கதை… கர்நாடக இசை கலைஞர் மாமேதை ஒய் ஜி மகேந்திரன்.. இவர்தான் சாருகேசி.. இவரது மனைவி சுவாசினி இல்லத்தரசி. இவரது மகன் ராஜ ஐயப்பா.. தந்தை பிரபலமானவராக இருந்தாலும் அவரின் நிழலில் தான் வளரக்கூடாது என்பதில் மகன் தீவிரமாக இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இசைக் குழுவில் பாட வரும் ரம்யா பாண்டியனை காதலித்து வீட்டில் அப்பா அம்மாவுக்கு இவரே அறிமுகம் செய்து வைக்கிறார்.. தன் ஸ்டுடியோ சம்பந்தமாக பெங்களூர் செல்கிறார் ராஜ ஐயப்பா.. அப்போது வீட்டில் இருக்கும் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுகாசினியை 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை ரகசியத்தை சொல்லி மிரட்டுகிறார் ரம்யா.. இதனால் தான் சேர்த்து வைத்த கௌரவம் என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார் ஒய் ஜி மகேந்திரன்.. அப்படி என்றால் ரம்யா எந்த நோக்கத்துடன் மருமகளாக வந்தார்..…
Read Moreவள்ளுவன் – விமர்சனம்…
கதை… சென்னையில் வசிக்கிறார் நாயகன் சீனு.. ஒரு நாள் நாயகி ஆஸ்னாவே சந்திக்க காதல் கொள்கிறார்.. அதன் பிறகு அவருடன் இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது… அந்த கொலை செய்யப்பட்டவர்கள் உடலில் எல்லாம் திருக்குறள் வாசகம் எழுதி வைக்கப்படுகிறது.. இதனை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி பிரேம்.. திருக்குறளை எழுதி அதன் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறான் கொலையாளி.. அப்படி என்றால் அவன் கூலிக்கு வேலை செய்பவன் அல்ல.. அவன் யார் அவனின் நோக்கம் என்ன.? நாயகன் நாயகியின் பங்கு இந்த சமூகத்தில் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சேத்தன் சீனு – ஆஸ்னா சாவேரி.. சிறு வயது முதல் பெரியவர்கள் வரை இவர்களின் நட்பை வளர்த்து காதலர்களாக மாறியிருக்கின்றனர்.. நல்ல தோற்றம்…
Read Moreஆட்டி – விமர்சனம்…
கதை… 1975 காலகட்டங்களின் கதை.. தமிழகத்தில் ஒரு அடர்ந்த காடு.. அபி நட்சத்திரா அவரது காதலர் உள்ளிட்ட மலைவாழ் பகுதி மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.. அங்கு காவல் நிலையம் செயல்படாத நிலையில் அங்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் இசக்கி கார்வண்ணன்.. எந்த ஒரு வழக்கும் பதிவாகாத நிலையில் தினம் ஒரு வழக்கு வேண்டும் என சக போலீஸ்காரர்களுக்கு கட்டளையிடுகிறார்.. அப்போது அங்கு ஆசிரியர் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. அந்த ஆசிரியரை கொன்றவர் யார்.? இந்த அடர்ந்து காட்டுக்குள் அவருக்கு எதிரிகள் யார்.? அதன் பிறகு நடந்தது என்ன என்பதே மீதிக்கதை.. நடிகர்கள்… தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே போலீஸ் அதிகாரி ஆக நாயகனாக நடித்துள்ளார்.. போலீஸ் என்றால் சீரியஸாக இருக்க வேண்டும் என இயக்குனர் சொன்னாரோ என்னவோ படம் முழுவதும் கொஞ்சம் கூட சிரிக்காமல் வருகிறார்.. ‘அயலி’ புகழ் அபி…
Read MoreDouble Occupancy விமர்சனம்…
கதை… டபுள் ஆக்குபன்சி.. ஒரே உருவம் ஒரே நாளில் 12 மணி நேரம் ஆண் 12 மணி நேரம் பெண் என்று இருந்தால் எப்படி இருக்கும்.? இந்த லாஜிக் இல்லாத கதையை நம்ப வைக்கும் வகையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி.. போஸ் வெங்கட் & வினோதினி தம்பதிகளுக்கு கடவுள் அர்த்தநாரீஸ்வரர் அருளுடன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கிறார் சந்தோஷ் என்ற ரேஷ்மா. ரஜினியின் பிறந்தநாளில் இவர் பிறந்ததால் இவருக்கு ரஜினி என்று பெயர் வைக்கின்றனர்.. பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இவர்கள் வாழ்கின்றனர்.. பகலில் ஒருவர் வாழும் வாழ்க்கை இரவில் உள்ளவருக்கு தெரியாது… இரவில் வாழும் வாழ்க்கை பகலில் உள்ளவர்க்கு தெரியாது.. இப்படியான சூழ்நிலையில் இவர்கள் வாழ்ந்தது எப்படி.? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது எப்படி.? இவர்களின் லைப் ஜெயித்தது எப்படி என்பதெல்லாம் ஜாலியான…
Read MoreHabeebi ஹபீபி – விமர்சனம்..
