சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களாக மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் வடபழனி மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலையோரங்கள் மற்றும் தெருக்களில் வளர்க்கப்பட்டு வரும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும்…

Read More

மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு

தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு சென்னை — இந்தியத் துணைத் குடியரசுத் தலைவரிடமிருந்து வரப்பெற்ற அதிகாரப்பூர்வ பாராட்டுச் கடிதத்தையடுத்து, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநரும் சமகாலக் கவிஞருமான சீனு ராமசாமி தனது ஆழமான நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். துணைத் குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ கடிதத்தில், கலை, சமூகம் மற்றும் இலக்கிய உலகிற்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆற்றிவரும் பன்முகப் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, அவரது ‘சில பூக்கள்’ கவிதையை வெகுவாகப் புகழ்ந்துள்ள அவர், எவ்விதப் புகழையோ அங்கீகாரத்தையோ எதிர்பாராமல், தங்களது நற்செயல்களால் நறுமணம் பரப்பி, அமைதியான தார்மீகக் குணத்துடனும் சுயநலமின்றியும் வாழும் மனிதர்களை இக்கவிதை…

Read More

நடிகர்கள் ரவி மரியா, ராதாரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

ராம் தேவ் பிக்சர்ஸ் மற்றும் கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அப்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- ஆர் .சந்திரசேகரன் – டி. ராம்குமார் ஆகியோர்…

Read More

மாகிபூரில் வகுப்புகள் தொடங்கினாலும் கேள்விகள் பாடத்திட்டத்திற்கு அப்பால் உள்ளது!

காலை வணக்கம், மாணவர்களே! செய்தி தெரியுமா? மாகிபூருக்கு ஒரு புதிய ஆசிரியர் வருகிறார்! *15 ஜூன் 2026:* மணி அடிக்கும் முன்பே ஒரு கேள்வி மாகிபூர் முழுவதும் பேசுபொருளாகும் சுப்பு சாரின் வகுப்புக்கு உங்களை வரவேற்கிறோம். இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’, சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் (சுப்பு) என்ற நேர்மையான இளைஞரின் வாழ்க்கையை காட்டுகிறது. மாகிபூர் என்ற கிராமத்தில் செக்ஸ் எஜூகேஷன் ஆஃபிசராக வேலை கிடைத்ததும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அனுபவமின்றி பாடத்திட்டத்தையும், கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சூழலில் அங்கு செல்கிறார் சுப்பு. ஆனால் ஆர்வம்,…

Read More

ஃபீல் குட் படமான ‘சின்ன சின்ன ஆசை’யில் தம்பி ராமையா, காளி வெங்கட் சுவாரசியமான வேடங்களில் நடிக்கின்றனர்

பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘சின்ன சின்ன ஆசை’ திரையரங்குகளில் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது. காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஃபீல் குட் படமான ‘சின்ன சின்ன ஆசை’யில் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடிக்க,…

Read More

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS. நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மனதை வருடும் இசையையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பிறகும் அதன் தாக்கம்…

Read More

‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு மகிழ்ச்சியில் பிறந்தநாள் கொண்டாடிய தயாரிப்பாளர்!

ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்.ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல செயல் நிறைவு பெற்ற அந்த திருப்தியும் நிறைவும் இருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.அப்படி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் M.கார்த்திகேசன். ‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்த இவர், தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஒரு தயாரிப்பாளராக நடிகராக அறிமுகமான M. கார்த்திகேசன் முதன் முறையில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘அறுவடை’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக அவரே நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரேம்குமார்…

Read More

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும்  ஆசீர்வாதத்தையும் எங்கள் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். இந்த ரதயாத்திரையின் ஒரு பகுதியாக பல நகரங்களுக்கு பயணம் செய்ய…

Read More

சாருகேசி – விமர்சனம்…

கதை… கர்நாடக இசை கலைஞர் மாமேதை ஒய் ஜி மகேந்திரன்.. இவர்தான் சாருகேசி.. இவரது மனைவி சுவாசினி இல்லத்தரசி. இவரது மகன் ராஜ ஐயப்பா.. தந்தை பிரபலமானவராக இருந்தாலும் அவரின் நிழலில் தான் வளரக்கூடாது என்பதில் மகன் தீவிரமாக இருக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இசைக் குழுவில் பாட வரும் ரம்யா பாண்டியனை காதலித்து வீட்டில் அப்பா அம்மாவுக்கு இவரே அறிமுகம் செய்து வைக்கிறார்.. தன் ஸ்டுடியோ சம்பந்தமாக பெங்களூர் செல்கிறார் ராஜ ஐயப்பா.. அப்போது வீட்டில் இருக்கும் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுகாசினியை 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை ரகசியத்தை சொல்லி மிரட்டுகிறார் ரம்யா.. இதனால் தான் சேர்த்து வைத்த கௌரவம் என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார் ஒய் ஜி மகேந்திரன்.. அப்படி என்றால் ரம்யா எந்த நோக்கத்துடன் மருமகளாக வந்தார்..…

Read More

வள்ளுவன் – விமர்சனம்…

கதை… சென்னையில் வசிக்கிறார் நாயகன் சீனு.. ஒரு நாள் நாயகி ஆஸ்னாவே சந்திக்க காதல் கொள்கிறார்.. அதன் பிறகு அவருடன் இணைந்து சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது… அந்த கொலை செய்யப்பட்டவர்கள் உடலில் எல்லாம் திருக்குறள் வாசகம் எழுதி வைக்கப்படுகிறது.. இதனை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி பிரேம்.. திருக்குறளை எழுதி அதன் மூலம் இந்த சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறான் கொலையாளி.. அப்படி என்றால் அவன் கூலிக்கு வேலை செய்பவன் அல்ல.. அவன் யார் அவனின் நோக்கம் என்ன.? நாயகன் நாயகியின் பங்கு இந்த சமூகத்தில் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சேத்தன் சீனு – ஆஸ்னா சாவேரி.. சிறு வயது முதல் பெரியவர்கள் வரை இவர்களின் நட்பை வளர்த்து காதலர்களாக மாறியிருக்கின்றனர்.. நல்ல தோற்றம்…

Read More