உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!

சென்னை, ஜூன் 21, 2026: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பி்த்தனர். பிராண்ட் அவதார் மற்றும் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் இணைந்து வழங்கிய இந்த நிகழ்வில் இந்தியாவின் செல்வாக்கு பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தின் இசையை கொண்டாடப்பட்டது. ‘மொட்டமாடி மியூசிக்’ குழுவினர் அனிருத்தின் பிரபலமான பாடல்களை உற்சாகத்துடன் இசைத்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு அந்த மாலைப்பொழுது தொடங்கியது. டிஜே தீபிகா தனது துள்ளலான இசை மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ‘ராக்ஸ்டார்’ அனிருத் வருகைக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அனிருத் மேடைக்கு வந்தார்.…

Read More

மக்கள் தலைவா விமர்சனம்.. அரசியல் நையாண்டி கலாட்டா

கதை… ரவி மரியா… ஊரைக் காக்க உருவான சங்கம் அது நாங்க இல்ல என்பது போல… ஊர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ரவி மரியா அரசியல்வாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்த பிரச்சினையை பற்றி பேச மாட்டார்.. இப்படியாக பணம் பார்த்து வசதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்.. ஒரு கட்டத்தில் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் பாட்டிலுக்கு வாங்கியதால் ஒரு ஆட்டோக்காரர் பிரச்சினை செய்கிறார்.. இந்தப் தொடர்பான வீடியோ ரவிக்கு கிடைக்க அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தமிழ்நாடு முழுக்க பிரபலம் அடைகிறார்.. இவரின் சாமர்த்தியத்தை பார்க்கும் கார்ப்பரேட் முதலாளி ராதாரவி நீ அரசியலுக்கு வா உனக்கு பின்புலமாக நான் இருக்கிறேன்.. என்று சொல்லி பெட்டி பெட்டியாக பணம் கொடுக்கிறார்.. அரசியல் ஆசை கண்ட ரவி மரியா உள்ளே வெளியே என்ற கட்சியை தொடங்கி அதன் மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார்.…

Read More

கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் மதன்  பேசியதாவது.., “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம். இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரையே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால் படம் அதைவிட இன்னும் சிறப்பாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்.…

Read More

ராகிங் ஸ்டார் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம், உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான தந்தை-மகன் உறவை கொண்டாடும் போஸ்டராக இல்லாமல், இந்த போஸ்டர் பதற்றம், அதிகாரம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களால் நிரம்பிய ஒரு உறவை சுட்டிக்காட்டுகிறது. சாதாரண ரிலீஸ் தேதி அறிவிப்பாக இல்லாமல், முரண்பட்ட உணர்வுகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் ‘டாக்ஸிக்’ உருவாக்கி வரும்…

Read More

ஆறு தலைமுறைகளின் பெயர்களை பட்டியலிட்டு, ஆகப் பெரும் அரசியல் தலைமைகள், நீதி அரசர்கள், கல்வியாளர்கள், திரைத்துறை ஆளுமைகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்ளும் இயக்குனர் வ.கௌதமன் மகள் திருமணம்

கனவே கலையாதே, மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமானவர் வ.கௌதமன். மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா இரண்டு படங்களில் நாயகனாகவும் நடித்திருப்பவர். இவர் சின்னத்திரையில் இயக்கிய ஆட்டோ சங்கர், சந்தனக்காடு, காயிதம் ஆகிய தொடர்கள் மாபெரும் கவனம் ஈர்த்த படைப்புகள். வ.கௌதமன்-மல்லிகா தம்பதியர்களின் மகள் கௌ.பரஞ்சோதி பி.காம்.,எம்பிஏ., அவர்களுக்கும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு தொழிலதிபர் க.கண்ணன்-சம்பாவதி தம்பதியர்களின் மகன் க.குணாநிதி பி.ஆர்க்., அவர்களுக்கும் வருகின்ற 24.06.2026 புதன் மாலை வரவேற்பு நிகழ்வும் மறுநாள் 25 ஆம் தேதி காலை 7.35 முதல் 9 மணிக்குள் புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் திருமணமும் நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்வில் இன்றைய அரசியலின் ஆகப்பெறும் தலைவர்கள், முன்னாள் இந்நாள் நீதி அரசர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள், கல்வியாளர்கள், திரை துறை ஆளுமைகள் மற்றும் தொழிலதிபர்கள்…

Read More

நூறு சாமி விமர்சனம்.. – அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்[4.5/5]

