கோவைக்குவிருந்தாளியார்? கமலுக்குவானதி சீனிவாசன் கேள்வி

கொங்கு மண்டலத்துடன் என்னுடைய தொடர்பைப் பிரித்துக் காட்டக் கமல் முயன்றால் நிச்சயம் அதில் தோல்வி அடைவார் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒரு பகுதியாக இருக்கிறது. முதன்முதலாகச் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இருவரும் மக்களை நேரடியாகச் சந்திப்பது , பரப்புரை மேற்கொள்வது என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கமலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகச் சிறிது ஓய்விலிருந்தார். இதை அறிந்த வானதி சீனிவாசன், கோவை பகுதிக்கு, விருந்தினராக வந்திருக்கும் கமல்ஹாசன் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி பழ…

Read More

மந்திரி வேண்டுமா – எம்.பி வேண்டுமா பாஜக அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தலோடு கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. கொரோனா பாதிப்பால் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமார் கடந்த வருடம் காலமானார். இதையடுத்து குமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் சட்டமன்றத் தேர்தலோடு நடக்கிறது. பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், இத்தொகுதியில் எட்டுமுறைக்கு மேல் போட்டியிட்டவருமான பொன்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார். காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இங்கே பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில், “ஏற்கனவே தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அத்தனை எம்பிக்களையும் கொடுத்துவிட்டீர்கள். அதனால் தமிழகத்துக்கு என்ன பயன்? இந்த முறை புத்திசாலித்தனமாக யோசித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள். அதனால் கன்னியாகுமரிக்கும் தமிழகத்துக்கும் மோடி அமைச்சரவையில் ஒரு மத்திய அமைச்சர் கிடைப்பார். உங்களுக்கு வெறும் காங்கிரஸ்…

Read More

அதிமுகவில் இருந்துயார் சென்றாலும் கட்சிக்கு பாதிப்பு இல்லை-ஒபிஎஸ்

அதிமுக என்பது ஒரு ஆலமரம். இதிலிருந்து யார் சென்றாலும் பாதிப்பு இல்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு உறுதுணையாக ஆதரவாக நின்றவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொண்டார். இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்  (மார்ச் 21) மதுரை வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரிடம், தர்ம யுத்தத்தின் போது உங்களுக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.முத்துராமலிங்கம் அதிமுகவிலிருந்து விலகியதற்குக் காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மிகப்பெரிய…

Read More

சொத்துமதிப்பை பாகம் பிரித்த நடிகர் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை அவர் நேற்றைக்குத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனு பட்டியலுடன் தன்னுடைய சொத்துப் பட்டியலையும் இணைத்திருக்கிறார். அதன்படி, மன்சூர் அலிகான் கையில் ரொக்கமாக 50,000 ரூபாய் வைத்திருக்கிறார். அவருடைய மனைவிகள் இருவரும் தலா 25,000 ரூபாய் வைத்திருக்கிறார்கள். அவருடைய பிள்ளைகள் இருவர் தலா 5,000 ரூபாய் வைத்திருக்கிறார்கள். மன்சூர் அலிகான் தனது 2 சேமிப்புக் கணக்குகளிலும் சேர்த்து 12,810 ரூபாய் வைத்திருக்கிறார். அவருடைய மனைவி 1,071 ரூபாய் வைத்திருக்கிறார். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காரும், 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இன்னொரு காரையும் மன்சூர் அலிகான் வைத்துள்ளார். அவருடைய இரண்டு மனைவிகளும் 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 400 கிராம்…

Read More

உதயநிதி ஸ்டாலின் சொத்துமதிப்பு என்ன?

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலினின் மகனும், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்பு மனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தனது சொத்துப் பட்டியலையும் இணைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு 28 கோடியே 82 லட்சமாகும். உதயநிதியின் பெயரில் 21 கோடியே 13 லட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 736 ஆகும். தற்போது உதயநிதியின் கையில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும், மொத்த…

Read More

அதிமுகவில் நீக்கப்படாத விராலிமலைசுயேச்சை வேட்பாளர்

அதிமுகவில் ஆங்காங்கே சுயேச்சையாக போட்டியிடும் போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். பெருந்துறையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், தொடர்ந்து இருமுறை எம்.எல்.ஏ.வாக இருப்பவருமான தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து விராலிமலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் நெவளிநாதன் மீது இன்னும் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே மார்ச் 18 ஆம் தேதி விஜயபாஸ்கரை எதிர்த்து மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் விராலிமலை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தனித்தனியே கடிதமும் எழுதியிருந்தார். அதில், “கட்சிக்…

