நீல நிறச் சூரியன் விமர்சனம்.. பெண்ணாக மாறிய ஆண்

கதை…. பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் அரவிந்த்.. ஆனால் இவருக்குள் பெண்மை அடிக்கடி எட்டிப் பார்க்க பெண்ணாக மாறி வாழ ஆசைப்படுகிறார்.. ஆனால் இந்த சமூகம் & பெற்றோர்கள் எப்படி சம்மதிப்பார்கள் என்ற மனநிலையிலே 25 வயதை கடந்து விடுகிறார். ஆனாலும் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை மட்டும் விடவில்லை.. ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.. ஒரு கட்டத்தில் பெண்ணாக மாற முடிவெடுத்து வீட்டிலும் பள்ளியிலும் சொல்ல பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது.. ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கும் இவர் பெண்ணாக மாறுகிறார்.. அதன் பிறகு இவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. பள்ளியில் ஆசிரியராகப் பார்த்த மாணவர்கள் இவரை ஆசிரியையாக பார்த்தார்களா..? பெற்றோர்கள் உறவினர்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்…. இந்த நீல நிறச் சூரியன் படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி…

Read More

செல்ல குட்டி திரைப்பட விமர்சனம் – ரசிக்கும் குட்டி

கதை… நாயகர்கள் டிட்டோ & மகேஷ் மற்றும் நாயகி தீபிக்‌ஷா ஒரே வகுப்பில் +2 படிக்கிறார்கள்.. மகேஷ் பெற்றோர் இல்லாதவர் என்பதால் அவர் மீது நாயகி தீபிக்‌ஷா இரக்கம் காட்டுகிறார்.. இது காதல் என நினைக்கும் மகேஷ் அவரிடம் காதலை சொல்ல தீபிக்‌ஷா மறுக்கிறார். என் படிப்புக்கு தொந்தரவு செய்யாதே என நாயகி சொன்னதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் மகேஷ்.. இதனால் பிளஸ் டூ வில் தோல்வி அடைகிறார். ஆனால் மற்றவர்களை நன்றாக படித்து கல்லூரிக்கு செல்கின்றனர்.. அங்கு டிட்டோவை காதலிக்கிறார் தீபிக்ஷா.. ஆனால் நான் உன்னிடம் அப்படி பழகவில்லை.. என் நண்பனின் காதலி நீ.. எனவே உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுக்கிறார். அதன் பிறகு நாயகி என்ன செய்தார்? யாரின் காதலை ஏற்றுக் கொண்டார் என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர்கள்… நாயகி…

Read More

 தேவரா விமர்சனம்.. கடல் கொள்ளை

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சையப் அலி கான், பிரகாஷ்ராஜ், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் ’தேவரா’ படம் பான் இந்தியா வெளியீடு.. கதை… நம் நாட்டிற்கு சட்ட விரோதமாக வரும் ஆயுதங்களை தொழில் அதிபர் கட்டளைக்காக செங்கடலுக்கே சென்று கொள்ளையடித்து கொடுப்பது ஜூனியர் என்டிஆர் இன் தொழில்.. இவருக்கு உடந்தையாக சைப் அலிகான் கலையரசன் உள்ளிட்ட நண்பர்கள் உண்டு. ஒரு கட்டத்தில் இவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கடற்படை அதிகாரி நரேன்.. நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்கிறீர்கள் என சொல்கிறார். இதனையடுத்து என்டிஆர் திருந்துகிறார்.. ஆனால் இவரது நண்பர்களோ எங்களது தொழில் இதுதான்.. நாங்கள் விட முடியாது என பிரச்சனை செய்யவே மோதல் வெடிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? நாட்டிற்கு துரோகம் செய்த நண்பர்களை இவர் தீர்த்து…

