நடிகர் R.K.சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடிக்குற்றசாட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர்  நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர், பாஜக நிர்வாகி என பன்முக தன்மை கொண்ட ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…. என் கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் எர்த்மூவர்ஸ் நடத்தி வந்தார். தொழிலில் எற்பட்ட இழப்பைச் சரி செய்ய 2018 ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கித் தருவதாக சென்னையில் உள்ள கமலகண்ணன் கூறினார். அதன் பேரில் திரைப்பட நடிகரான ஆர்.கே. சுரேஷை, கமலகண்ணன் எனக்கும் என் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஆர்.கே.சுரேஷ் தனக்குத் தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் எற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷனாக 1 கோடி கொடுக்கும்படியும் கூறினர். அவரை நம்பி…

Read More

தனுஷ்ன் அடுத்த நகர்வு என்ன?

அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை தனுஷ் முந்திவிடுவார் போல தெரிகிறது. அந்த அளவுக்கு மாதத்துக்கு ஒரு பட அறிவிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனுஷின் ஒவ்வொரு புது அறிவிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. சமீபத்தில், தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தனுஷுக்கு நீண்ட நாளாக தெலுங்கில் நடிக்க வேண்டுமென்பது ஆசை. இவரின் தாய்மொழி தெலுங்கு. ஆனால், தனுஷ் படங்கள் தெலுங்கில் பொதுவாக டப்பாகி வெளியாகும். இது, முதல் நேரடித் தெலுங்குப் படமாக உருவாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தியிலும் என PAN இந்தியா ரிலீஸாகப் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கிறது. நூறு கோடி பட்ஜெட்டில் படம் உருவாவதாகவும் தகவல். மேலும், தனுஷுக்கு அதிக சம்பளம் பெரும் படமாகவும் இது இருக்கும்…

Read More

கைபேசியில் கதைசொல்லி மோகன்லாலிடம்கால்ஷீட் வாங்கிய இயக்குனர்

மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் மலையாள நடிகர் பிருத்விராஜ். இந்த படத்தின் 2ம் பாகம் இயக்கும் நோக்கத்துடன்தான் படத்தின் கதையை முடித்திருந்தார். இரண்டாம் பாக கதை வெளிநாட்டில் நடப்பதால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படத்தை தொடங்க முடியவில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து புரோ டாடி என்ற படத்தை இயக்குகிறார். இது மிகவும் ஜாலியான படம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவில் கொண்டாட்டமான, ஜாலியான படங்கள் வெளிவந்து ரொம்ப காலமாகி விட்டது. அதுமாதிரியான படங்களுக்கு நிறைய நடிகர்கள், சிரிப்பு, சந்தோஷம், நகைச்சுவை, இசை என்றெல்லாம் யோசிக்கும்போது, அய்யோ இது பெரிய படம், நிறைய இடங்களில், நிறைய மனிதர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று யோசிப்போம். எனவே அதை ஒதுக்கி வைத்துவிடுவோம். அதனால்தான் மலையாளப் படங்கள்…

Read More

போனி கபூரின் மொழி மாற்று மோகமும் தொலைநோக்கு பார்வையும்

இந்திய சினிமாவில் எந்த திட்டமிடலும் இல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழிகளில் வெற்றிபெற்ற, அல்லது படைப்புரீதியாக பாராட்டுக்களை பெற்ற படங்களின் மொழிமாற்று உரிமையை பைனான்சியர்கள், பிரபல தயாரிப்பாளர்கள் வாங்கும் வழக்கம் நீண்டகாலமாக உள்ளது  ஒரு படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கும்போது நிதி நெருக்கடி ஏற்படும் அந்த நிலையில் மொழிமாற்று உரிமை, தொலைக்காட்சி உரிமைகளை விற்பனை செய்யவேண்டிய சூழல் தயாரிப்பாளருக்குஏற்படும் அப்போது முடிந்தவரை குறைந்த விலைக்கு அந்த உரிமையை வாங்க பைனான்சியர்கள், தயாரிப்பாளர்கள் முயற்சி எடுப்பார்கள் தனுஷ் நடித்து வெளியான ” துள்ளுவதோ இளமை” படம் திட்டமிட்ட அடிப்படையில் வெளியிடுவதற்கு நிதி நெருக்கடி அப்போது அந்தப் படத்தை ஒரு படமாகவே மதிக்கவில்லை இருந்தபோதிலும் அப்படத்தின் மொழிமாற்று உரிமையை இரண்டு லட்ச ரூபாய்க்கு முதல்வன் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மாதேஸ் வாங்கினார் அந்தப் படம் வெளியாகி பாக்ஸ்ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியது…

