சுமோ – திரை விமர்சனம

சிவா அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் அந்த விளையாட்டில் தன்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர் சென்னை கடற்கரையோரம் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே அலைச்சறுக்கு விளையாட்டையும் தொடர்கிறார். இப்படி ஒரு நாள் அலைச்சறுக்கு விளையாட்டுக்காக கடற்கரை வருபவர் அங்கே கரையோரம் ஓங்குதாங்கான ஒருவர் மயக்க நிலையில் இருப்பதை காண்கிறார். அவரைக் கண் விழிக்க வைத்து தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். பழசு எல்லாம் மறந்து போன அந்த நபரும் தற்போது குழந்தையின் மனநிலையில் இருக்கிறார். இந்நிலையில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டவர் ஜப்பானில் உள்ள பிரபல சுமோ மல்யுத்த வீரர் என்பது தெரிய வர, சிவா அவரை அழைத்துக் கொண்டு ஜப்பான் போகிறார். அங்கே போன பிறகுதான் அந்த சுமோ மல்யுத்த வீரர் அவரது எதிரிகளால் நாடு கடத்தப்பட்டவர் என்பது தெரிய வர… இதற்கிடையே மருத்துவ சிகிச்சை…

Read More

வல்லமை – திரை விமர்சனம்

பாதிக்கப்பட்டவர்கள் போதிக்கும் புதிய பாடம். மகளுக்கு நேர்ந்த பாதிப்புக்கு தந்தை எடுக்கும் புதிய அவதாரம். கிராமத்தில் மனைவி, மகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விவசாயி பிரேம்ஜியை மனைவியின் திடீர் மரணம் மொத்தமாக புரட்டிப்போடுகிறது. இதன் பிறகு அந்த ஊரில் இருக்க மனதின்றி மகளுடன் சென்னை வருகிறார். இப்போது அவரது ஒரே கனவு, மகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பது தான். சென்னையில் கிடைத்த புதிய ஆட்டோ நண்பர் உதவியுடன் வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளிப் படிப்பு என்று அனைத்தும் அமைகிறது. இதற்கிடையே உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து தந்தையிடம் ஒரு நாள் மகள் பகிர்ந்து கொள்ள, மகளின் உடல்நிலை பாதிப்பு தொடர்பாக தந்தையும் மகளும் மருத்துவரை சந்திக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் சிறுமி தனக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்…

Read More

கேங்கர்ஸ் – திரை விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சுந்தர் சி-, வடிவேலு கூட்டணி காமெடிக் கொடி பிடித்திருக்கும் படம். அரசுப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போக, அந்தப் பள்ளி ஆசிரியை கேத்ரின் தெரேசா கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார் புகாரின் பேரில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை ஆசிரியர் என்ற போர்வையில் அந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கிறது. இதே சமயத்தில் சுந்தர் சி. அந்த பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வருகிறார். உள்ளூர் அரசியல்வாதியான மைம் கோபி இந்தப் பள்ளியின் தாளாளர் என்ற முறையில் தனது தம்பி அருள்தாசுடன் சேர்ந்து பள்ளியை சமூக விரோத செயலுக்காக பயன்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் சுந்தர். சி, அடையாளம் தெரியாதபடி தன்னை மறைத்து வேஷம் போட்டுக் கொண்டு அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். இதைப்…

Read More

சச்சின் – திரை விமர்சனம்

கண்டதும் காதல் என்பதில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத நாயகி ஜெனிலியா. அவ்வப்போது அவரை அன்பால் ஆகர்ஷித்து காதலை அவர் வாயாலே சொல்ல வைக்க முயல்பவர் நாயகன் விஜய்.கல்லூரியில் படிக்கும் இந்த இருவருக்குள்ளும் காதல் அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டே இருக்க… கடைசியோ கடைசியாக இன்னும் ஒரு மாதத்துக்குள் நீயாக என்னிடம் காதல் சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் அதன் பின் நீ யாரோ நான் யாரோ… என்கிறார் விஜய். 30 நாட்களில் ஜெனிலியா விஜய் யிடம் காதலை சொன்னாரா என்பது சொட்ட சொட்ட இதயம் நனைக்கும் காதல் கதை.2005 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய இப்படத்தில் விஜய்யை ஸ்டைலிஷாக ரசிக்க முடிகிறது. படம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் துறுதுறு விஜய் ரொம்பவே ரசிக்க வைக்கிறார். ஜெனிலியா மட்டுமென்ன… அவர் சிரித்தாலும் அழகு கோபத்தில் உம் மென்றிருந்தாலும்…

Read More

அம்..ஆ..! – திரை விமர்சனம்

கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். அதில் ஒரு குடிசையில் வசிக்கும் தேவதர்ஷினி, பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார். பேச்சுத் திறனற்ற அந்த குழந்தையை யாரிடமும் நெருங்க விடாமல் மிக மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையே, அந்த மலைக் கிராமத்திற்கு சாலை பணிக்கு வந்ததாக கூறும் திலீஷ் போத்தன், வந்த வேலையை விட்டுவிட்டு தேவதர்ஷினி, அவரிடம் இருக்கும் பெண் குழந்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார். திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது அந்த ஏரியா மக்களால் ஆசான் என்று அழைக்கப்படும் முதியவருக்கு சந்தேகம். ஊருக்குள் வந்திருக்கும் புதிய நபர் பற்றி விசாரிக்க தொடங்குகிறார். அப்போது தங்கள் மலை கிராமத்துக்கு வந்திருக்கும் அந்த புதியவர் சாலையை செப்பனிட வரவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார். இதற்கிடையே அந்த புதிய மனிதனின் பார்வையில்…

