லின் இயக்கத்தில் Boonie Bears: The Hidden Protector ஒரு காடு.. அதில் அண்ணன் பிரையர், தம்பி பிராம்பள் மற்றும் அவர்களின் நண்பன் விக் ஆகியோர் ஒரு கட்டத்தில் நியான் (Nian) மான்ஸ்டரை சந்திக்கிறார்கள்.. ஒரு சூழ்நிலையில் அந்த மான்ஸ்டர் மாய சக்திகளை இவர்களுக்கு கொடுத்து விட்டு செல்கிறார்.. பின்னர் அந்த சக்தி மூலம் மாய உலகமான ஈவ் சிட்டிக்கு செல்கிரார்கள்.. இப்படியான நேரத்தில் பிரையர் தன் அண்ணன் பதவியை இழந்து விடுகிறார்.. மேலும் மிகவும் பலவீனமானவராக இருந்து வருகிறார்.. இதனை அறிந்த ஒரு அரக்கன் ஒரு சக்தி வெளியாகிறது.., இதனால் மனித உலகம் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறது… இந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள், என்பதை அனிமேஷன் பேண்டஸியாக ’பூனி பியர்ஸ் : தி ஹிடன் ப்ரொடெக்டர்’ கிளைமாக்ஸ் சொல்கிறது.. …
Read MoreCategory: விமர்சனம்
அனந்தன் காடு விமர்சனம்…
கதை… கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடக்கும் கதை இது.. தமிழ் ரசிகர்களுக்காக மலையாள நடிகர்களும் தமிழ் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.. இலங்கையில் வாழும் ஆரியா தமிழர்.. ஒரு கட்டத்தில் அகதியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்.. திருவனந்தபுரத்தில் வசிக்கும் போது அங்கு உள்ள ஒரு கூலிப்படையில் இணைகிறார்.. நால்வர் அணியில் உள்ள அந்த கூலிப்படையில் இணைந்த பிறகு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களுக்கு ஆரியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? அந்த சதி திட்டங்களுக்கு அவர் துணை சென்றாரா.? அவர்களின் நோக்கம் என்ன.? கூலிப்படையாக செயல்படுவதால் கேரளா அரசியலில் ஏற்படும் நிகழ்வுகள் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்யாவின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி காணப்படுகிறது.. பேச்சு குறைவு செயல் அதிகம் என்பது போல ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.. முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத்..…
Read Moreஹார்டின் – விமர்சனம்…
கதை… ஜெய்ப்பூரில் கதை தொடங்குகிறது.. தன் நண்பர் மணியுடன் தமிழ்நாட்டு சுவையுடன் ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் சனந்த்.. அங்கு உணவருந்தும் வாடிக்கையாளராக வருகிறார் நாயகி இமையா.. நாயகனின் திறமையை கண்டு ஒரு கட்டத்தில் காதலிக்கிறார் காதலி.. லவ் வெளிப்படுத்தும் போது நாயகன் ஏற்கனவே நான் காதல் வலியில் இருக்கிறேன்.. உன்னை என்னால் காதலிக்க முடியாது என மறுக்கிறார்.. கல்லூரி நாட்களில் மடோனாவை காதலித்ததை சொல்கிறார்.. ஆனால் அவள் என்னை பிரிந்து விட்டாள் என்றும் சொல்கிறார்.. முதலில் மறுக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் இமையாவின் காதலை ஏற்று இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய தயாராகி வருகிறார்கள்.. அந்த சூழ்நிலையில் நாயகனுக்கு திடீரென விபத்து ஏற்படுகிறது.. அப்போது கிட்டத்தட்ட கடந்த 5-6 வருடங்களில் நடந்ததை மறந்து விடுகிறார்.. முன்னாள் காதலி மடோனாவின் நினைவு மட்டுமே அவருக்குள் இருக்கிறது……
Read Moreகான் சிட்டி – விமர்சனம்…