Read More

ஷங்கர் மகள் திருமணமும் முதல்அமைச்சரின் பெருந்தன்மையும்

தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றபிறகு ஆட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது.அது மட்டுமல்ல அரசியல் நாகரிகத்தில், தன்னை ஜென்ம விரோதியாக பார்ப்பவர்களிடத்திலும் மு.க.ஸ்டாலின் அணுகுமுறை எதிரிகளையும் வெட்கப்பட வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை கடுமையாக விமர்சிக்கப்படும் கட்சி திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைவர்களை காட்டிலும் மு.க.ஸ்டாலினை தன் தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக கழுவி ஊற்ற தவறவில்லை சீமான் அந்த ஈரம் காய்வதற்குள் அவரது தந்தை காலமானார் அந்த செய்தியறிந்த மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவர், முதல்வர் என்கிறமுறையில் அனுதாபச்செய்தி வெளியிட்டதே போதுமானது அதிகபட்சமானது ஆனால் அதையும் கடந்து சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துக்கத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது…

Read More

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் இன பிரச்சினையை கிளப்பிய நடிகர்கள்

தெலுங்கு திரையுலகின் நடிகர் சங்கத்திற்கு இந்தாண்டு தேர்தல் நடத்தப்படவுள்ளது. Telugu Movie Artistes Association எனப்படும் தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தற்போது அங்கே நடிகர் நரேஷின் தலைமையில் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  செப்டம்பர் மாதம் சங்கத்திற்கு புதிதாகத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் முதல்நபராக அறிவித்தார்.  தனக்கு நடிகர்சிரஞ்சீவியின் ஆதரவும் இருப்பதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில்மூத்த நடிகரான மோகன் பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தானும் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பையூட்டினார். ஏனெனில் கடந்த இரண்டு முறைகளும் நடிகர் சங்கத்தில் பலத்த போட்டிகள் ஏற்பட்டு பலவித சர்ச்சைகள் எழுந்தன. இதனால் இந்த முறை அப்படி…

Read More

திரையரங்குகளை திறக்க அனுமதியுங்கள் தமிழ்நாடு அரசுக்கு பாரதிராஜா வேண்டுகோள்

தமிழக அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் சூழ்நிலையில் திரைப்படத்துறையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது இதற்கு நன்றி தெரிவித்துள்ள மூத்த இயக்குநரும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம். நம் மண்ணின் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள்… கொரோனா காலகட்டத்திலும் தீவிர செயலாற்றி அதன் எண்ணிக்கையை உதிர்த்தது,  தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பெடுக்கும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவே இரசிக்கிறோம். சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் துறைசார்ந்த அரசு இயந்திரத்திற்கும் எம் நன்றிகள். கட்டுப்படுத்தப்பட்ட இக்கொரோனா காலகட்டத்திலிருந்து மக்கள் இயல்பை நோக்கித் திரும்ப கவனமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் வேளையில் திரைத்துறையும் மீள தளர்வுகள்…

Read More

நடிகர் விஷால் புகாருக்கு ஆர்.பி.சௌத்ரி நீண்ட விளக்கம்

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பஞ்சாயத்து செய்திகள் தமிழ் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வந்தது இந்த நிலையில் உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து ஆர்.பி.சௌத்ரி நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்…. மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் விஷால் இரும்புத்திரைபடம் தயாரிக்க என்னிடம் பைனான்ஸ் வாங்கியிருந்தார் அந்த படத்திற்கு நானும் விநியோகஸ் திருப்பூர் சுப்பிரமணியும் சேர்ந்து பணம் கொடுத்தோம் இரும்புத்திரைபடம் வெளியீட்டில் விஷால் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் பாதி தொகையை சில தவணைகளில் கொடுப்பதாக கூறினார் நானும்‌ ஒரு தயாரிப்பாளர்‌ என்ற முறையில்‌ படம்‌ வெளியாக வேண்டுமென்று ஒப்புக்கொண்டு கிளியரன்ஸ் கொடுத்தேன்‌. இறுதியாக இருந்த பாக்கி தொகையை அவர்‌ தயாரித்து நடிக்கும்‌ ‘சக்ரா திரைப்படத்தின்‌ வெளியீட்டில்‌ தருவதாக கூறியிருந்தார்‌. சக்ரா படத்தின்‌ வெளியீட்டின்‌…

Read More

மணி இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்ககூடாது-நடிகர் சத்யராஜ்

தமிழ்சினிமா எத்தணையோ படைப்பாளிகளைக் கடந்து வந்திருக்கிறது அப்படிப்பட்ட படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்ததால் மனதில் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட படைப்பாளிகளில்ஒருவரான மணிவண்ணன் நினைவுதினம் இன்று எல்லோருக்கும் ஒரு அரசியல்  கொள்கை இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில்வெளிப்படுத்துவது இல்லை.வேறு சிலரோ தமது தொழிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன் 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தலையில் கொம்பு முளைத்ததும் இல்லை, தோல்வியின் போதும்…

Read More

விஷாலின் வேடிக்கையான புகாரும் உண்மைநிலவரமும்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால் கிருஷ்ணன்இவர்,விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார் இதற்காக தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் வாங்கியுள்ளார்பின்னர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரங்களைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் நேற்று (9.06.2021) புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஊரடங்கு காரணமாக கடந்த ஒருவருட காலமாக ஊடகங்களில் விஷால் என்கிற நடிகர் காணாமல் போயிருந்தார் ஏற்கனவே தனது அலுவலக பெண் ஊழியர் பணமோசடி செய்தார் என போலீசில் புகார் செய்து…

Read More