Read More

டென் அவர்ஸ் – திரை விமர்சனம்

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் தர… புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி ராஜுக்கு அந்தப் பெண் திட்டம் போட்டு கடத்தப் பட்டது தெரிய வர… சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த சிபி மறுநாள் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த கடத்தல் கேஸை கையில் எடுத்தவருக்கு இடையில் இருப்பது பத்து மணி நேரம் மட்டுமே. அந்த 10 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வியூகம் அமைத்தவருக்கு கூடுதலாக இன்னொரு கேசும் சவாலாக அமைகிறது. சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக போனில் தகவல் வர, அந்த பெண்ணையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது, புகார்…

Read More

நாங்கள் – திரை விமர்சனம்

சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கும் படம். 1998 இல் நடக்கிற கதை. ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வரும் ராஜ்குமாருக்கு மூன்று மகன்கள். மனைவியை பிரிந்து வாழும் ராஜ்குமாருக்கு மகன்கள் தான் எல்லாமே. தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து வைப்பதில் தொடங்கி தந்தையின் ஷுவை பாலிஷ் போட்டு வைப்பது வரை எல்லாமே இந்த நண்டு சிண்டுகளான மூவர் தான். இந்த மூன்று சிறுவர்களும் அந்த தந்தையிடம் நிம்மதியாக இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. சிறு தவறு செய்தாலும் போட்டு புரட்டி எடுத்து விடுவார் தந்தை. இதனால் மூன்று பிள்ளைகளும் அந்த வீட்டில் ஒருவித நடுக்கத்துடனே இருந்து வருகிறார்கள். இந்த குடும்பத்தில் அடுத்த கட்ட சோதனையாக ராஜ்குமார் நடத்தி வரும் பள்ளி நஷ்டத்தில் இயங்குகிறது. ஒரு கட்டத்தில் அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத…

Read More

குட் பேட் அக்லி – திரை விமர்சனம்

மும்பையையே ஆட்டி வைத்த டான் ஏ.கே. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் நேர்கிறது. அழகான பெண்ணுடனான காதல் திருமணத்தில் முடிகிறது. மகன் பிறக்கிறான். இப்போது மனைவியின் ஒரே வேண்டுகோள், டான் வாழ்க்கையை தூக்கி போட்டுவிட்டு சரணடையுங்கள். தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும்போது அமைதியான வாழ்க்கை வாழலாம் என்பது தான். டானுக்கும் அது சரி யெனப்பட, பிறந்த குழந்தையின் முன்பு அவனது 18-வது வயதில் சந்திப்பதாக உறுதி கூறிய பிறகு போலீசில் சரணடைகிறார். 18 வருட தண்டனை முடிந்து வீடு வரும்போது பழைய எதிரிகள் செய்த சதியால் போதை பொருள் உபயோகித்த குற்றத்துக்காக இப்போது மகன் ஜெயிலில். மகன் குற்றவாளி அல்ல என்று நிரூபித்து தண்டனையிலிருந்து விடுபட வைக்க வேண்டும். இந்த சதிக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை ‘களை’ எடுக்க வேண்டும். இதற்காக மீண்டும்…

Read More

E.M I மாத தவணை – திரை விமர்சனம்

மொத்தமாக விலை கொடுத்து வாங்க முடியாத பொருட்களை தவணை முறையில் வாங்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்த போது மக்களால் விரும்பிய பொருட்களை வாங்க முடிந்தது. இதுவே காலப்போக்கில் மாதத் தவணையில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற முடிவுக்கு மக்களை கொண்டும் வந்தது. இந்த மாத தவணை இன்று பல குடும்பங்களில் மாதாந்திர வேதனையாகவும் உருமாறி இருக்கிறது. இந்த கதை களத்தை கருவாக எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஜாலியாகவும் கொஞ்சம் சீரியஸாக வும் சொல்கிற திரைக்கதை படத்தின் முழு முதல் பலம். நாயகன் சதாசிவம் நாயகி சாய் தன்யா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். காதலாகிறார்கள். காதலியை குஷிப்படுத்த மாத தவணையில் ஒரு பைக் வாங்குகிறார் நாயகன். இந்த காதல் திருமணத்தில் முடிந்த போது இப்போது காதல் மனைவியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்த மாத தவணையில் ஒரு…

Read More

டெஸ்ட்- திரை விமர்சனம்

மூன்று கேரக்டர் களை வைத்து ஒரு முத்தான கதை. அதை விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிற அறிமுக இயக்குனர் சஷி காந்துக்கு ஒரு சபாஷ். நட்சத்திர கிரிக்கெட் வீரராக கொண்டாடப்பட்ட சித்தார்த் கடைசி இரண்டு போட்டிகளில் சரியாக சோபிக்காததை காரணம் காட்டி அணியில் இருந்து விலகச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது கிரிக்கெட் வாரியம். சித்தார்த்தோ தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர விரும் பாமல், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே மற்ற காரியம் என்கிறார். தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கு உரிய அங்கீகாரம் பெறுவதற்கு கடும் முயற்சி மேற்கொள்கிறார். ஆசிரியராக பணியாற்றும் அவரது மனைவி நயன்தாரா, கணவரின் லட்சியத்திற்கு உறுதுணையாக…

Read More