Read More

Hitler ஹிட்லர் விமர்சனம்.. கொள்ளையன்

கதை… தன் நண்பன் ரெட்டின் கிங்சிலியை தேடி சென்னைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி.. அங்கு ஒரு வேலையாக தங்குகிறார்.. அப்போது நாயகி ரியாவை அடிக்கடி டிரெயினில் சந்திக்க சந்திக்க காதலும் கொள்கிறார். இதனிடையில் தேர்தல் நேரத்தில் ட்ரெயினில் அடிக்கடி அரசியல்வாதியின் கோடிக்கணக்கான கருப்பு பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொள்ளையனை தேடி போலீஸ் விசாரித்து வருகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளையனை போலீஸ் நெருங்கி துப்பாக்கி சூடு நடத்த முயலும் போது ஒருவன் விஜய் ஆண்டனி சுட்டு விடுகிறான்.. அப்பொழுது அவனை பிடித்து மிரட்டி கௌதம் மேனன் விசாரிக்கும் போது விஜய் ஆண்டனி தான் கொள்ளையன் என அந்த நபர் சொல்கிறார். அப்படி என்றால் விஜய் ஆண்டனி உண்மையில் யார்.? அவருக்கு கொள்ளை அடிப்பது நோக்கம் என்ன?என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை. நடிகர் – நடிகையர் : சமூக…

Read More

தில்ராஜா விமர்சனம்.. செம தில்லு

கதை… நாயகன் விஜய் சத்யா.. தன் மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.. ஒருநாள் ஷாப்பிங் சென்று விட்டு இவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு அமைச்சரின் மகன் இவரிடம் பிரச்சனை செய்கிறார்.. மனைவி மகளைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்தும் சென்று விடுகிறார்.. ஆனால் மந்திரி மகன் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது.. இதனை எடுத்து போலீசின் கவனம் இவர் பக்கம் திரும்பி விடுகிறது… அதன் பிறகு என்ன நடந்தது? அமைச்சரிடம் இருந்து தப்பித்தாரா.? போலீஸிடம் இருந்து தப்பித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர் – நடிகையர் : பாட்டு ஃபைட் என இரண்டிலும் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் சத்யா.. கிளைமாக்ஸ் சீனில் சட்டையை கழட்டி விட்டு அவர் மோதும் சண்டை காட்சி வேற லெவல் ரகம்.. ஸ்மார்ட்டான இவருக்கு…

Read More

மெய்யழகன் விமர்சனம்.. உறங்காத உறவுகள் 4.5/5

கதை.. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் அரவிந்த்சாமி.. சொத்து பிரச்சனை காரணமாக இவரது குடும்பம் தனித்துவிடப்பட பெற்றோருடன் சென்னையில் குடியேறுகிறார். திருமணம் ஆகி மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமி ஒரு கட்டத்தில் தன் சித்தி மகள் திருமணத்திற்காக தன் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்தசாமி அங்கு கார்த்தியை சந்திக்கிறார். சிறு வயது முதலே அரவிந்த்சாமி மீது அதீத பாசம் கொண்ட கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார்.. ஆனால் கார்த்தி யார் என்று கூட தெரியாமல் வேறு வழி இல்லாமல் அவருடன் கொஞ்சமாக பேசுகிறார்.. போன் நம்பர் கொடுப்பதை கூட தவிர்க்கிறார். இவர் யார்.. இவர் நமக்கு எதற்காக செய்ய வேண்டும்.. அத்தான் அத்தான் என்று…

Read More

சட்டம் என் கையில் – விமர்சனம்

கதை… ஏற்காட்டில் ஓர் இரவு நேரத்தில் காரில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார் நாயகன் சதீஷ்.. ஏற்கனவே மன உளைச்சலில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென டூவீலரில் வந்த ஒருவன் மீது இடித்து விடுகிறார் சதீஷ்.. அந்த விபத்தில் மரணம் அடைந்த அவரை வேறு வழி இல்லாமல் கார் டிக்கியில் போட்டுக் கொண்டு பயணம் செய்கிறார். காட்டுப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபடும்போது குற்றத்திலிருந்து தப்பிக்க சரக்கு அடித்தது போல் நடிக்கிறார்.. மேலும் போலீஸ் பாவல் நவகிதனே அடித்து விடுகிறார்.. இதனை எடுத்து போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அனைத்து வழக்குகளையும் சதீஷ் மீது போட காவல்துறை திட்டமிடுகிறது.. ஆனால் போலீஸ் பாவல் மீது மற்றொரு போலீஸ் அஜய் ஈகோ மோதலில் இருக்கிறார். இதனை பயன்படுத்த திட்டமிடுகிறார் சதீஷ். அதன் பிறகு சதீஷ் என்ன செய்தார்…