கதை… 1990 காலகட்டங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடக்கும் கதை இது.. மின்சார வாரியத்தில் கரண்ட் பில் வசூலிக்கும் அதிகாரியாக அர்ஜுன் தாஸ்.. இவரின் உயர் அதிகாரிகளாக வி டிவி கணேஷ் மற்றும் அருள்தாஸ். இவருக்கு இருக்கும் ஏகப்பட்ட கடன் தொல்லை பிரச்சினையால் பொதுமக்கள் கட்டும் கரண்ட் பில் தொகையை எவருக்கும் தெரியாமல் இரண்டு வாரங்களுக்கு ரொட்டேஷன் விட்டு அதன் மூலம் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் அர்ஜுன் தாஸ்.. மேலும் இந்தத் தொகையை வைத்து நண்பருடன் இணைந்து பிசினஸ் செய்கிறார். இது ஒரு பக்கம் இருக்க… வடிவுக்கரசி மற்றும் அவரது மகன் யோகி பாபு இருவரும் இணைந்து ஒரு டிரஸ் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து அர்ஜின் தாஸ் இடம் கொடுத்து முதலீடு செய்கின்றனர்.. அதுபோல மற்றொரு பக்கம் நாயகி அன்னா பென்…
Read Moreஅந்தரன் (HUNTER) – விமர்சனம்
கதை… நாயகி இவானா வருண்.. இவர் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனை காதலிக்கிறார்… திருமணம் வரை அந்த காதல் சென்றாலும் திடீரென அந்த இளைஞன் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. இதனால் திருமணமே வேண்டாம் என்று வெறுத்து வாழ்கிறார் இவானா.. வருடங்கள் செல்ல செல்ல உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என அப்பா வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்… அப்போது பார்க்கும் ஒரு பையனும் திடீரென தற்கொலை செய்து கொள்கிறான்.. அடுத்ததாக வேறு ஒருவரை பார்க்கும் போதும் அவரும் யாரோ ஒருவரால் கொலை செய்யப்படுகிறார்.. அப்படியானால் நாயகிக்கு எதிராக செயல்படுபவர் யார்? நாயகியை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ள முன் வந்தாலோ அவரை கொல்லும் கொலையாளி யார்.? என்பது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் பிரஜின்.. அவருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது..…
Read Moreஅங்கீகாரம் விமர்சனம்.. 4.5/5… மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்ற (அசால்ட்) வீரன்
கதை… நாயகன் கே ஜே ஆர் (ராஜேஷ்).. ஓட்டப்பந்தய வீரன்.. இவருக்கு ஒரு தங்கை.. அம்மா ரமா தூய்மை பணியாளர்.. தன் தலைமுறையோடு தூய்மை பணி முடிவு எட்டட்டும்.. நீ நம் தாயகத்திற்காக ஓடினால் மட்டுமே நம் குடும்பம் அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என தன் பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி வளர்க்கிறார்.. இதனால் கடும் பயிற்சிகளுக்குப் பிறகு பெரும் அற்பணிப்புடன் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு நேஷனல் லெவலில் செலக்ட் ஆகிறார் நாயகன் கே ஜே ஆர்.. ஒரு கட்டத்தில் காலில் அடிப்படவே இவரால் ஓட முடியாத சூழ்நிலை.. அப்பொழுது காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இவர் விண்ணப்பம் செய்கிறார்… ஆனால் விபத்து காரணமாக உன்னால் கலந்து கொள்ள முடியாது என்று உயர் அதிகாரிகள் இவரை அனுமதிக்கவில்லை.. ஆனால் வாய்ப்பு கொடுங்கள் நான் நிரூபித்து…
Read Moreமக்கள் தலைவா விமர்சனம்.. அரசியல் நையாண்டி கலாட்டா
கதை… ரவி மரியா… ஊரைக் காக்க உருவான சங்கம் அது நாங்க இல்ல என்பது போல… ஊர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ரவி மரியா அரசியல்வாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்த பிரச்சினையை பற்றி பேச மாட்டார்.. இப்படியாக பணம் பார்த்து வசதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்.. ஒரு கட்டத்தில் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கியதால் ஒரு ஆட்டோக்காரர் பிரச்சினை செய்கிறார்.. இந்தப் தொடர்பான வீடியோ ரவிக்கு கிடைக்க அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தமிழ்நாடு முழுக்க பிரபலம் அடைகிறார்.. இவரின் சாமர்த்தியத்தை பார்க்கும் கார்ப்பரேட் முதலாளி ராதாரவி நீ அரசியலுக்கு வா உனக்கு பின்புலமாக நான் இருக்கிறேன்.. என்று சொல்லி பெட்டி பெட்டியாக பணம் கொடுக்கிறார்.. அரசியல் ஆசை கண்ட ரவி மரியா உள்ளே வெளியே என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார்.…