கதை… 2019 ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சசி.. நாயகி ஸ்வாசிகா.. கணவரை இளம் வயதிலேயே இழந்த இவருக்கு இரு மகன்கள்.. மூத்தவன் அஜய் திஷான்.. இரண்டாவது மகன் சக்தி.. மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ஆசிரியர் அருள்தாஸ் மூலமாக தன் மகனிடம் விருப்பத்தை கேட்கிறார் அம்மா ஸ்வாசிகா.. இளவயது மகன்கள் மறுக்கிறார்கள்… ஒரு கட்டத்தில் அவர்களுக்கு திருமண வயது எட்டிய போது அம்மாவின் மறுமணம் பற்றி யோசிக்கின்றனர்.. ஆனால் இப்போது அம்மா மறுக்கிறார்.. நீங்கள் மறுமணம் செய்ய வில்லை என்றால் நாங்களும் செய்து கொள்ள மாட்டோம் என்றும் மகன்கள் மறுக்கின்றனர்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா மகன்கள்.? எப்படி நடந்தது என்பதெல்லாம் சுவாரசியமான உணர்வுபூர்வமான திரைக்கதை..   நடிகர்கள்……

Read More

Balan The Boy – பாலன் விமர்சனம்…

கதை…. நாயகி ஃபர்சானா பலதிங்கல்… இவரது 5 வயது மகன் ஆதிசேஷன் கே.ஆர்.. இருவரும் ஜெயிலில் இருக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் ஒரு பெண் உதவி மூலம் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் நாயகி.. எங்கு செல்வது.. எங்கு தங்குவது.. யாரிடம் உதவி கேட்பது என்ற எதுவும் தெரியாமல் அம்மாவும் மகனும் செல்கின்றனர்.. சிறையில் இருந்து வந்தோம் என்று சொன்னால் யாரும் வேலையும் தர மாட்டார்கள்… தங்க இடமும் கொடுக்க மாட்டார்கள் என்பதால் பெயரை மாற்றி பொய்கள் சொல்லி உதவி கேட்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் ஒரு வயதான பாட்டியை பார்த்துக் கொள்ள அம்மாவுக்கு வேலை கிடைக்கிறது.. அங்கிருந்து பாலன் படிக்கவும் பள்ளிக்கு செல்கிறார்.. அடையாள அட்டை எதுவும் இல்லாத சூழ்நிலையில் அதற்கும் சில திருட்டு வேலைகளை செய்ய வேண்டியதாகிறது.. ஒரு கட்டத்தில் அந்த வயதான பாட்டியும் இறந்து போக அந்த…

Read More

அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் ‘பிரம்ம கமலம்’ என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்… அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை. கற்பனைக்கு எட்டாத-  கற்பனை செய்து பார்த்திட இயலாத-  சக்திகளை பெறுவதற்காக…

Read More

*அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது*

அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் ‘பிரம்ம கமலம்’ என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்… அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை. கற்பனைக்கு எட்டாத-  கற்பனை செய்து பார்த்திட இயலாத-  சக்திகளை பெறுவதற்காக…

Read More

எல்.வி ஸ்டுடியோஸ் ஆட்மாஸ் மிக்ஸ் தியேட்டர் சென்னையில் தொடங்கப்பட்டது

பிரபல இசையமைப்பாளர் மறைந்த எல். வைத்யநாதனின் மகன்கள் எல்.வி முத்து கணேஷ் (இசையமைப்பாளர்கள்) சென்னையில் புதிய பதிவு மற்றும் ஹைப்ரிட் மிக்சிங் ஸ்டுடியோவைத் தொடங்கியுள்ளனர். துப்பாக்கி முனை, மதில், ஆயன மனே, மாரிகல்லு, ராட்சசா, பூச்சம்மா, காந்தாரி போன்ற புகழ்பெற்ற படைப்புகளுக்கு தற்போதைய இசையமைப்பாளர்களாக எல்.வி முத்து கணேஷ் உள்ளனர். எல்.வி ஸ்டுடியோஸ் சென்னையில் அதிநவீன பதிவு ஸ்டுடியோ வசதியைத் திறக்கிறது, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு மற்றும் கே.டி. குஞ்சுமோன் தொடங்கி வைத்தனர். ஆடியோ போஸ்ட் புரொடக்ஷனுக்கான முன்னணி இடமான எல்.வி ஸ்டுடியோஸ், தனது கிராண்ட் ஓபனிங்கை பெருமையுடன் அறிவிக்கிறது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் திறப்பு விழாவை நடத்தினார். எடிட்டர் பி. லெனின் மற்றும் ஜீ…

Read More