந்த சூழ்நிலையில் ஒரு தனிப்படையை ஷிவதா தலைமையில் அமைகிறது காவல்துறை.. சமுத்திரக்கனியின் விசாரணை அறிந்து கொண்ட ஷிவதா அவரையும் குழுவில் சேர்த்து கொள்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கொலையாளிகளை கண்டுபிடித்தார்களா.? கொலை நோக்கம் என்ன.? எத்தனை கொலைகள் நடைபெற்றன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… வழக்கமான சமுத்திரகனியாக அல்லாமல் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.. கொலைக்கான காரணம் அதற்கான தடயம் ஆகிய விசாரணையில் சபாஷ்.. அழகிய கண்களாலும்.. திறமையான நடிப்பாலும் ஈர்த்து விடுகிறார் ஷிவதா.. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் ஷிவதா புஷ்பா’ பட புகழ் ராஜ் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருக்கிறார்.. காவல்துறை…
Read Moreஆழி – விமர்சனம்
கதை… சரத்குமார் ஒரு போட் மெக்கானிக்.. படகு ரிப்பேர் செய்பவர்.. அதே சமயம் பல குற்ற செயல்களிலும் ஈடுபடுபவர்.. இவரது மகள் தேவிகா சகமாணவன் இந்திரஜித்தை காதலிக்கிறார்.. இவர்களின் காதலை பிடிக்காத சரத் தன் மகளின் காதலனை கடத்தி நடுகடலுக்கு சென்று படகில் சித்திரவதை செய்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது.? அவனால் தப்பிக்க முடிந்ததா.? காதலர்கள் இணைந்தார்களா.? சரத்குமாரின் நிலைப்பாடு என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சரத்குமார் – தேவிகா சதீஷ் – இந்திரஜித்.. இவர்கள் மூவரை சுற்றிய படத்தின் முழு கதை.. இடையில் வையாபுரி உள்ளிட்ட சில கேரக்டர்களும் வந்து செல்கிறது.. சரத்குமாரின் கெட்டப் தோற்றம் அனைத்தும் அருமை.. அழகான கண்களாலும் நடிப்பாலும் கவர்கிறார் தேவிகா.. நாயகன் இந்திரஜித் அனுதாப நடிப்பில் அள்ளிக் கொள்கிறார்.. தொழில் நுட்ப கலைஞர்கள்… அழகே உயிர் நீயடி.. உயிரில்…
Read Moreதாய் கிழவி – விமர்சனம்
கதை… வயதான பெண்மணி ராதிகா.. இவருக்கு மூன்று மகன்கள் & ஒரு மகள்.. கணவரை இழந்த ராதிகா வருமானத்திற்காக தன் பணத்தை எல்லாம் வட்டிக்கு விட்டு செல்வ செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.. மகன்கள் கஷ்டப்பட்டாலும் அவரவர் உழைப்பில் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்.. இவரிடம் வட்டிக்கு பணம் பெறாதவர்கள் இல்லை என்னும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்.. இதனால் ஊரில் இவருக்கு மரணமே வராதா என்று பலரும் சாபம் கொடுக்கும் சூழ்நிலை. ஒரு நாள் இவருக்கு பக்கவாதம் போல கை கால்கள் முடங்கி படுத்த படுக்கையாகிறார். இந்த சூழ்நிலையில் இளவரசு வந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் ராதிகா 160 பவுன் நகைகளை வாங்கி வந்தார் என்கிறார். அந்த நகைகள் எங்கே இருக்கிறது தெரியாமல் என மகன்கள் குழம்பில் இருக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதா.? நகைகளை…
Read MoreFOURTH FLOOR – விமர்சனம்
கதை… போர்த் ஃப்ளோர் தலைப்பிலேயே படத்தின் கதை அமைந்திருக்கிறது.. நான்காவது மாடியில் நடைபெறும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.. நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி வருகிறார் நாயகன் ஆரி.. இவர் வந்தது முதல் அந்த வீட்டில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது.. அந்த அப்பார்ட்மெண்டில் இவரது கண்களுக்கு மட்டும் மரணமடைந்த சிலர் தென்படுகிறார்கள். மற்றவர்கள் பார்க்க முடியாத உருவம் ஆரிக்கு மட்டும் தெரிவது ஏன்.? அதன் பின்னணி.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நடிகர் ஆரி அசத்திருக்கிறார்.. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க இளைஞனாக இருப்பதால் முகத்தில் பயமில்லை.. பவித்ரா மற்றும் தீப்ஷிகா இரண்டு ஹீரோயின்ஸ்.. பெரிய வேலையில்லை என்றாலும் கதைக்கு ஏற்ப இவர்களது கேரக்டர் பயணிக்கிறது. தலைவாசல் விஜய் மற்றும் சுப்பிரமணிய சிவா இருவரும் முக்கியத்துவம் பெறுகின்றனர் நடிப்பில் கவனிக்க…
Read More‘கேஸ் ஆஃப் சீதாராம்’ – விமர்சனம்
சீதாராம் பென்ஸி கேஸ் நம்பர் 18’ மற்றும் ‘கேஸ் ஆஃப் கொண்டனா’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக ‘கேஸ் ஆஃப் சீதாராம்’.. கதை… கொடூரமான முறையில் பல கொலைகள் நடைபெறுகிறது.. இதையெல்லாம் செய்பவர் ஒருவர்… அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரிய வருகிறது.. ஒரு சைக்கோ ஏன் கொலைகள் செய்ய வேண்டும்.? அவனின் நோக்கம் என்ன.? இதன் பின்னணி என்ன.? சைக்கோ கொலையாளியை நாயகன் விஜய ராகவேந்திரா எப்படி கண்டுபிடித்தார் என்பதெல்லாம் மீதி திரைக்கதை.. நடிகர்கள்… காவல்துறை அதிகாரியாக நாயகன் விஜய ராகவேந்திரா.. இவரது விசாரணை பாடி லாங்குவேஜ் படத்திற்கு கூடுதல் பிளஸ்.. அடுத்தது என்ன நடக்கும். என்ன நடந்தால் என்ன செய்வார் என்ற ஹீரோவின் எதிர்பார்ப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது.. நாயகனின் தங்கையாக உஷா பண்டாரி மற்றும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே கேரக்டர் சிறப்பு சேர்க்கிறது.. தொழில்நுட்ப…
Read More
