ஆரகன் விமர்சனம்.. முதுமையிலும் இளமை

கதை… நாயகன் மைக்கேல் தங்கதுரை.. நாயகி கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள்.. கல்யாணத்திற்கு பிறகு ஏதாவது பிசினஸ் செய்யலாம் என்கிறார் நாயகன்.. அதற்காக இருவரும் பணம் சேர்க்க முற்படுகின்றனர். அப்போது ஒரு வீட்டில் நடக்க முடியாமல் அவதிப்படும் ஸ்ரீரஞ்சனியை கவனித்துக் கொள்ள நாயகி கவிப்பிரியாவுக்கு வாய்ப்பு வருகிறது.. இதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. அப்படி சம்பாதித்தால் பிசினஸ் செய்யலாம் என எண்ணி அந்த வேலைக்கு செல்கிறார் நாயகி. முதலில் மறுக்கும் நாயகன் பிறகு நாயகியை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.. அதன்படி நாயகியும் செல்கிறார்.. அங்கு சென்ற பின்னர் தான் ஸ்ரீரஞ்சனி வீட்டில் ஒரு கண்ணாடி கூட இருக்கக் கூடாது என்கிறார்.. கண்ணாடியில் முகத்தையே கூட பார்க்காமல்.. இப்படியாக சில மாதங்கள் ஆன நிலையில் திடீரென இளமையிலேயே கவிப்பிரியாவுக்கு முதுமை வருகிறது.. தலைமுடி நரைக்கிறது.. வயதான…

Read More

சினிமாவில் யாரை நம்புவது என்று தெரியவில்லை : அறிமுக இயக்குநர் சதா நாடார் பேச்சு!

கப்புள் கிரியேஷன்ஸ் வழங்க எஸ் கே டி ஃபிலிம் ஃபேக்டரி (SKD Film Factory) தயாரிப்பில் தமிழ்த் திரை உலகில் முதல் முதலாக நிஜமான கணவன் மனைவி சதா நாடார் -மோனிகா செலினா தம்பதிகள் கதை மாந்தர்களாக நடித்து இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ல் தகா சைஆ ‘ .இணைத் தயாரிப்பு S.K.தனபால். அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இந்நிகழ்வில் படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகப் பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார். பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வில், இப்படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள சதா நாடார் பேசும் போது,   ” பெருந்தலைவர் காமராஜ் நினைவு நாளில் இந்த நிகழ்ச்சி…

Read More

ல்தகா சைஆ (காதல் ஆசை) விமர்சனம்.. கனவு உலகம்

கதை… ஈரோடு கோவையைச் சேர்ந்த நிஜமான காதல் தம்பதியர் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ல்தகா சைஆ. நாயகன் சதா நாடார் நாயகி மோனிகா இருவரும் புதுமண காதல் தம்பதிகள்.. நாயகன் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்.. இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது.. கனவில் இவரே மனைவியை கொல்வது போலவும்.. வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது போலவும் இப்படியாக பல கனவுகள் வருகிறது.. ஒரு நாள் காணும் கனவு அடுத்த நாள் நிஜத்தில் நடக்கிறது.. தன் மனைவியை தானே கொன்று விடுவோமோ தனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுமோ என்றெல்லாம் குழம்பித் தவிக்கிறார். இந்த சூழ்நிலையில் கணவர் கனவில் நடப்பதை தடுக்க இவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… சதா நாடார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.. இவர் தன்…

Read More

நீல நிறச் சூரியன் விமர்சனம்.. பெண்ணாக மாறிய ஆண்

கதை…. பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் அரவிந்த்.. ஆனால் இவருக்குள் பெண்மை அடிக்கடி எட்டிப் பார்க்க பெண்ணாக மாறி வாழ ஆசைப்படுகிறார்.. ஆனால் இந்த சமூகம் & பெற்றோர்கள் எப்படி சம்மதிப்பார்கள் என்ற மனநிலையிலே 25 வயதை கடந்து விடுகிறார். ஆனாலும் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் விடவில்லை.. ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.. ஒரு கட்டத்தில் பெண்ணாக மாற முடிவெடுத்து வீட்டிலும் பள்ளியிலும் சொல்ல பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது.. ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கும் இவர் பெண்ணாக மாறுகிறார்.. அதன் பிறகு இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. பள்ளியில் ஆசிரியராகப் பார்த்த மாணவர்கள் இவரை ஆசிரியையாக பார்த்தார்களா..? பெற்றோர்கள் உறவினர்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்…. இந்த நீல நிறச் சூரியன் படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி…