Read More

தினகரன் வெல்ல நினைக்கும் தொகுதிகள்

எங்கள் கூட்டணிதான் முதன்மையான கூட்டணி என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் சொல்லிவருகிறார். அதேநேரம் உட்கட்சியில் அவர் நடத்திவரும் ஆலோசனையில், ‘நாம் அதிகபட்சம் எவ்வளவு தொகுதிகளில் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம்.ஆனால் குறைந்தது பத்து தொகுதிகளாவது ஜெயிக்க வேண்டும்’என்று ஆணையிட்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் அலசி ஆராய்ந்து டாப் டென் தொகுதிகளைத் தேர்வு செய்தவர் 2021இல் குறைந்தபட்சம் பத்து எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்றத்தில் அமரவேண்டும் என அனைத்து விதமான வேலைகளையும் செய்துவருகிறார். அந்த தொகுதிகள்… 1. கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராகத் தினகரன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு, கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சீனிவாசன் களத்தில் உள்ளார், 2. பாபநாசம் அமமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ, ரங்கசாமி, அதிமுக வேட்பாளராகக் கோபிநாதனும், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரும்…

Read More

கமல்ஹாசன் நல்லவரா – கெட்டவரா

அரசியல் என்று வந்து விட்டால், நல்லவர், கெட்டவர் அனைவரையும்தான் அணைத்துப் போக வேண்டி இருக்கும். நல்லவர்களுக்காக மட்டுமே, நல்லவர்களைக் கொண்டு கட்சி நடத்துவது என்பதெல்லாம் கற்பனையிலும் நடக்காத விஷயம். அரசியலுக்கு வந்த பின், கமலுக்கு இது புரிய ஆரம்பித்திருக்கும். அல்லது அவர் புரிந்து கொண்டே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இப்போது நடக்கும் சில விஷயங்கள், கமலைப் பார்த்து மக்களே ‘நீங்க நல்லவரா, கெட்டவரா’ என்று கேட்க வைப்பதுதான் காலத்தின் கோலம். 2018 பிப்ரவரி 1 அன்று, மதுரை ஒத்தக்கடையில் கமல் கட்சி துவக்கியபோது, அவருடன் சேர்ந்தவர்களில் பலர் யாரும் அறியாதவர்கள். பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ் ஆளுமையுமான கு.ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, போலீஸ் அதிகாரி மவுரியாவைத் தவிர, வேறு யாரையும் அப்போது மக்களுக்குத் தெரியாது. துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் மகேந்திரன், மாணவர் நகலகம் செளரிராசன், நடிகர் நாசரின் மனைவி…

Read More

வாசிங் மெஷின் இருக்கட்டும் செல்போன் என்னாச்சு – மு.க.ஸ்டாலின்

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் வாஷிங் மெஷின் தருகிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் அமர்ந்த 2011, 2016 தேர்தல்களில் அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை பற்றி குறிப்பிட்டுப் பேசினார். அவர் பேசுகையில், “இப்போது அ.தி.மு.க.வின் சார்பில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அது அப்படியே தி.மு.க.வின் நகல். நாம் என்ன சொன்னமோ அதை அப்படியே கொஞ்சம் உயர்த்தி வெளியிட்டிருக்கிறார்கள். நான் கேட்கின்ற கேள்வி. இதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா? நான் சில உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் செல்போன் கொடுப்பேன்…

Read More

தொண்டாமுத்தூரில்வேலுமணி இறக்கிய ஸ்லிப்பர் செல்கள்

கட்சி வேலையானாலும், தேர்தல் வேலையானாலும் அமைச்சர் வேலுமணிக்கு நிகர் அவரேதான். மிரட்டிவிடுவார் மனிதர். அவருடைய அசாதாரணமான உயரமும், அசாத்தியமான துணிச்சலும் அவரைத் தனித்துக் காட்டும் அடையாளங்கள். தேர்தல் நேரத்தில் வேலுமணியின் வேலைகள் எப்படியிருக்கும் என்பது பற்றி, அதிமுக வட்டாரத்தில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் அறிந்த மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘வேலுமணிக்கு எந்த டிபார்ட்மென்ட்டில் அல்லது எந்தக் கட்சியில் எங்கே ஆளிருக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் அவருக்குப் போக வேண்டிய தகவல்கள் அவ்வப்போது போய்விடும். திமுகவில் மட்டுமில்லை; பாரதிய ஜனதாவில், ஐடி டிபார்ட்மென்ட்டில் என அவருக்கு வேலை பார்க்கும் ஸ்லீப்பர் செல்கள் இல்லாத இடமேயில்லை என்று சொல்லலாம். சென்ற தேர்தலில், திமுகதான் ஜெயிக்குமென்று எல்லா கருத்துக் கணிப்புகளும் முன்பே சொல்ல ஆரம்பித்த நிலையில், தன்னை எதிர்த்து திமுக கூட்டணியில் யார் போட்டியிட வேண்டுமென்பதையும் அவரே…

Read More