Read Moreநூறு சாமி விமர்சனம்.. – அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்[4.5/5]
கதை… 2019 ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சசி.. நாயகி ஸ்வாசிகா.. கணவரை இளம் வயதிலேயே இழந்த இவருக்கு இரு மகன்கள்.. மூத்தவன் அஜய் திஷான்.. இரண்டாவது மகன் சக்தி.. மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ஆசிரியர் அருள்தாஸ் மூலமாக தன் மகனிடம் விருப்பத்தை கேட்கிறார் அம்மா ஸ்வாசிகா.. இளவயது மகன்கள் மறுக்கிறார்கள்… ஒரு கட்டத்தில் அவர்களுக்கு திருமண வயது எட்டிய போது அம்மாவின் மறுமணம் பற்றி யோசிக்கின்றனர்.. ஆனால் இப்போது அம்மா மறுக்கிறார்.. நீங்கள் மறுமணம் செய்ய வில்லை என்றால் நாங்களும் செய்து கொள்ள மாட்டோம் என்றும் மகன்கள் மறுக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா மகன்கள்.? எப்படி நடந்தது என்பதெல்லாம் சுவாரசியமான உணர்வுபூர்வமான திரைக்கதை.. நடிகர்கள்……
Read MoreBalan The Boy – பாலன் விமர்சனம்…
கதை…. நாயகி ஃபர்சானா பலதிங்கல்… இவரது 5 வயது மகன் ஆதிசேஷன் கே.ஆர்.. இருவரும் ஜெயிலில் இருக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் ஒரு பெண் உதவி மூலம் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் நாயகி.. எங்கு செல்வது.. எங்கு தங்குவது.. யாரிடம் உதவி கேட்பது என்ற எதுவும் தெரியாமல் அம்மாவும் மகனும் செல்கின்றனர்.. சிறையில் இருந்து வந்தோம் என்று சொன்னால் யாரும் வேலையும் தர மாட்டார்கள்… தங்க இடமும் கொடுக்க மாட்டார்கள் என்பதால் பெயரை மாற்றி பொய்கள் சொல்லி உதவி கேட்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் ஒரு வயதான பாட்டியை பார்த்துக் கொள்ள அம்மாவுக்கு வேலை கிடைக்கிறது.. அங்கிருந்து பாலன் படிக்கவும் பள்ளிக்கு செல்கிறார்.. அடையாள அட்டை எதுவும் இல்லாத சூழ்நிலையில் அதற்கும் சில திருட்டு வேலைகளை செய்ய வேண்டியதாகிறது.. ஒரு கட்டத்தில் அந்த வயதான பாட்டியும் இறந்து போக அந்த…
Read Moreஎங்கள் தங்கம் – விமர்சனம்
கதை… தெலுங்கில் உருவான ’மா இன்டி பங்காரம்’… இப்படத்தை தமிழில் ‘எங்கள் தங்கம்’ எனப் பெயரிட்டு வெளியிட்டுள்ளனர்.. நந்தினி என்பவர் இயக்க சமந்தா தயாரித்துள்ளார்.. ஒரு அனாதை ஆசிரமத்தில் தன் தோழியுடன் வளர்ந்த சமந்தா வளர்ந்து பெரியவர் ஆன பிறகு காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.. ஒரு கட்டத்தில் கணவரின் தங்கை திருமணத்திற்காக அவரின் சொந்த கிராமத்திற்கு செல்கிறார். (சமந்தா கேரக்டர் பெயர் ஸ்வர்ணா.) அப்போது வில்லன் குல்சன் கும்பல் ஒன்று சமந்தாவை தேடி நீ ஜான்சி தானே என்று கேட்டு அவரைக் கொல்ல திட்டமிடுகின்றனர்.. தான் ஜான்சியா சொர்ணா என்பது ஒரு பக்கம் இருக்க தன் கணவருக்கும் குடும்பத்திற்கு இது தெரியக்கூடாது என்பதற்காக சமந்தா போராடுகிறார்.. அப்படி என்றால் இவர் நிஜத்தில் யார்.? இவர் ஜான்சி என்றால் ஸ்வர்ணா என்ற பெயரில் கணவர் குடும்பத்தில் வர…
Read More
