கதை…
அரசாங்க வேலைக்கு காத்திருக்கும் படித்த பட்டதாரி நாயகன் வெற்றி. குடிகார தந்தையால் வீட்டில் வறுமை வாட்டி எடுக்குறது..
இவர்களின் வீட்டு பத்திரம் வேறு கடனில் இருப்பதால் அடிக்கடி ஊர் பெரியவர் ரெட்டியார் கவிதா பாரதி மிரட்டி செல்கிறார்
அப்போது வேறு வழியின்றி நண்பருடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டு தொழில்களில் ஈடுபடுகிறார் வெற்றி..
அதே கிராமத்தில் வசிக்கும் பிரிகிடாவுடன் காதல் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.. இனிமேல் நீங்கள் திருட வேண்டாம் திருந்தி வாழலாம்.. கடைசியாக ஒரு முறை நம்முடைய வீட்டு பத்திரத்தை ரெட்டியாரிடம் இருந்து திருடி வாருங்கள் என கட்டளையிடுகிறார் காதல் மனைவி..
திருடு போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு நன்மைக்காக கொலை செய்து விடுகிறார் வெற்றி.. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கு தண்டனையும் விதிக்கப்படுகிறது..
அதன் பிறகு என்ன நடந்தது.? பிரிகிடாவின் வாழ்க்கை என்ன ஆனது.? அவர் ஜெயிலில் இருந்து திரும்பி வந்தாரா.? எதற்காக கொலை செய்தார்.? மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடிந்ததா? என்பதெல்லாம் நீதிக்கதை

நடிகர்கள்…
Vetri – Arivumathi
Rangaraj Pandey – Sivanandhan
Brigida Saga – Mallika
Maaran – Moorthy
Saravanan – Sargunam
Lizzie Antony – Soodamani
Aruvi Madhan – Velmurugan
Kanya Bharathy – Annam
Subramaniam Siva – Dharman
சிறை கைதி.. தூக்கு தண்டனை கைதி நாயகன் வெற்றி.. சிறையில் இருந்தபடியே தன் சிறை அனுபவங்களை புத்தகமாக எழுதி அதை பிரசுரிக்க சொல்கிறார்..
தூக்கு தண்டனைக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் சூழ்நிலையில் இவருக்கும் போலீஸ் ரங்கராஜ் பாண்டே இருக்கும் தூக்குத்தண்டனை குறித்து பெரிய விவாதமே நடக்கிறது..
ஒரு சிறை கைதி ஒரு திருட்டு குற்றவாளி.. உனக்கு எல்லாம் புத்தகமா? அதை ஏன் புத்தகமாக வெளியிட வேண்டும் என கேட்கிறார் போலீஸ் ரங்கராஜ் பாண்டே..
மரண தண்டனை கொடுக்கப்பட்டால் குற்றவாளி திருந்துவார்களா? மற்ற குற்றவாளிக்கு இதனால் பயம் வருமா.? அப்படி என்றால் இத்தனை வருடங்கள் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.. குற்றங்கள் குறைந்து விட்டதா.? என பல கேள்விகளை முன் வைக்கிறார் நாயகன் வெற்றி..

நான் கொலை செய்தது குற்றம் என்றால் நீங்கள் என்னை தூக்கில் போடுவதும் குற்றம் தான்.. ஒரு நாடு மற்றொரு நாடு மீது போர் தொடுப்பதும் குற்றம் தான்… எப்படி பார்த்தாலும் எல்லா இடத்திலும் உயிர் பலி ஆகிறது அதை எப்படி தீர்வாகும்? என கேட்கிறார் நாயகன்..
நான் என் பிழைப்புக்காக வாழ்வாதாரத்திற்காக திருடுகிறேன்.. பாலில் தண்ணீர் கலப்பதும் குற்றம் தான் தங்கத்தில் செம்பு சேர்ப்பதும் குற்றம் தான்..
அந்த வியாபாரிகள் குற்றம் செய்யவில்லையா என பல கேள்விகளை அவர் கேட்கும் போது நமக்கு பதில் சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது..
இப்படியான பல கேள்விகளுக்க பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் போலீஸ் ரங்கராஜ் பாண்டே.. இப்படியாக வசனங்கள் மூலம் படத்தின் பல காட்சிகளின் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்..
காதல் காட்சிகளில் வந்து நாயகனுக்கு கம்பெனி கொடுத்திருக்கிறார் பிரிகிடா.. வெற்றியின் அம்மாவாக லிசி ஆண்டனி..
குற்றவாளியை தூக்கில் போடும் நபராக சுப்பிரமணிய சிவா… மற்றொரு குற்றவாளியாக அருவி மதன்.. வட்டி ரெட்டியாராக கவிதா பாரதி ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சரியான விகிதத்தில் கொடுத்துள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள் …
Producer – KV Shabarreesh
Banner – 2M Cinemas, D Pictures
Co-Producer, Story, Director – Dayal Padmanabhan
Screenplay & Dialogue – Kavitha Bharathy
Dayal Padmanabhan
Music and Background Score – Darbuka Siva
DOP – M.V. Paneerselvam
Editor – Bhoopathy Vedhagiri
Lyrics – Bharathiyar
Bharathidasan
Dayal Padmanabhan
PRO: Rekha
Social Media: Chowdrey
பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. வெற்றி & பிரிகிடா காதல் காட்சிகளை அதிகப்படுத்தி இந்த சீரியஸ் படத்தில் கொஞ்சம் ரொமான்ஸ் சேர்த்து இருக்கலாம்…
தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்… நாம் பள்ளிக்கூடங்களில் படித்த பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்களை இந்தப் படத்தில் சேர்த்து நம்மை சிறந்த பாடல்களை கேட்க வைத்து விட்டார்…
குற்றவாளியை தூக்கில் போடுவதற்கு முன்பு அவரை ஒரு மருத்துவர் பரிசோதிக்க வேண்டும்… அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா? அப்படி என்றால் மருத்துவர் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும்.. இதுதான் குற்றவாளிக்கு மரண தண்டனை கைதிக்கு விதிமுறையாகும்..

ஆனால் ஒரு மருத்துவரின் செயல் என்பது ஒரு நோயாளியை ஒரு உயிரை காப்பாற்றுவது தான்.. ஆனால் கொலை செய்ய சொல்வது எப்படி நியாயமானது என தூக்குக் கயிற்றில் முன்னால் நின்று கேள்வி கேட்கிறார் நாயகன் வெற்றி..
பல வழக்குகளை முறையாக விசாரிக்காமல் தண்டனை கொடுக்கப்படுகிறது நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்..
அதெல்லாம் சரி லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்ற இந்த தலைப்பிற்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறீர்கள்… சுத்தமாக ஒரு சம்பந்தமும் இல்லை… எதற்காக இயக்குனர் தலைப்பு வைத்தார் ஒருவேளை நம்மை ஈர்க்க வேண்டும் என நினைத்தாரோ.? என்னவோ?
Lakshmi Kanthan Kolai Vazhakku movie review