Read More

DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக பிரபலங்களும், தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.   அக்டோபர் 12 அன்று, DMY கிரியேஷன் நிறுவனர் மற்றும் (மேலும் DMY என அறியப்படும்), தலைவர் டத்தோ முஹம்மது யூசாஃப், தனது மகன் ஃபஜ்ருல் ரஹ்மானுக்கு, செட்டியா நகரில் அமைந்துள்ள கன்வென்சன் சென்டரில், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தம்பதிகளின் திருமணத்தைக் குறிக்கும் நிக்கா விழா, அங்கு அரங்கேறுகிறது. நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இரு காதல் மனங்களின் ஒருங்கிணைவு கொண்டாடப்படவுள்ளது.   இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும், கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர். மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இவ்விழா பெரும் கவர்ச்சியுடன்…

Read More

நெல்சன் வெங்கடேசனின் ‘டிஎன்ஏ’ படத்திற்கு ஜிப்ரானின் பின்னணி இசை

‘டிஎன்ஏ’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள். பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் வெளியிடும். க்ரைம் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் ‘டிஎன்ஏ’ திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.

Read More

பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்

சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய  இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது. வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் விஜயகாந்த்  வெறித்தனமாக பெரும் மெனக் கெடல் எடுத்து நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன.  இசைஞானி இளையராஜா அவர்களின் அற்புதமான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா அவர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படை தலைவன் படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார்…

Read More

செல்ல குட்டி திரைப்பட விமர்சனம் – ரசிக்கும் குட்டி

கதை… நாயகர்கள் டிட்டோ & மகேஷ் மற்றும் நாயகி தீபிக்‌ஷா ஒரே வகுப்பில் +2 படிக்கிறார்கள்.. மகேஷ் பெற்றோர் இல்லாதவர் என்பதால் அவர் மீது நாயகி தீபிக்‌ஷா இரக்கம் காட்டுகிறார்.. இது காதல் என நினைக்கும் மகேஷ் அவரிடம் காதலை சொல்ல தீபிக்‌ஷா மறுக்கிறார். என் படிப்புக்கு தொந்தரவு செய்யாதே என நாயகி சொன்னதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் மகேஷ்.. இதனால் பிளஸ் டூ வில் தோல்வி அடைகிறார். ஆனால் மற்றவர்களை நன்றாக படித்து கல்லூரிக்கு செல்கின்றனர்.. அங்கு டிட்டோவை காதலிக்கிறார் தீபிக்ஷா.. ஆனால் நான் உன்னிடம் அப்படி பழகவில்லை.. என் நண்பனின் காதலி நீ.. எனவே உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுக்கிறார். அதன் பிறகு நாயகி என்ன செய்தார்? யாரின் காதலை ஏற்றுக் கொண்டார் என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர்கள்… நாயகி…

Read More

‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா, திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்‌ஷ்மி, புஷ்பதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.   இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம்பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். வரும் அக்டோபர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.…

Read More

கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியம் என்ற நாவலை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இது 2022 ஆம் வெளியான ஆகோள் என்ற நாவலின் இரண்டாம் பாகம். பிரிட்டிஷ் இந்தியாவின் குற்றப் பரம்பரை சட்டத்தையும் அதன் நவீன பரிணாமங்களையும் விவாதிக்கும் முறையில் கபிலன் வைரமுத்து இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த மாக்கியவெல்லி இரண்டாம் பாகத்தின் மைய கதாபாத்திரமாக வருகிறான். மதுரை மாவட்டத்துக்குட்பட்ட எட்டு நாடுகள் என்ற பகுதியில் கதை நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 1801 தொடங்கி 2057 வரையிலான காலக்கட்டத்தின் கதையாக இது எழுதப்பட்டிருக்கிறது. பல வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த இரண்டு ஆண்டுகள் கள ஆய்வுக்கு பின் கபிலன்வைரமுத்து இந்த நாவலை எழுதியிருப்பதாக பதிப்பாளர் வேடியப்பன் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் அரசு இணையவெளியில் மேற்கொண்ட முக்கியமான…

Read More