~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல்,  இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான  ZEE5,  வரும் சுதந்திர  தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க,  அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா”  ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும்.  இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாக செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பயணத்தைப் பற்றிச்…

Read More

மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் ‘வடம்.’, நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக  “வடம்” உருவாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது. பிரம்மாண்டமாக உருவாகும் “வடம்” படம், கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில்,  படக்குழுவினர் கலந்துகொள்ள 1500 பேருக்கு அன்னதானம் அளித்து, பிரம்மாண்ட பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது. தமிழக கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்று மஞ்சுவிரட்டு, கிராம மக்கள் உயிராக நேசிக்கும் வட மஞ்சு விளையாட்டின் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. ஆனால் முதல் முறையாக மஞ்சு விரட்டு…

Read More

மிஷ்கின், அனுராதா ஶ்ரீராம், தமன், உன்னி கிருஷ்ணன் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ஜட்ஜ்கள் அறிவிப்பு

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை யாருமே எதிர்பாராத வண்ணம் ஜட்ஜாக இயக்குநர் மிஷ்கின் களமிறங்குகிறார். சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் ஜட்ஜாக களமிறங்குகிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமையவிருக்கிறது. இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் என மண்டல வாரியான பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.…

Read More

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 – #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. ‘நேச்சுரல் ஸ்டார் ‘ நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41 வது திரைப்படத்தில் #DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரமான தயாரிப்பாளர் சுதாகர்…

Read More

ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ‘கூலி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள மாபெரும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படம் ‘கூலி’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். கிங் நாகார்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்த திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் ஆகஸ்ட் 14 அன்று டி. சுரேஷ் பாபு, தில் ராஜு, சுனில் நரங், பாரத் நரங் ஆகியோருக்கு சொந்தமான ஏசியன் மல்டிபிளெக்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, படக்குழுவினர் பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். **கிங் நாகார்ஜுனா:** “‘நின்னேபெல்லாடத்தா’ படத்திற்குப் பிறகு, ‘அன்னமய்யா’…

Read More

பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய பொய் சொல்வது எப்படி என்கிற புத்தகம் உள்ளது. பல நுணுக்கமான விசயங்களுடன், பார்த்தவுடன் ஆச்சரியப்பட வைக்கும், யோசிக்க வைக்கும், புதுமையான இந்த…

Read More

மீஷா – திரை விமர்சனம்

சாதிய பாகுபாடு மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் கட்சிகள் எப்படி ஆதாயம் தேடிக் கொள்கிறது என்பதை இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு சொல்லி இருக்கிறார்கள். வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். கல்லூரி பருவத்தில் அரசியல் கட்சி ஒன்றில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த கட்சியோ மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை தடுத்து, அதன் மூலம் ஆதாயம் தேடுவதை அறிந்து கொள்ளும் கதிர், கட்சியை எதிர்த்து மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். இது கட்சிக்கு பொறுக்குமா? கதிரை வீழ்த்த கட்சி விரிக்கும் சதி வலையில், அவனது இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம் நண்பர்கள் வாழ்க்கை என்னவானது? கதிர் என்னவாகிறான்? என்பதை இதயம் தடதடக்கும் வகையில் சொல்லி இருக்கிறார்கள். கதிருக்கு மலையாள சினிமாவில் இது…

Read More

சென்னை பைல்ஸ் முதல் பக்கம் – திரை விமர்சனம்

நகரத்தில் ஒரே ஸ்டைலில் நடக்கும் தொடர் கொலைகள் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. இந்த கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுக்கு வந்து சேர்கிறது. இது விஷயத்தில் அவருக்கு துப்பறிய உதவுகிறார் வெற்றி. இவர் யாரென்றால் காலஞ்சென்ற பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவரின் மகன். இவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரிக்க விரும்பிய ஒரு பத்திரிகை, இவரை சென்னையில் உள்ள தனது பத்திரிகை அலுவலகத்திற்கு அழைக்க… வந்த வேலை முடிந்து கிளம்பும்போது, இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த தொடர் கொலை விஷயத்தில் தம்பி ராமையாவுக்கு வெற்றி சில ஆலோசனைகளை சொல்லப் போக… அத்தனையும் சரியாக இருப்ப தோடு கொலைகாரனை நெருங்கவும் உதவுகிறது. கொலையாளியை கண்டு பிடித்தார்களா? தொடர் கொலைகளுக்கான நோக்கம் என்ன? என்பது மீதிக் கதை. நாயகனாக…

Read More

அக்யூஸ்ட் – திரை விமர்சனம்

சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு கொலை வழக்கில் கைதான கணக்கு (உதயா) என்கிற கைதியை போலீஸ் வேனில் அழைத்துப் போகிறார்கள். அவனை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போலீசாரில் வேந்தனும் ஒருவன். இந்த பயணத்தில் கணக்கை கொல்ல ஒரு ரவுடி கூட்டம் துரத்துகிறது. இன்னொரு பக்கம் உயர் போலீஸ் அதிகாரி தரப்பிலும் சேலம் போவதற்குள் கணக்கின் கணக்கை முடிக்க உத்தரவிடுகிறார். இருதரப்பு கொலை முயற்சியில் இருந்தும் கணக்கு தப்பினானா…யார் இந்த கணக்கு? என்ற கேள்விக்கு பரபரப்பும் விறுவிறுப்பும் இணைந்த திரைக்கதை பதில் தருகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, அவ்வப்போது பிளாஷ்பேக் மூலம் சொல்லும் திரைக்கதை உத்தியே அடுத்தடுத்த காட்சிகளை சுவாரசியமாக்கி விடுகிறது. கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும் துறுதுறுப்புமாக படம் முழுக்க வருகிறார். காதல் காட்சிகளில் ஒரு வெள்ளந்தியான…

Read More

படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதே ஐபி கிளைம்ப் சேவையின் நோக்கம்

அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுப்படுத்தும் ஃபிப்செயின் டெக்னாலஜி, ஐபி கிளைம்ப் (IP Climb) எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. படைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ள இன்றைய காலகட்டத்தில் இதில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐபி கிளைம்ப் தொடங்கப்பட்டுள்ளது. திரைப்பட மற்றும் ஊடக அறிவுசார் சொத்துகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகை சட்ட உதவிகளையும் வழங்கும் ஐபி கிளைம்ப், படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை…

Read More