Read More

லப்பர் பந்து விமர்சனம் 4.5/5.. பறக்கும் பந்து

 கதை… தினேஷ் ஜோடி ஸ்வஸ்விகா… ஹரிஷ் கல்யாண் ஜோடி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.. தினேஷ் மற்றும் ஹரிஷ் இருவரும் கிரிக்கெட் வெறியர்கள்.. இதில் தினேஷ் (கெத்து) – அவர் விஜயகாந்த் ரசிகர்.. ஹரிஷ் (அன்பு) இவர் விஜய் ரசிகர் 20 வயது ஆகும் முன்பே தன் காதலியை கரம் பிடித்தவர் தினேஷ்.. இவருக்கு 20 வயது மகள் இருக்கும்போது இவருக்கு கிரிக்கெட் வீரன் ஆர்வம் குறையவில்லை இதனால் மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை வருகிறது.. மேலும் கிரிக்கெட் போட்டியின் போது தினேஷுக்கும் ஹரிஷுக்கும் ஈகோ மோதல் வெடிக்கிறது.. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹரிசை காதலிக்கிறார் தினேஷ் மகள் சஞ்சனா.. ஏற்கனவே தினேஷின் கிரிக்கெட் ஆர்வத்தால் தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஸ்வஸ்விகா மகளின் காதலை எதிர்க்கிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது.? கிரிக்கெட் மருமகனை ஸ்வஸ்விகா தினேஷ் ஏற்றுக்…

Read More

கடைசி உலகப்போர்- திரை விமர்சனம்

இதுவரை நட்பு ரொமான்ஸ் என பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் ஹிப் ஹாப் ஆதி… இந்த முறை நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் என ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷனில் இறங்கி வித்தியாசமான ஒரு படைப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். கதை… 2028 ல் நடக்கும் கதையை வடிவமைத்திருக்கிறார்.. ஐ நா சபைக்கு போட்டியாக ரிபப்ளிக் என்ற அமைப்பு உருவாகுகிறது.. அதில் இணைந்து கொள்ள இந்தியா மறுக்கும் போது அத்துமீறி இந்தியர்களை கைக்குள் கொண்டு வருகிறது அந்த அமைப்பு.. அப்போது மோதல் போர் வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? ஆதியின் பங்கு என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி என்றாலும் படம் முழுக்க வருவதும் வாய்ஸ் ஓவரில் பேசுவதும்…

Read More

நந்தன் – திரைவிமர்சனம்

கதை… புதுக்கோட்டை மாவட்டம் வனங்கான்குடி என்ற பகுதியில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.. போட்டியே இல்லாத ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பாலாஜி சக்திவேல்… இவரது வீட்டில் அப்பாவுக்கு பணிவிடை செய்யும் ஒரு வேலையாளாக இருக்கிறார் சசிகுமார்… இவர்களின் பகுதி தலித்துகளுக்கான ரிசர்வ் பகுதியாக மாற்றப்படுகிறது. இதனை அடுத்து வேறு வழி இன்றி தன் வீட்டில் பணிபுரியும் சசிகுமாரை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்து ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார். பாலாஜி சக்தி வீட்டில் வேலை செய்த சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவரான பின்னர் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை. நடிகர்கள்.. சசிகுமார் தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து அம்பேத்குமார் என்ற கேரக்டரை அசத்தலாக வடிவமைத்து இருக்கிறார்.. ஒரு கமர்சியல் ஹீரோ இந்த அளவிற்கு துணிந்து செய்ய தயங்குவார்..…

Read More