அனைவருக்கும் வணக்கம், மத கஜ ராஜா – வை ராஜா- வாக கொண்டாடும் மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று வெளியான மத கஜராஜா திரைப்படம் மக்களின் பேர் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியான போதும் மக்கள் அளித்த வரவேற்பில் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் ஆகவும் இன்னும் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்தும் வருகின்றனர். மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் திரைப்படம் நன்றாக இருந்தால் அதனை மக்கள் எப்போது வெளியானாலும் மக்களின் ஆதரவும் பாராட்டுகளும் கிடைக்கும் என்பதற்கு இப்படம் மிகப்பெரிய சாட்சியாக அமைந்துள்ளது. திரையுலகில் நல்ல திரைப்படங்கள் பல சமயங்களில் வெளியிட முடியாத சூழ்நிலையில் காலம் கடந்து வெளியாகி தோல்வியும் அடைந்துள்ளது உதாரணமாக இளைய தளபதி…
Read Moreஏஸ்’ (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால்…
Read Moreகுயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு !!
குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில், இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !! குயின் அனுஷ்கா ஷெட்டி, கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடி, UV கிரியேஷன்ஸ் வழங்கும், ஃபர்ஸ்ட் பிரேம் எண்டர்டெயின்மெண்ட்டின், பான் இந்தியா திரைப்படமான “காதி” படத்தில், இணைந்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !! தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில், நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், மிரட்டலான ஆக்சன் கதாப்பாத்திரத்தில் தோன்றும் கிள்ம்ப்ஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேர்பைக் குவித்தது. UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா…
Read More‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் மாண்புமிகு ஆ.இராமச்சந்திரன் அவர்கள் ஏ.ஆர். அறக்கட்டளை திரு எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார்.
‘பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது’ என்றார் பெர்னாட்ஷா. ‘பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது ‘என்றார் சார்லி சாப்ளின். இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும். அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து ‘கள்ள நோட்டு ‘என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் .ஆ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .பாடல்களை செல்வராஜா எழுதியுள்ளார். எம் ஜி…
Read Moreநேசிப்பாயா – திரை விமர்சனம்
வெறுத்து ஒதுக்கிய நாயகி இப்போது வெளிநாட்டில் நல்ல வேலையில். புதிய வாழ்க்கைக்குள் அவள் பழசை அடியோடு மறந்திட்ட நேரத்தில் அவளுக்கு கிடைக்கிறது கொலைகாரி பட்டம். வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி மகனையே அவள் கொன்றதாக குற்றச்சாட்டு. அதுவும் போதிய சான்றுகளுடன். சட்டத்துக்கு இது போதாதா? கைதாகிறாள். கொடும் சிறைவாசம். முன்னாள் காதலியை கொலையாளியாக தொலைக்காட்சியில் பார்த்த நாயகன், காதலியை மீட்க அந்த நாட்டுக்கே போகிறான். கொலைப் பழியில் இருந்து அவளை மீட்க முடிந்ததா? முன்னாள் காதலி அவன் வருகையை எப்படி எடுத்துக்கொண்டாள்? என்பது பரபரப்பான திரைக்கதை. காதலுடனே தொடங்குகிறது, கதை. பார்த்த மாத்திரத்தில் காதல் சொல்லும் இளைஞனை தவிர்க்கப் பார்க்கிறார் அந்தப் பெண். ஒரு கட்டத்தில் அந்த காதலை ஏற்றுக் கொள்பவர், போகப் போக தனது முன்னேற்றத்திற்கு தடையாக காதலனின் நடவடிக்கைகள் இருப்பதாக நினைக்கிறாள் நாயகி, அந்தக்…
Read Moreகாதலிக்க நேரமில்லை – திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் புதுசாக சொல்லப்பட்டிருக்கும் கதை. செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்ணை புதிய கோணத்தில் நம்மை அணுக வைத்திருக்கும் படம். பெங்களூருவில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பணிபுரிகிறான் சித்தார்த்..அவனது காதலி பானு. இவர்களின் காதல் வெறும் வீட்டு பெற்றோரின் அங்கீகாரம் பெற்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், திருமணதுக்குப் பின் குழந்தை அவசியமில்லை என்கிறான், சித்தார்த். இது பானுவுக்கு பிடிக்காமல் போக, நிச்சயதார்த்த தினத்தன்று வராமல் இருந்து விடுகிறாள். இதை தனக்கு நேர்ந்த பெரிய அவமானமாக கருதும் சித்தார்த், காதலியுடனான ரிலேஷன்ஷிப்பை முறிக்கிறான். இந்நிலையில் தன் நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்க விந்து தானம் செய்கிறான் சித்தார்த். இன்னொரு பக்கம் பதிவுத் திருமணம் செய்து கொண்ட தனது கணவரை இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக பார்த்த ஸ்ரேயா கணவனை அடியோடு தலை முழுகுகிறாள். இதற்கிடையே குழந்தை மீதான…
Read More“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி!
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான ‘நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார். படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். படத்தின் ட்ரெய்லரில் திறமையான நடிகர்கள் மற்றும் பிரமாண்ட தயாரிப்பு போன்றவை மூலம் இதன் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை…
Read More“படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” – நடிகை அதிதி ஷங்கர்!
குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதிதி ஷங்கர். இப்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’நேசிப்பாயா’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, “ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது. கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார். முழு படப்பிடிப்பு அனுபவமும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆகாஷ் முரளியுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கேமரூனும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘நேசிப்பாயா’ திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக இருக்கும்”…
Read Moreராணாராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் விராட் கர்ணா – அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி – NIK ஸ்டூடியோஸ் – அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ – லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா…
Read Moreபிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி ‘பிரபுதேவாஸ் வைப்’ என்ற பெயரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த, V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நடன நிகழ்ச்சி வரும் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும், நடனக் கலைஞரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார். ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. முன்னதாக iBa ( ஐபா) நிறுவனத்தின் ticket iBa என்ற இணையதளத்தை பிரபுதேவா துவக்கி வைத்து முதல் 25000 டிக்கெட்டுகளை iBa நிறுவனத்தின்…
Read More