கதை… பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஹிந்து மத கதைகளை பார்த்திருப்போம்.. புராண படங்களை பார்த்திருப்போம்… அதுபோல கிறிஸ்தவ மத சார்ந்த கதைகளையும் நாம் கண்டு ரசித்திருக்கிறோம்.. இதில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் வாழ்வியலை யதார்த்தமாக உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன்.. தென்காசி பகுதியில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் நாயகன் ஈஷா நாயகி மாளவிகா வசிக்கின்றனர்.. கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா.. கண்ணாடி வாப்பா என்ற கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்து வருகிறார்.. படிப்பு பெரிதாக ஏறவில்லை காரணம் நாயகி.. ஈஷாவுக்கு மாளவிகா மீது காதல்.. இவர்கள் ஒரே மதம் இஸ்லாமிய மதமாக இருந்தாலும் இவர்கள் வேறு சாதி என்பதால் இவர்களுக்கு காதலுக்கு பிரச்சினை வருகிறது… ஒரு கட்டத்தில் காதலியை பார்க்க சென்றபோது கையும் களவுமாக பிடிபடுகிறார்.. அதன் பிறகு இவரது வாழ்க்கை வேறு கட்டத்திற்கு மாறுகிறது… அதன்…
Read Moreமதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!
மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக இருந்து தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள “ஹபீபி” திரைப்படம் மூலம் அவர் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்ட ஈசா, தமிழ்நாடு மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் சென்னை கல்லூரி வாழ்க்கையில் உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் பல இடைக்கல்லூரி தங்கப் பதக்கங்களை கைப்பற்றி, இந்திய அளவிலான பல்கலைக்கழகப் போட்டிகளிலும் தொடர்ந்து இறுதிச்சுற்றை எட்டியுள்ளார். விளையாட்டுத் துறையில் பெற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மன உறுதியுடன் சினிமா துறையிலும் தனது பயணத்தைத் தொடங்கிய ஈசா, நடிகர் அமீர் நடித்த இயக்குநர் ஆதம் பாவா இயக்கிய…
Read Moreமுத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளின் பங்கேற்புடன் அரங்கேறிய விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு
‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க,…
Read More‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம்,…
Read Moreசத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம் … தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு, சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு…
Read Moreசாம் சி.எஸ். இசையில் மீனாட்சி இளையராஜா பாடல் வரிகள் மற்றும் குரலில் உருவாகியுள்ள ‘ராசாதி ராசா’ பாடலை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது
பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ராசாதி ராசா’ இன்று வெளியிடப்பட்டது. ‘கராத்தே பாபு’ படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் சாம் சி.எஸ். இசையில், மீனாட்சி இளையராஜா பாடல் வரிகள் மற்றும் குரலில் உருவாகியுள்ள ‘ராசாதி ராசா’ பாடலை வெளியிட்டுள்ளது. அழுத்தமான அரசியல் பாடலாக இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தின் இதர…
Read More