ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எங்கள் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். தலைவரின் “கூலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன் படத்தின் பிரம்மாண்ட மறுவெளியீட்டையும் கருத்தில் கொண்டு, எங்கள் பட வெளியீட்டு தேதியை மாற்றியமைத்துள்ளோம். பத்திரிகை, ஊடக நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் செய்துள்ள பணிக்கு மனமார்ந்த நன்றிகள். எங்களை அன்போடு தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எங்கள் இதயப்பூர்வ நன்றிகள். “சொட்ட சொட்ட நனையுது” படத்தை திரையரங்கில் பார்த்து, மறக்க முடியாத சினிமா அனுபவத்தை நீங்கள் பெறுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி…
Read Moreமஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்தப் படம் பாலன்
மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் திருமதி ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளன. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம் “பாலன்” என்ற பெயரில் உருவாகிறது என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு பணிகளையும், இசையமைப்பாளராக சுஷின் ஷியாம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை விவேக் ஹர்ஷன் மேற்கொள்கின்றனர். “பாலன்” திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம்…
Read Moreஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் ‘அக்யூஸ்ட்’ படக்குழு
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ”இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து…
Read Moreகடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா
Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் *தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது…* எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.. *பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் பேசும்போது.* கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே…
Read Moreகடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!!
Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் *தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது…* எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.. *பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் பேசும்போது.* கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே…
Read Moreவேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!!
துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும்…
Read Moreஉலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா. நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்.
நம் முன்னோர்கள் தங்கள் உடமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்து நமக்கு வாங்கிக்கொடுத்த சுதந்திரம்… நாம் சுதந்திரம் பெற்றதின் நோக்கம், நம்மை நாமே ஆளும் குடியாட்சியைப்பெறுவதே. அந்தக்குடியாட்சியின் தத்துவம் என்பதே, நம்மை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமை. அந்த உரிமை நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அந்த “வாக்குரிமை” தான், ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. அந்த உரிமை எந்தவொரு தனிமனிதனுக்கு மறுக்கப்பட்டாலும், அது நம் தேசத்தை சர்வாதிகாரக் குழிக்குள் தள்ளி விடும். அந்த நிலைமை ஏற்பட்டு விடாமல், நம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, ஒவ்வொரு தனிமனிதனின் தார்மீக கடமையாகும். அது தான், நம் நாட்டுக்காகப் போராடி, உயிர்த்தியாகங்கள் செய்த, நம் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனும், மரியாதையுமாகும். ஆகவே, சுதந்திர தினத்தை கொண்டாடுவதென்பது, வெறும் கொடிகளை ஏற்றி கலைந்து விடாமல், நம் தேசத்தின் அரசியல் சாசன சட்டத்தையும், அது…
Read Moreகூலி – திரைவிமர்சனம்
சென்னையில் ஆண்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வருகிறார் தேவா ( ரஜினி). ஒரு நாள் விசாகப்பட்டினத்தில் இருக்கும் அவரது உயிர் நண்பன் ராஜசேகர் ( சத்யராஜ் ) இறந்து விட்டதாக செய்தி வருகிறது. துக்கம் விசாரிக்க விசாகப்பட்டினம் விரைகிறார். அங்கே சென்றபோது தான் சத்யராஜ் இயற்கையில் மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தை தன் ஆளுமைக்குள் வைத்துக்கொண்டு கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் சைமன் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவன். தன் நிர்வாகத்தில் யார் தப்பு செய்தாலும் மரணம் நிச்சயம். அதற்கேற்ப ஆரம்பத்திலேயே கூலித் தொழிலாளி காளி வெங்கட்டை தூக்கில் தொங்க விடுகிறார்கள். ( போலீஸ் உளவாளியாம். அதனால் இந்த கொடூர தண்டனை) இந்த மாதிரி கொல்லப்பட்டவர்களின் பாடியை அங்கே…
Read Moreதிரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட புகழ்பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர்;
இந்திய திரைப்படத் துறையில் தன்னுடைய இடைவிடாத தொழில்முறை அணுகுமுறை மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகக் காப்பதற்கான அர்ப்பணிப்பிற்காக புகழ்பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டப்பட்டுள்ளார். திரைத்துறையின் மூத்த நிபுணரும், Paras Publicity Service நிறுவனத்தின் உரிமையாளருமான ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி, சமீபத்தில் போனி கபூர் தனது நிறுவனத்தின் விற்பனையாளர், தொழில்நுட்பக் குழுவினர், மற்றும் இணைபணியாளர்களுக்கு படத்தின் வணிக வெற்றியோ, தோல்வியோ பொருட்படுத்தாமல், முழு தொகையையும் செலுத்தி வந்த வரலாற்றைப் பாராட்டினார். இந்த நடைமுறை, Koi Mere Dil Se Poochhe, Shakti போன்ற பழைய படங்களில் இருந்து Mili (2022), Maidaan (2024) போன்ற சமீபத்திய தயாரிப்புகளிலும் தொடர்ந்துள்ளதை கவனித்து அங்கீகரித்தார் ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி. இதன் உதாரணமாக, மறைந்த நடிகர் சஞ்சீவ் குமாரின் குடும்பத்தாருக்கு ₹1.5 லட்சம் தனிப்பட்ட கடனை உடனடியாகத் திரும்ப செலுத்தி, நிலுவையில் இருந்த…
Read Moreஹோம்பாலே பிலிம்ஸ் & PVR INOX – ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ரசிகர்களை ‘காந்தாரா’ உலகிற்குள் அழைக்கும் வகையில், புகழ்பெற்ற திரை-லோகோவை (logo) – இந்த சுதந்திர தின வார இறுதியில், மறுவடிவமைப்பு செய்து வெளியிட்டுள்ளது !
இந்தியாவின் மிகப் பெரிய, பிரீமியம் திரையரங்க குழுமமான PVR INOX, ஹோம்பாலே பிலிம்ஸுடன் இணைந்து, சினிமா அனுபவத்தை தொடர்ந்து புதிய உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது. இந்த சுதந்திர தின வார இறுதியில், PVR INOX தனது புகழ்பெற்ற லோகோவில் (logo) காந்தாரா திரைப்படத்தின் அசத்தல் அம்சங்களை இணைத்து, அக்டோபர் 2 அன்று வெளியாகும் காந்தாரா: அத்தியாயம் 1க்கு ஒரு கண்கவர் முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. இன்று முதல், ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ பார்க்க வரும் ரசிகர்கள், PVR INOX லோகோவை உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவில், அனைத்து திரையரங்குகளிலும் கண்டு ரசிக்க முடியும். அதிநவீன திரை-ப்ரொஜெக்ஷன் முறை மற்றும் நாட்டின் உச்சமான கலை வடிவ ( state-of-the-art ) டிஜிட்டல் மாஸ்டரிங் தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்பட்ட இந்த…
Read More